Uma Mohan Poetry in Tamil Language. Book Day is Branch of Bharathi Puthakalayam. உமா மோகன் கவிதை

உமா மோகன் கவிதை



நீதிக்குப்பின் பாசம்
பிரித்து வாசிக்கக் கற்றுக்கொண்டபின் வந்தவர்களின் பரிபாலனத்தில்
ஆலவட்டக்குடைகள் ஆரஞ்சு நிறத்தில்

கண்ணாடிக்குள் பதப்படுத்தி மிதக்கும்
கைகள் நீள வாய்ப்பில்லை
உறுதிப்படுத்திக்கொண்டபின் நீளும் கரங்களில்
ரத்தவாடை
தூக்குக்கயிற்றை
நீட்டிய குற்றரேகைகளை
ரூபாய்த்தாள்கள் கொண்டு துடைத்துக் கொள்கிறார்கள்
இரண்டெழுத்துதானே
நடுங்காமல் உறையில் எழுதப்படுகிறது “நீட்’டாக

உமா மோகன்

உமா மோகன் கவிதைகள்

உமா மோகன் கவிதைகள்

கவிதை 1 என்னை அண்ணாந்து பார்க்காதீர்கள் உங்கள் பாதையில் அன்றாடம் இரண்டு கண்ணிவெடி வைக்க வேண்டியிருக்கிறது உங்கள் ஊரில் அவ்வப்போது ஒரு வன்புணர்வு நடத்த வேண்டியிருக்கிறது உங்கள் சோற்றுத்தட்டில் ஒரு பிடி மண்ணோ சிறு துளி நரகலோ இட வேண்டியிருக்கிறது இல்லாவிடில்…