பாவலர் வ.சு.வசந்தா எழுதிய "இயற்கையைக் காப்போம்" தமிழ் கவிதை | பாவலர் வ.சு.வசந்தாவின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிதை: இயற்கையைக் காப்போம் – பாவலர் வ.சு.வசந்தா

கவிதை: இயற்கையைக் காப்போம் இயற்கை அழகு எங்கும் பரவ செயற்கை வலியை சிதிலம் செய்வோம் மயக்கும் வனப்பு மனதில் நிலைக்க தயக்கம் தவிர்த்து தடைகள் களைவோம் மகிழ்வுடன் நெகிழி மனத்தைக் கவரும் பழகப் பழக பழையன மறக்கும் பண்டைய மரபு மறந்தே…
சஞ்சயன் செல்வமாணிக்கம் (Sanjayan Selvamanikkam) எழுதிய "ஒட்டகச்சிவிங்கியின் மொழி" (Ottakachivinkiyin Mozhi) - புத்தகம் ஓர் அறிமுகம்

சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய “ஒட்டகச்சிவிங்கியின் மொழி” – நூல் அறிமுகம்

"ஒட்டகச்சிவிங்கியின் மொழி" - நூல் அறிமுகம் ஒட்டகச்சிவிங்கி போன்று உயர்ந்த எண்ணத்தோடு தெளிவான சிந்தையோடு மனம் திறந்த விடயங்கள் கொண்டது இந்நூல். இலங்கை அகதியாக சஞ்சய் செல்வமாணிக்கம் சுற்றிய தங்கிய சந்தித்த மாந்தர்களை பற்றி இந்நூலில் கதை கதையாகப் பகிர்ந்துள்ளார். சிலவற்றை…
ஹைக்கூ மாதம்... வ.சு.வசந்தாவின் ஹைக்கூ Va.Su.Vasantha Haiku Poems

ஹைக்கூ மாதம் – வ.சு.வசந்தாவின் ஹைக்கூ

1. சிறகுகளை அடித்து நீரை உதறும் குருவி சாரல் மழை   2. தோளில் ஏறி கும்பிடு சாமி ஊர்வலம்   3. நீந்திப் பிடித்து விளையாடுகின்றன துரத்தி ஓடும் மீன்கள்   4. முனீஸ்வரனா கொள்ளிவாய் பிசாசா தூரத்து வெளிச்சம்…
Irai thedum paravai இரை தேடும் பறவை

வ.சு.வசந்தாவின் கவிதை : “இரை தேடும் பறவை”

இரை தேடும் பறவையே சபிக்காதே எங்கள் நிலத்தை இழந்து விட்டோம் கண்ணீரில் நனைந்து காலம் கடத்துகிறோம் நிலங்களை விற்றுத் தெருவில் நிற்கிறோம் நிற்பதற்கு நிழலும் இல்லை உறங்குவதற்கு வீடும் இல்லை ஒரு சாண் வயிற்றுக்கு ஓடித் திரிகிறோம் கண்ணிருந்தும் குருடரானோம் எங்களையறியாமலே…
Egandham Poem By Va Su Vasantha வ.சு.வசந்தாவின் ஏகாந்தம் கவிதை

ஏகாந்தம் கவிதை – வ.சு.வசந்தா




பாதையில் கிடந்த முள்
பதம் பார்த்தது எந்தன் காலை!
பக்குவமாய் அதை எடுத்து
பார்த்துப் பார்த்துப் பாதம் வைத்தேன்.

நித்திரையில் கண்டது
நிஜத்தில் அரங்கேறியது.
நேரம் காலம் பார்க்காமல்
நெடுந்தொலைவு நடந்து சென்றேன்.

எங்கே செல்வதென ஏதும் தெரியவில்லை!
எண்ணி எண்ணி மாய்ந்து விட்டேன்.
ஏழை துயர் தீர வில்லை.

கந்தல் ஆடையுடன்
கால் போன போக்கினிலே
காலமெல்லாம் நடந்திடுவேன்.
சொன்ன சொல்லை
நான் மறவேன்!

சொந்த பந்தம் ஏதுமில்லை;
சொத்து சுகம் எனக்கு வேண்டாம்.
தொந்தரவு செய்து என்னை
தொல்லைப் படுத்த வேண்டாம்!

மனத்தால் அழுகின்றேன்
பெற்றதை வெறுக்கின்றேன்!
பேதமில்லாமல்
பெருவாழ்வு வாழ்ந்து விட்டேன்.

சாதி மதம் பார்க்காமல்
சகோதரனாய் இருந்து விட்டேன்!
இப்படியே என் வாழ்வு
என்றைக்கும் தொடர்ந்துவரும்