மொழிபெயர்ப்பு கவிதை : திறந்த காயம் | தமிழில் – வசந்ததீபன்

மொழிபெயர்ப்பு கவிதை : திறந்த காயம் | தமிழில் – வசந்ததீபன்




திறந்த காயம்
*******************
நான் ஒரு திறந்த காயம்
யாரோ அதைச் சுத்தம் செய்கிறார்
யாரோ மருந்து போடுகிறார்
நான் எல்லாருடைய நன்றியுணர்வையும்
ஏற்றுக் கொள்ள முடியாது
ஆனால் நான் உணர்கிறேன்
உண்மையைச் சொன்னால்
அனுதாபம் பிடிக்கவில்லை எனக்கு.

திறந்த காயங்கள்
விரைவில் குணமாகும்
மூடப்பட்ட காயங்கள்
தாமதமாகக் குணமாகின்றன
ஆனால் திறந்த காயத்தை
பொத்தி வைத்திருக்க வேண்டியிருக்கிறது.

நான் சில சமயம் காதலை மறைக்கிறேன்
சில சமயம் மறைக்கிறேன்
நிறைய அனைத்துக் கனவை
சில சமயம் ஏதாவது என்னுடைய புலம்பும்
கவிதையையும் மறைத்துக் கொள்கிறேன்
ஆனால் ஒவ்வொரு கட்டுக்குள்ளும்
மூச்சுத்திணறும் காயம்
தொந்தரவு செய்கிறது
அது புதிய காற்றுக்காக துடிதுடிக்கிறது.

அன்பு , கனவுகள் மற்றும் கவிதை போன்ற
கட்டுகள் இருக்கின்றன
அவை பொத்தி வைக்கப்பட்டிருந்தாலே
திறப்பதில் சிரமம் செய்கின்றன
நான் இவற்றினால் எவர்ற்க்கும் பாதிப்பு
ஏற்படாமலிருக்க விரும்புகிறேன்
ஆனால் காயங்களின்
அலறல் ஏற்பட்டதும்
இவற்றின் இடங்களிலிருந்து நீக்கி
திறந்து வைக்கப்படுகிறது.

திறந்த காயம்
திறந்த நிலையில் இருக்க விரும்புகிறது
திறந்த காயம்
விரைவான சிகிச்சையை விரும்புகிறது
தன்னில் கட்டிவைக்கப்பட விரும்பவில்லை
மூடப்பட்ட காயங்கள் போல வருடக்கணக்கில்
வேதனைப்பட விரும்பவில்லை
அதை நோக்கியே நான் மன்னிப்பு கோருகிறேன்_
ஓ… என் அன்பே !
ஹே.. என் கனவுகளே!!
அட.. என் கவிதை !!!

உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற
அன்பின் மேல்
காயத்தை ஒட்டாதீர்கள்
உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
என் கனவுகள் சரியான வழியில் சென்றாலே
பொய்யான மறைப்பை உருவாக்காது
தூக்கிவிடும் தான் எனக்குள் வரை
உருவாக்கிக் கொண்டிருக்கும்
கவிதை ஒட்டு மொத்தம் போல
அது வாழ்வில் இருக்கிறது
விற்பனை அழைப்பு.

இந்த திறந்த காயம்
திறந்த காயமாகத்தான் இருக்கிறது
நிற்க புழுக்கள் உண்டாகா இதில்
அவை எப்போது தவற விட்ட பிறகும்
சுற்றிலும் அழுகின்றன
அதனால் அடங்காத பசியை
நான் உணர முடியும்.

அவற்றின் உயிரியல் நடத்தை
இருந்து கொண்டு இருக்கிறது
இறந்த பிறகு உடலை உண்ணும்
ஆனால் இப்போது வாழ்வும்
அவற்றின்
பசியில் அடங்கியிருக்கிறது
சிந்தனையற்ற மனிதம் அவற்றை
எதிர்த்து நிற்க முடியாது
அது வாழ்ந்து கொண்டு உண்ணப்படும்.

திறந்த காயங்கள்
மற்றும்
அழுகிற பூச்சிகளின்
இந்த பரவச விவகாரத்தில்
நான் எனது
எந்த கவலை குறித்துக்
கவலை கொள்வதில்லை
தமது கவலை பற்றி கவலைப்படுவது
தமது சித்தாந்தத்திற்க்கு எதிராக போகிறது.

தொடர்ச்சியான காயங்களால் தான்
இப்போது வரை வாழ்வு
பல கவனச்சிதறல்களில் இருந்து
காப்பாற்றப்பட்டு இருக்கிறது
இன்னும் எளிமையான ஒன்று இருக்கிறது
என் சொந்த உறுதியே வாழ்க.

