வ.சு.வசந்தாவின் ஹைகூ கவிதைகள்

வ.சு.வசந்தாவின் ஹைகூ கவிதைகள்




மாலையின் பூக்கள்
சிதறிக் கிடக்கின்றன
கடைசி யாத்திரை.

இன்று வந்தவன்
நாளையும் வருவான்
சூரியன்.

முகம்மதுவும் மரிய சூசையும்
மனம் விட்டு பேசும் இடம்
சிவன் கோவில் தெப்பக்குளம்.

காதில் நுழைந்தது
இதயத்தில் அமர்ந்தது
சிம்மாசனக் கவிதை.

கிளிகள் பேசிக்கொண்டன
பார்த்துக்கொண்டிருந்தன
பழங்கள்.

மண்ணின் வாசம்
தெரியும்
மழை.

நடவு நட்ட பெண்ணின்
காலில் இருப்பது சேறு
அவள் போடுவாள் சோறு.

தன் பசி மறந்து
தெரு நாய்க்குச் சோறு போடுவான்
ஏழைச் சிறுவன்.

பூவும் பிஞ்சுமாக காயும் கனியுமாக
விருந்து படைக்கும்
மரங்கள்.

ஆடி அரவணைத்து
அனைத்தும் தரும்
இயற்கை.

வ.சு.வசந்தா
9840816840
சென்னை_92

பேசும் புத்தகம் | கழனியூரன் சிறுகதைகள் *தாத்தா பாட்டி சொன்ன கதை* | வாசித்தவர்: வ.சு வசந்தா (Ss219)

பேசும் புத்தகம் | கழனியூரன் சிறுகதைகள் *தாத்தா பாட்டி சொன்ன கதை* | வாசித்தவர்: வ.சு வசந்தா (Ss219)

சிறுகதையின் பெயர்: தாத்தா பாட்டி சொன்ன கதை. புத்தகம் : தாத்தா பாட்டி சொன்ன கதைகள் ஆசிரியர் : கழனியூரன் வாசித்தவர்: வ.சு வசந்தா (Ss219)   [poll id="214"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது.…