Vasanthadheepan Poems 16 வசந்ததீபனின் கவிதைகள் 16

வசந்ததீபனின் கவிதைகள்




பித்தாய் பெருகுதடி உன் நினைவு
***************************************
நீ தான் என் கவிதையூற்று
நீ தான் என் கற்பனைகளின் பெருங்கடல்
நீ தான் என் கனவுகளின் அமுதசுரபி
காதலின் வலி
கசப்பாகவும் இருக்கும்
இனிப்பாகவும் மாறும்
என் இதயத்தை எடுத்துக் கொண்டாய்
என் உயிரைப் பறித்துக் கொண்டாய்
உன் முத்தத்தையாவது எனக்குக் கொடு
நெஞ்சுக்குள் நீ
நுழைந்ததை அறியேன்
நான் திக்கு முக்காடித் தவிக்கிறேன்.

முள்ளாய் பார்க்காதே
பூவான என் மனம் காயமாகும்
ஒட்டடைகளை நீக்கி விடு
வர்ணம் தீட்டி அழகுபடுத்து
உன் உள்ளத்துள் வசிக்க
நான் வருகிறேன்
என் இதயத்தைக் கொண்டு வா
உன் இதயத்தை தருகிறேன்
திருடியவைகளை
திரும்பப் பெற்றுக் கொள்வோம்
கண்ணீர் மழையில் நனைகிறேன்
காதல் தெருவில் அலைகிறேன்
காலமெல்லாம் தடுமாறி
கசந்த வேதனையில் விழுகிறேன்
தனித்த ஊஞ்சல் நான்
ஆட்டும் உள்ளத்திற்காக ஏங்குகிறேன்
ஆட்டுவித்தால் ஆடாதோ கண்ணே
வாடைக்காற்றிற்கு சற்று விடைகொடுப்பாயா ?

சடசடத்துப் பெய்கிறது ஆற்றாமை
****************************************
மீனாயிருந்தால்  கடல்
பறவை  என்றால்  காட்டுப்பறவை
புலியின்  வாழ்விடம்  பரந்த  வனம்
கடல்  என்னாச்சு
நாடு  கடலாச்சு
எல்லாம்  கிழிபட்ட  நாட்காட்டியாச்சு
சாம்பல்  பறக்கிறது
கங்கு  ஒளிர்கிறது
வெடிப்பு  நெருங்குகிறது.
நெருக்கடிகள்  அதிகரிக்கின்றன
பதற்றம்  சூடு  பிடிக்கிறது
தப்பிப் பிழைக்க  முகாந்திரமில்லை
புருவங்கள்  சுருங்குகின்றன
இமை ரப்பைகள்  அடித்துக்  கொள்கின்றன
வியப்பாய்  அவளின்  வருகை
நாக்கைக் கடித்துக்  கொள்கிறேன்
உதடுகள்  துடிக்கின்றன
பிரிவின்  துயரம்   என்னுள்  பரவுகிறது
கூண்டிற்கு  கதவுகள்   உண்டு
கூட்டிற்கு  திறந்த  வாசல்
விடுதலைக்குள்  வீடுபேறு
குழந்தை  வீறிட்டழுதது
பொம்மை  சோறு  சாப்பிடவில்லை
அன்புக்கு  உண்டோ  அடைக்கும்  தாழ்
விட்டு விடுதலையானால்
வாழ்வே வர்ணமயம்
இதில் பறவைகள் மட்டுமென
யாவுமே ஆகும் வானவில்லாக
பழுப்பேறிய  புத்தகத்துள்
எழுதப்பட்ட  வரிகள்
காதலின்  கானல்வரி  ஓவியம்
வாசிக்கப்பட்டதை  அறியவில்லை  எழுதியவன்.