என் இருப்பு ஒரு திறந்த காயமாகவே இருக்கிறது
ஆனால் அது எண்ணங்களால்
கட்டுப்பட்டு இருக்கிறது.

ஹிந்தியில் : ஷிரிஷ் குமார் மௌரியா
தமிழில் : வசந்ததீபன்

ஷிரிஷ் குமார் மெளரிய
பிறப்பு : 13 , டிசம்பர் 1973
இடம் : நாக்பூர்
முக்கிய படைப்புகள் :

(1) பாலா கதம்
(2) சந்தோஷ் கே ச்ஜூர்முட் மே ( இஸ்ரேலியக் கவிஞர் யேஹூதா ஆமிகாஈ யின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு )
(3) தந்த் கதா மற்றும் கவிதைகள்
(4) ப்ருத்வி பர் ஏக் ஜகஹ்

Vasanthadheepan poems வசந்ததீபனின் கவிதைகள்

வசந்ததீபனின் கவிதைகள்



(1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்

வழிபாடுகள் இடர்பாடுகள்
தொடருது துயர் பாடுகள்
ஆறு கடந்து போகிறது
காற்று கடந்து போகிறது
காலமும் கடந்து போகிறது
வாடிய மலர்கள் இயற்கைக்கு சொந்தம்
வாடாத மலர்கள் மனிதனுக்கு சொந்தம்
வாடியும் வாடாமலும் பூத்தபடி மலர்கள்
பாதைகள் நிறைய போகின்றன
ஊருக்குள் போகும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை
பாதைகளுக்கு முன்னால் நின்றிருக்கிறேன்
நெருப்பை தொட்டுப் பார்த்தான்
நெருப்பாயிருந்தது
நெருப்பு நெருப்பாய் இல்லாமல் வேறு எதுவாக இருக்கும்இருக்கும்
பெருங்கதையாடல்
பெருந்திணைப்பாடல்
பெருஞ்சூறையாய் வீசுகிறது
இழப்பதற்கு எதுவுமில்லை
பெறுவதற்கு ஏராளம் உள்ளது
அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிவோம்.
மழை பொழியட்டும்
மனங்களெங்கும்
மானுடம் செழிக்கட்டும்
விண்மீன்களை பார்க்கிறேன்
தேவதைகள் கண்கள் சிமிட்டுகிறார்கள்
சாமரம் வீசுகிறது காற்று
மவுனங்களுக்கும்
வார்த்தைகளுக்கும்
இடையே தீராத உரையாடல்கள்.

(2) இணக்கமற்ற பயணம்

எய்தவன் மனதில் இச்சை
அம்பின் நோக்கம் எதுவுமில்லை
அடிபடுபவையின் உயிரில் மரணவலி
கனவென்று எதுவும் கிடையாது
கனலும் நினைவுகள் உண்டு
பேரிரைச்சல் எழுப்பும்
காற்றாய் திரிய ஆசை
திருடனைப் போல வரும்
சூறைக் காற்றாய் அள்ளிப்போகும்
மரணத்தின் கால்களை அறிந்தவரில்லை
சிலையின் அருகில் போனேன்
சிலிர்ப்பாயிருந்தது
சிலைக்கும் இருந்திருக்குமாவெனத் தெரியவில்லை
உன் மிடறுக்குள் நான்
என் மிடறுக்குள் நீ
திகட்டாது காதல்
புழுவாய் நெளியாதே
பாம்பாய் சீறு
வெயில் உன்னை வருத்தாது.
நீ பூ நான் வாசம்
நான் பூ நீ வாசம்
நேசம் நீ நான் உன் வசம்
கண்கள் பேசுகின்றன
இதயம் மெளனிக்கிறது
என்னுள் காதலெனும் பெருங்கடல்
கனவுகள் என்னைத் தின்கின்றன
நான் மெளனமாயிருக்கிறேன்
என் மெளனம் அமைதியில்லை
படகை செலுத்துகிறேன்
மனது உடன் வர மறுக்கிறது
கூடு பிரிந்த பறவையாய்
நதியோடு போகிறேன்
நட்சத்திரங்கள் அழைக்கின்றன
நானும் ஒரு நட்சத்திரமாக ஆசை
பால் வெளியில் எங்கோ எவரறியாமல் ஜொலிக்கணும்
இருளுக்குள் ஒளியிருக்கும்
ஒளிக்குள் இருளிருக்கும்
இரண்டுக்கும் நடுவே
மனித வாழ்விருக்கும்
இலைகள் உதிர்கின்றன
தனிமை இசைக்கிறது
காற்று நாற்காலியில்
ஓய்வு கொள்கிறது
வசந்தம் வருகிறது
பூக்கள் பாடுகின்றன
கூண்டுக்குள் பறவை அழுகிறது
ஜனனம் போகிறது
மரணம் வருகிறது
திகைப்பாய் உலகம்
நினைத்துப் பார்க்கிறேன்
துக்கம் ஓடி வருகிறது
மனசை படாரென்று மூடுகிறேன்.

