Avasaramana Ulagam Poem By Nagoor pitchai அவசரமான உலகம் கவிதை - சா. நாகூர் பிச்சை

அவசரமான உலகம் கவிதை – சா. நாகூர் பிச்சை

அவசர உலகில் அனைவரும் அடைக்கலம்
அனுதின வாழ்வில் ஆசைகள் அமர்க்களம்

நாளும் காலம் கற்பூரமாய்க் கரையும்.
யாவும் தேடல் என்பதில் கிடைக்கும்

மனிதன்
அவசர அவசரமாய் வாழத் துடிக்கிறான்
அதைவிட விரைவாய் வாழ்வையும் முடிக்கிறான்

வாழ்க்கையை ருசியாய் வாழ்ந்திடவே
மனிதன் ஏனோ மறுக்கின்றான்

அவசர உணவைத் தேடுகின்றான்
அனுமதி நோய்க்குத் தருகின்றான்

வாகனம் எப்போதும் வேகத்தில்
விபத்து வந்தாலோ சோகத்தில்

திறமையை வளர்க்கும் வேகத்தில்
பொறுமையை இழக்கும் சோகத்தில்

திறமையும் பொறுமையும் சேராதா?
மனிதர்கள் வாழ்வே மாறாதா?