உயிர் துளியாகிறேன் கவிதை - சசிகலா திருமால் Uyir thuliyagiren kavithai - sasikala thirumal

உயிர் துளியாகிறேன் கவிதை – சசிகலா திருமால்


மனம் கொத்திப் பறவையாய்
மனதினைக் கொத்திக் கொத்தியே
உயிர் திருகும் வலியில்
என் உணர்வுகளைக்
கடத்திச் செல்கிறாய்…

உறங்கியும் உறங்காமலும்
இருக்கின்ற விடியலை
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கிறது
உந்தன் நினைவுகள்..
எந்தன் உடலெங்கும் வழிந்தோடும்
குருதி மட்டுமே உணரும்
உந்தன் ப்ரியமொழியின் குளிர்ச்சியினை..

இதோ இப்பொழுதும்
உந்தன் விரலிலிருந்து கசியும்
வார்த்தைகளில்
உயிர் துளியாகிறேன் நான்..