(3) தீராத புத்தகப் பிரதி

உன் கனவுகள் உன் வாழ்வு
இணையாத தண்டவாளங்கள்
சரக்கு ரயிலாக நீ
நீ என்ன நினைக்கிறாய் ?
நீ என்ன சொல்ல விரும்புகிறாய் ?
உனது மொழியில் உனது வார்த்தையில் எழுது
ஒரு வார்த்தைக்கு வன்மம்
தீயாய் சுட எத்தனிக்கிறாய்
எம் வாழ்வினை இத்தனைக்காலம் சிதைக்கும் உன்னை விட்டு விடமாட்டோம்
இதயங்களை கனவுகளால் நிரப்புவோம்
இன்மையின் ரணங்களை
கவிதைகளால் மருந்திடுவோம்
கனிகள் கிட்டும் காலம் வரும்
கலங்கிய குளத்தில் மீன்
கரையேற வழியில்லை
உயிர் வாழ வகையில்லை
கடவுளைத் தேடுங்கள்
தடுக்கவில்லை
கடவுளாய் நடிக்காதீர்கள்
ரோசக்காரர்கள் போராடுகிறார்கள்
கருங்காலிகள் கால் வாருகிறார்கள்
போராட்டங்கள் பிசுபிசுத்து விடுகின்றன
எந்த மனிதனும் துன்பத்தை விரும்புவதில்லை
எந்த மனிதனும் துன்பத்தை நேசிப்பதில்லை
தஸ்தாவெஸ்கி போன்ற மனிதர்கள் வாழ்வை நேசிப்பதில்லை…நேசிப்பதில்லை…
என் எழுத்துக்கள் என்னைச் சொல்லும்
என் வார்த்தைகள் என்னை வரைந்து காட்டும்
நான் சொல்ல
இன்னும் நிறைய இருக்கின்றன.

Three Poetries by Vasanthadheepan வசந்ததீபனின் மூன்று கவிதைகள்

வசந்ததீபனின் மூன்று கவிதைகள்

(1)துக்கம் தலையில் சுமந்தால் தைரியமாய் இருக்கலாம். முதுகில் சுமந்தால் நம்பிக்கையாய் இருக்கலாம். இடுப்பில் சுமந்தால் எதிர்பார்ப்போடு இருக்கலாம். வயிற்றில் சுமந்தால் வெளியேற்ற நேரம் ஒன்று இருக்கும். மனசில் அல்லவா சுமக்கிறோம். இறக்கவும் இயலவில்லை... சுமக்கவும் முடியவில்லை... அந்த முதல் வரியை காகிதத்தில்…
Unkown Hindi Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. *நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை

*நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில்: வசந்ததீபன்



நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்

நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?
நான் கைவிடப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன் ?
நான் பூஜை _ஹோமத்தில் அமங்களமாய் இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?

ஆனால் இதை ஏன் மறந்து இருக்கிறாய்,
என நீ இருக்கிறாய்,
நீ , நீ இருக்கிறாய்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்.

யோனியிலிருந்து பாயும் இரத்தம் எனது கெளரவம்
நான் இயற்கைக்கு சமானமானவளாக இருக்கிறேன்.
அதன் மீது முழு பிரபஞ்சம் தங்கியுள்ளது
நான் அந்த அச்சாக இருக்கிறேன்.

உங்கள் பிறப்பின் விளக்கமாக இருக்கிறேன்.
யாரை பூஜிக்க செல்கிறீர்களோ
நான் அந்த காமாக்யாவாக இருக்கிறேன்.

ஹிந்தியில் : பெயரற்றவர்
தமிழில் : வசந்ததீபன்

Hindi Poet Bhagwat Rawat Three Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பகவத் ராவத்த்தின் மூன்று ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்



(1) பாறைகள்

நாலாபுறமும் பரவியது.
நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில்
ஒரு மனிதன்
புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து
தீயை எரிக்கிறான்.

பாறைகளின் முகங்கள் வெளிறிப் போகிறது
மனிதன் அவை எல்லாவற்றிடம் செய்தியற்று
சோதித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே
எழுகிறான் மற்றும் அவற்றில் ஏதாவது ஒன்றின் மேல் அமர்ந்து
தனது உலகத்திற்காக
மாவைப் பிசைந்து கொள்கிறான்.

தீ வேகமாக எரிகிறது
பாறைகள் முதல் முறை
தமக்கு முன்னால்
சில உருவாகுவதை பார்க்கின்றன.

இறுதியில் மனிதன்
எழுந்து நடக்கிறான் திடீரென்று
இதுபோல செய்தியற்று
பாறைகள் முதல் முறை தமக்கு நடுவிலிருந்து
சில கடந்து செல்கிறதை
உணர்ந்து இருக்கின்றன.



(2) மாறிய பருவத்தின் சுபாவம்

எப்போதிருந்து
பூமி மண்டலம்
இல்லாமல்
இருந்து கொண்டிருக்கிறது புவியியல்
ஏறிப் போயிருக்கிறது
உலகமயமாக்கலின் காய்ச்சல்
எப்போதிருந்து மறையத் தொடங்கியது
தாராள மனப்பான்மை
பரவியது பிளேக் போல
தாராளமயம்
எப்போதிருந்து நாசமாகிப் போயின
கிராமங்கள், தொழில்கள் மற்றும் நகரங்களின் திறந்தவெளி மைதானங்களின் சந்தைகள்
வீடுகளுக்குள் நுழைந்தது
முக்காடிட்ட சந்தைவாதம்

இது காரணமின்றி இல்லை என்று அப்போதிருந்து இயற்கையும்
பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்து
தமது நியமம், அறம்
மாற்றி இருக்கிறார்கள்
தமது நடத்தையும் இயல்பும்
இப்போது இங்கே பாருங்கள் என்று
தெரியவில்லை என்று
மகிழ்ச்சி அல்லது கோபம் இருக்கின்றன
இவை புதிர்
பங்கு தரகர்களின் தூக்கி எறியப்பட்ட சென்செக்ஸ் போல.

பலத்த மழை பெய்துள்ளது இந்த ஆண்டு.

ஏதோவொரு மிகப் பெரிய பணக்காரனாக
தமது செல்வத்தின் அடி
இது மாதிரி என்பது போல
பசித்த பிச்சைக்காரர்களுக்கு
ஏதோ ஒரு நாள்
பலவந்தமாக திணித்தபடி
உணவிட்டார் எல்லா தின்பண்டங்களை
அவர்கள் சாப்பிட்டுச் சாப்பிட்டு
இறக்காமல் போகும் அப்போது வரை.

ஏதோவொரு தண்ணீர் கோட்பாடு மட்டும் தனது பயிற்சிக்காக
காரணமற்று ஒருவர் கீழ் உத்தியோகம் பார்க்கிறது மேல்
அப்போது வரை பெய்தது
சவுக்கு மேல் சவுக்கு தொடர்ந்து
எப்போது வரை சுயமாக களைத்து தோற்று தூங்காமல் போனார்கள்.

பாருங்கள் மறுபுறம் இந்தக் காட்சியை
அத்தகைய மழையில், போதையில் அசைந்து
தன்னுடையதான குடிவெறியில் நிற்கின்றன நகராமல்
உயர்ந்த, தாழ்ந்த மலைகள்
நிலையான ஞானத்தைப் போல
தனதான பொய் ஆடம்பரத்தில்நின்று இருக்கின்றன
உயரமாக, உயரமாக எழுகிற
கட்டடங்கள்

மேலும் துக்கத்தை விடவும் அதிகமான துக்கத்தில்
மூழ்கி இருக்கின்றன
அனைத்து தாழ்ந்த குடியிருப்புகள்
பாய்ந்தோடுகின்றன அவற்றின் எல்லாக் கூரை வீடுகள்

இவர்கள் தான் இறக்க இருக்கிறார்கள் காற்றினால், தண்ணீரினால், நெருப்பால்
மாறிய பருவத்தின் சுபாவத்தால்
சில நேரங்களில் தாகத்தால்,
சில நேரங்களில் மூழ்கி
சில நேரங்களில் வாயுவால்
சில நேரங்களில் நெருப்பால்.



(3) இந்த அந்நிய நகரத்தில்

சிலர்
காயமடைந்து வெளியேறிஇருந்தார்கள்
வீட்டிலிருந்து.
கதை சொல்லும் மக்கள் சொல்கிறார்கள்
தண்ணீர் குடிப்பதற்கு
குவளை கயிறு வரை இல்லாமல் இருந்தது என்று.
அவரிடம் எதுவுமில்லாமலிருந்து
வாழ்க்கையைத் தொடங்கினார் அவர்
அந்நிய நகரத்தில்
மற்றும் உடல், மனம் ஈடுபாட்டோடு
பணம் சம்பாதித்தார்
பணத்துடன் மரியாதை
மரியாதையுடன் பெயர்
இந்த மாதிரி அவர் ஒரு நாள்
நகரத்தின் முதலாளியானார்
வாழ்ந்தார் முழு வயது
வெற்றிக் கொடியைப் பறக்க விட்டு
அவர் பலரக வாத்தியங்களின் இசையோடு
சொர்க்கவாசியானார்
முடிவுகள் திடமானதாக
அவர் எப்பவும் திரும்பிச் செல்லவில்லை
தனது வீட்டின் பக்கமாக
வீடு தான் வந்தது அவர் வரை
அவருக்கு வணக்கம் செலுத்தவும்
போற்றவும்.
ஒவ்வொரு கோட்டையின்
எந்த மாதிரி இருக்கிறது ஒரு
பெரிய கதவு
அதிலிருந்து
கோட்டை திறக்கிறது
அது போல
ஒவ்வொரு நகரத்திற்கும் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு
அது போன்ற
பெரிதான பகுதி
அதனாலே திறக்க இருந்தன
நகரின்
மறைவான கதைகள்
அந்த நாட்கள் தான் கொஞ்சம் மற்றும் இருந்தன
மக்கள் சொல்லிச் சொல்லி

மனம் தளர்ந்து போய்
இருக்கிறார்கள்
மற்றும் நேரத்தை நிந்தித்து நிந்தித்து
அது போன்ற ஏதாவது ஒரு
கதையின் சுவரிலிருந்து
முதுகில் தாங்கச் செய்கிறது
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக
ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில்
வீடற்றவராகி
ஒவ்வொரு வருடமும்
வெளியேறிச் செல்கிறார்கள் மக்கள்
நகரங்களின் உடைந்து நொறுங்கிய சாலைகள்
அழைக்கின்றன அவர்களை
அந்நிய சமையலறைகளின் பாத்திரங்கள்
அவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன
தட்டுகளின் எச்சில்
அவர்களை அழைக்கிறது
மென்மையான படுக்கை
விரிப்பதற்கு
அவர்களின் கைகள்
எதிர்பார்க்கின்றன
மற்றும் எப்போது புரள்கின்றன அவை
வீடுகளின் பக்கம்
அவர்களை மறுபடியும் வாழ வைக்கவும்
பின்னர் ஏதோ தண்ணீர் நிரம்பிப் போகிறது
பின்னர் ஏதோ விலங்கு
பகல் கர்ஜித்து நுழைகிறது
அவர்களின் வீடுகளில்
பல ஆண்டுகளுக்கு முன்பு
தமது நேரத்தின்
முழுவதும் யெளவனமுள்ள பையன்களைப் போல
நானும் வெளியேறி இருந்தேன் வீட்டை விட்டு
துணிப்பையில் சில காகிதங்களை வைத்து
ஆனால் விட்டுவிடுங்கள்
இந்த கதையில் எதுவும் புதிதாக இல்லை
நீங்கள் சொல்லுங்கள்
நீங்கள் எப்போது மற்றும் ஏன் வந்தீர்கள்?
இந்த அந்நிய நகரத்தில்.

ஹிந்தியில் : பகவத் ராவத்
தமிழில் : வசந்த தீபன்

பகவத் ராவத்
பிறப்பு : 13,செப்டம்பர் 1939
பிறந்த இடம் : டேஹர்கா கிராமம், டீகம்கட் மாவட்டம், மத்திய பிரதேசம்.

முக்கிய படைப்புகள் :

(1) ஸமுத்ர கே பாரே மேன் (1977)
(2) தீ ஹுஈ துனியா (1981)
(3) ஹுஆ கிஸ் இஸ் தரஹ் (1988)
(4) ஸுனோ ஹீராமன் (1992)
(5) ஸச் பூச்சோ தோ (1996)
(6) பிதா_கதா (1997)

Ekant Srivastava Three Poetries Translated in Tamil by Poet Vasanthadeepan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்-ன் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில்: வசந்ததீபன்



(1) பெயரற்ற பறவையின் பெயர்

கங்கைநதி புளியமரத்தின் இலைகளில் மறைந்திருந்த
ஒரு பறவையின் வாய் இருளைப்
பேசுகிறது மிகு இனிப்புக் குரலில்
போகவில்லை என்ன?
போகவில்லை எதனிடம்?
மற்றும் பொழிகிறது மழை
பாதி தூக்கத்தில் கட்டில் _ படுக்கை சுருட்டி
வீடுகளுக்கு உள்ளே ஓடுகிறார்கள் மக்கள்
கொஞ்சம் சிடுசிடுப்புகள், கொஞ்சம் சந்தோஷம்
மேகங்கள் சூழ்ந்த அந்தகாரத்தில் மின்னுகிறது மின்னல்

கனத்து பெய்கிறது மழை
நீர் நிரம்பிக் போகிறது வயல்
திருப்தி ஆகிப் போகிறது முன்னோர்களின் ஆன்மாக்கள்
உடைவதில் தப்பிக்கிறது
மனதின் முதுகு தண்டு
சொல்கிறாள் பிச்சைக்காரி
இந்த பறவையின் குரலால்
வருகின்றன மேகங்கள்
வெகு தூரமான சமுத்ரங்களிலிருந்து எழுந்து
ஓ.. பறவையே
நீ பேசினாய் தொடர்ச்சியாக கிராமத்தில்
வீட்டில், பள்ளத்தாக்கில், வனத்தில்
கல்லாகிப் போன மனிதனின் மனதில்.

Ekant Srivastava Three Poetries Translated in Tamil by Poet Vasanthadeepan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

(2) யாத்திரை

நதிகள் இருந்தன எமது வழியில்
அவைகளை அடிக்கடி கடப்பதற்கு இருந்தது
ஒரு சூரியன் இருந்தது
அது மூழ்காமல் இருந்தது
எப்படி யோசித்து இருக்கிறாய் என அதற்குப் பிறகு
எமக்கு என்ன நடக்கும்
ஒரு காடு இருந்தது
நவம்பரின் வெயிலில் குளித்து இருந்தது
சில பூக்கள் இருந்தன
நாங்கள் அவற்றின் பெயர்கள் அறியாமல் இருந்தோம்
ஒரு வயல் இருந்தது
நெல்லினுடய
விளைந்து
அது கூரான அரிவாளால் தொடுதலோடு
இருந்தது சந்தோஷம்
ஒரு நீலப்பறவை இருந்தது
நெல்லிக்காய் மரத்தின் வளைந்த கிளையிலிருந்து
இப்போது பறப்பதற்கு தயாராக
நாங்கள் இருந்தோம்
விஷயங்களின் பழைய பொட்டலங்களை அவிழ்க்கிறோம்
எமது பசி மற்றும் களைப்பு மற்றும் தூக்கத்தோடு சண்டையிடுகிறோம்
தூசி இருந்தன தொடர்ச்சியாக பறந்து இருந்தது
அது எமது புன்னகையை மூடி மறைக்க முடியாமல் இருந்தது
ஆனால் எமது முடி நிச்சயம்
சணல் போல காணப்பட இருந்தது
குளிர் இருந்தது மலையின்
எமது எலும்புகளில் இறங்கியது
விளக்கு ஏற்றும் நேரமாக இருந்தது
எப்படி மலையின் மேல் எங்கே எங்கே
மறைந்து இருக்கின்றன ஒளி_ பூக்கள்
ஒரு கரடுமுரடான சாலை இருந்தது
தொடர்ச்சியாக எம்முடன்
ஆறுலைத் தருகிறது
நீ மிகச் சரியாக சேர்வீர் வீடு என்று.

Ekant Srivastava Three Poetries Translated in Tamil by Poet Vasanthadeepan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

(3) பணநோட்டு எண்ணும் எந்திரம்

கனவுகளை எண்ண முடிகிற அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
கனவுகள் அவை பூமியின் மேல் பரவுகின்றன
இருக்கின்ற பூக்களின் விதைகள்போல.

அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
அது ஆசைகளை எண்ண கூடியதாக.

அந்த பிரத்யேக அதிர்வு
அது அநியாயம் மற்றும் சித்திரவதைகளுக்கு விரோதத்தில்
பிறக்கிறது.
பீதி பிறக்கிறது பணத்தின் சலசலப்பு
யாரோ குடிக்கிறான் வெள்ளி கிண்ணத்தில்
மனிதனின் ரத்தம்
எமது கடின உழைப்பின் தேன் யாரோ குடிக்கிறான்
ஒரு வலையது தினமும் விழுகிறது எங்கள் மேல்
ஆனால் தெரியவில்லை
இந்த வலையின் ஒவ்வொரு நரம்பதை எண்ண முடியும்.

அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
காடாக இருக்கிற பிந்த்ரான்வாகர் போல
மற்றும் மரங்களை எண்ணுவது இருக்கிறது கடினம்
கடினமாக இருக்கிறது எண்ணுவது.

அன்பு மற்றும் கனவு மற்றும் ஆசைகளை
மனிதனின் கோபம் எரிமலைக் குழம்பாக மாற்றுகிறது
மற்றும் அதனுடைய அன்பிலிருந்து பரவுகிறது ஒளி
மலருகின்றன ரோஜாக்கள்.

அப்படிப்பட்ட எந்தவொரு எந்திரம் இல்லை
அது நட்சத்திரங்களையும் ரோஜாக்களையும் எண்ணி முடிய.

அவை மலருகின்றன மனிதனின் அன்பில்
இரவின் வனத்தில்
மற்றும் பகலின் மரக்கிளைகளின் மேல் எண்ணிக்கையற்று.

ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
தமிழில் : வசந்ததீபன்

ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ்
பிறப்பு : 08.02.1964
பிறந்த இடம் : ச்சுரா, ச்சதீஸ்கட்
சில முக்கியநூல்கள் : அன்ன ஹைன் மேரே சப்த , மிட்டீ ஸே கஹூங்கா தன்யவாத் , பீஜ் ஸே ப்பூல் தக்.
விருதுகள் : சரத் பில்லெளரே புரஸ்கார், கேதார் ஸம்மான், துஷ்யந்த் குமார் புரஸ்கார், டாகூர் பிரஸாத் சிங் புரஸ்கார், நரேந்த்ரதேவ் வர்மா புரஸ்கார் மற்றும் ஹேமந்த் ஸ்மிருதி கவிதா ஸம்மான் போன்றவை.

Collins Emeghara's English Poetry And Vasanthadeepan Tamil Translation. Book Day and Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam

Collins Emeghara ஆங்கில கவிதையும், வசந்ததீபனின் தமிழ் மொழிபெயர்ப்பும்



கறுப்பும் நீலமும்

நான் நைஜீரியாக்காரி
நீ ஒரு அரசியல்வாதி…

உன்னை நான்
எனது தென்னைமரத்துக் கீழே சந்தித்தேன்…

என்னை உன்னிடம்
தாரை வார்க்குமாறு
நீ என்னிடம் இரந்தாய்…

உன் தாகத்தைத் தீர்க்க
என்னை அவசரப்படுத்தினாய்…

என் அரைப்பாவாடைக்குக் கீழே
நீ குனிந்தாய்…

உன் கண்களை
அதனுள்
மட்டுமீறி நுழைத்தாய்…

ஹோ , என் தடித்த முலைக்காம்புகளை
உறுத்துப் பார்த்தாய்…

என் கனத்த பிட்டங்களை
உற்று நோக்கினாய்…

பிறகு நீ
முரட்டுத்தனமாய் என்னை
விழுங்கினாய்…

கலக்கமூட்டும் கடலாக
உனது உடல் கெர்சித்தது…

என்னை ஒருமுறை
கற்பழித்தாய்…

ஓ.. கற்பழித்தாய்
இரண்டு முறை…

என்னை நீ கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

பிறகு என்னை
தென்னை மரத்தின் அடியிலிருந்து
இழுத்தாய்…

என்னை
திறந்த கடலுக்கு
இழுத்தாய்…

பிறகு என்னை மிரட்டி
கடலுக்குள்
அமிழ்த்தினாய்…

என்னால்
மேற்கொண்டு
சத்தம் மட்டும்
எழுப்ப முடிந்தது.

என் கால்களை
கடலுக்கும் படகுக்கும் இடையில்
கட்டினாய்…

என் மேல்
அக்கறையில்லாத நாயாய்
வேகமாகப் பாய்ந்தாய்…

உன் நண்பர்களை அழைத்து
உன்னோடு சேர்த்துக் கொண்டாய்…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

பிறகு
என் காற்சட்டையை
நீ கழற்றி எறிந்தாய்…

அது
உதிக்கும் சூரியனின் மேல்
போய் விழுந்தது…

உலகம்
என்னுடைய
அழுக்கான காற்சட்டையைப்
பார்த்தது…

பிறகு
சிரிக்க ஆரம்பித்தது…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

பிறகு
சாறு நிரம்பிய
பருத்த என் முலைகளை
இறுக்கிப் பிடித்தாய்…

அவைகள்
சிகப்பு நிறமாகும் வரை
உறிஞ்சினாய்…

பிறகு
என் இடுப்புகளைப் பிடித்தாய்…

என் கண்களிலிருந்து
உலகம் மறைய
அடித்துத் தூளாக்கினாய்…

என் பிட்டங்கள்
நெருப்பால்
நரக நெருப்பால்
நிரம்பியது…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

இப்பொழுது
எனது குழந்தைகள்
பசியால்
இறந்து கொண்டிருக்கின்றன…

எனது பால்
ஓடாமல்
நிறுத்தப்பட்டிருக்கிறது…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

இப்பொழுது
நிறைய குழந்தைகள் பெற
விரும்புகிறேன்…

ஆனால் என் பிட்டங்கள்
ஆயிரம் முட்டைகள் போல
அடித்து நொறுக்கப்பட்டது…

ஹோ, நீ
என்னில்
வேலையை முடித்தாய்…

ஆம்
என்னில்
மனிதாபிமானம் இறந்தது…

என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…

ஆனால் மறக்காதே
நான்
நைஜீரியாக்காரி என்பதை…

நீ ஒரு
அரசியல்வாதி என்பதையும்…

ஆங்கிலத்தில்: Collins Emeghara
தமிழில் : வசந்த தீபன்

Collins Osinachi Emeghara, Nigerija – ASinfo Portal

Collins Emeghara
____________

பிறந்த இடம் : Owerri , Imo.
தற்போதைய வசிப்பிடம் : Naze , Nigeria.
பிறந்த தேதி : 23, ஏப்ரல்  1983
வெளியான நூல் :  My Blood , My Food.

Gajanan Madhav Muktibodh Hindi Language Poetry Translated to Tamil Language by Poet Vasanthadeepan. Book Day, Bharathi Puthakalayam

மொழிபெயர்ப்புக் கவிதை: இரவு, செல்கின்றன தனியாகவே நட்சத்திரங்கள்



இரவு, செல்கின்றன தனியாகவே நட்சத்திரங்கள்

இரவில், செல்கின்றன தனியாகவே நட்சத்திரங்கள்
ஒரு ஆளற்ற வெறிச்சோடிய வடிகால் அருகில்
நான் ஒரு இடத்தை தோண்டினேன்
மண்ணின் பச்சை மண்கட்டிகளை வெளியேற்றி தூரம்
தோண்டியும்
தோண்டியும்
இரண்டு கைகள் போய்க் கொண்டிருந்தன சக்தியால் நிரம்பி
கேட்டுக் கொண்டிருந்தன குரல்கள் _
பெரிய அபஸ்வரம்
வெறுக்கிற இரவுகளின் குரூரம்.
கறுப்பான ஸ்வரங்களில் பேசுகிறது, வெறிச்சோடி இருந்தது மைதானம்.
எரிந்து இருந்தது எமது லாந்தர் உதாசீனம்,
ஒரு ஆளற்ற, வடிகால் அருகில்.
சுயமாக முடிக்கப்பட்டது படுக்கை மிகவும் ஆழமாக
பார்க்க முடியா திறக்கப்பட்ட முகம்
என அது தமது இருதயம் போல,
அன்பின் துண்டு
எமது வாழ்வின் பகுதி,
உயிரின் அறிமுகம்,
எமது கண்கள் போல தமது
அந்த முகம் சற்று சுருங்கி
இருந்தது மஞ்சளாக,
தமது மரணத்தில் பயமற்று.
அந்த உயிரற்ற,
ஆனால் அதன் மீது எமது உயிரின் அதிகாரம் ;
இங்கேயும் மோகம்
இருக்கிறது விவகாரம்
இங்கேயும் சிநேகத்தின் அதிகாரம்.
படுக்கை நன்றாக ஆழமாக தோண்டி,
தமது மடியிலிருந்து,
பாதுகாத்தது அதை அதன் மென்மையான பூமி _ மடி.
பிறகு மண்,
என்று மறுபடி மண்,
வைத்தது மீண்டும் ஒன்று _ இரண்டு கற்கள்
போர்த்தியது மண்ணின் கருநீல துப்பட்டா
நாங்கள் போனோம்
ஆனால் நிறையவே கவலையால் மறுபடியுமாக,
என பின்னே பார்த்து
மனம் எடுத்துக் கொண்டு இருந்தது அமைதி.
தனது தைரிய பூமியின் இருதயத்தில் வைத்திருந்தது.
தைரிய பூமியின் இருதயத்தில் வைத்து எடுத்து இருந்தது.
அவ்வளவு பூமியின் மேல் இருக்கிறது
பழைய அதிகாரம் என்னுடையது
அதன் மடியில் நான் தாலாட்டியது அன்பு என்னுடையது
முன்னே லாந்தர் உதாசீனம்
பின்னே, எம் அருகில் இரண்டு நண்பர்கள்
கால்களின் ஒலியினுடைய உதவியால் மட்டும்
சாலை நடந்து கொண்டிருந்து

ஹிந்தியில் : கஜானன் மாதவ் முக்திபோத்
தமிழில் : வசந்ததீபன்

Hindi Poet Vishnu Nagar's Two Poetries Translated in Tamil By Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

விஷ்ணு நாகரின் இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள் | தமிழில் : வசந்த தீபன்

(1) தண்ணீராக இருக்கிறேன் ஆகையால் _________________________________ நான் தண்ணீர், ஆகையால் என்னைக் குற்றம் சொல்லாதே நான் ஏன் பனிக்கட்டி ஆனேன் என்று நான் நீராவி ஆனேன் என்று அல்லது அப்போது நான் ஏன் குளிராக இருந்தேன் மேலும் நான் இப்போது ஏன்…