Vasanthadheepan Poems 15 வசந்ததீபன் கவிதைகள் 15

வசந்ததீபன் கவிதைகள்




(1) நதிச் சங்கமம்
**********************
உன் விழிகள் என் திசைகாட்டிகள்
உன் இதழ்கள் என் நீர்த்துறைகள்
உன் நிழல்தேடி தாகமாய் வருகிறேன்
உனக்குப் பரிசளிக்க வேண்டும்
உலகம் கண்டிராத
அற்புதமான பொருள்
ஒருவராலும் தரமுடியாத என் இதயம்
முத்தமிட வந்தேன்
முட்கள் சூழ நிற்கிறாய்
மனமொடிந்து திரும்புகிறேன்
உன் உடலுக்குள் ஒரு கடல்
மீன்கள் ஆயிரம் துள்ளுகின்றன
கண்ணாடிக் குடுவைக்குள் நீ
ராகங்கள் பெருகும் தடாகம்
சந்தங்கள் கமழும் பூந்தோட்டம்
மனம் எனும் மாய இசைக்கருவி
கள்ளிப்பழ உதடுகள்
கனிந்து சிவந்தன
கண்கள் துள்ளிக் குதித்தன
காதல் வெள்ளம் பிரவாகமெடுத்தது
மழைச்சாலையில் யாரும் இல்லை
காற்று ஓலமிட்டு ஓடுகிறது
இறந்தபடி இணை பிரிந்த பறவை
சிரிப்பால் எனக்குத் தீ மூட்டினாள்
வெந்து கொண்டிருக்கிறது
என் இதயம்
பசியாறப் பார்க்கிறது கனவு.

(2) மரிக்கும் பறவையின் குரல்
*************************************
சுழித்தோடும் உன் புன்னகை
நெளிந்தாடும் உன் புருவங்கள்
சுழலுள் சிக்கிய துரும்பானேன் நான்
ஆறப்போடு
ஊறப்போடு
அப்படியே தூக்கித் தூரப்போடு
படிக்கிறேன்
திரும்பத் திரும்பப் படிக்கிறேன்
விளங்க முடியாத கவிதை வாழ்க்கை
நிழல் தரும் மரங்களில் இலைகளில்லை
அழகு மிளிரும் செடிகளில் பூக்களில்லை
உதிர்காலத்தில் உழல்கிறது கனவிலான வாழ்வு
ஒரு மிடறு குடித்தான்
வேதனையின் காரணிகள் நிழலாடின
அடுத்த மிடறு
அவனைக் குடித்துவிட்டது
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் செய்த தோண்டி கூத்தாடிக் கூத்தாடி பட்டென்று உடைந்தாண்டி
நீ வந்த போது நான் இல்லை
நான் வந்த போது நீ இல்லை
நமது காலடித்தடங்கள் மட்டுமாவது சந்தித்திருக்கலாம்
உக்கிரமான கோபம்
கனவுகளை எரிக்கிறது
நாமெல்லாம் மெளனமாகத் தான் வாழ்கிறோம்.

Vasanthadheepan Poems வசந்ததீபனின் குறுங்கவிதைகள்

வசந்ததீபனின் குறுங்கவிதைகள்




வெள்ளாவிப் பானைகளில்
முட்டுத்துணி
குழந்தைப்பீத்துணி உட்பட
தூய்மையாக்க
வேகுகிறான் மாடன்.

🦀
கைக்கருப்புக்கு அரிசிப்பொரி படையல்
தலைச்சன் குழந்தைக் கரு பூசு மை
என ஊரைப் பயமுறுத்தி
ரத்தம் கக்கிச் செத்தான் மந்திரவாதி.

🦀
குடித்தான் குடித்தான்
குடித்தான் குடித்தான்
அவன் அவனையே
குடித்து முடிந்தான்.

🦀
காதல் பூவா ?
பூக்கிறது உதிர்கிறது
உதிர்கிறது பூக்கிறது
கண்ணிமைக்கும் நேரத்தில்.

🦀
வெயில் ஏந்தி
வாழ்க்கையின் சுவற்றில்
ஒளிப்படங்கள் காட்டும்
கண்ணாடியாய் மனைவி.

🦀
பூக்கள் மட்டுமல்ல
கனிகளும்
தானியங்களும்
தானே வசந்தம்.

🦀
கனவு வராக்கூடாதெனப் பிரார்த்திக்கிறேன்
அழுகைச் சத்தம் கேட்கிறது
மனசு பரிதாபப்பட கனவு சிரிக்கிறது.

🦀
ஆண்டாளையோ
அக்கமா தேவியையோ
ஒளவையையோ எந்த பெண்ணையோ
இழிவு படுத்தும் எவரும்
ஈனர்கள் தான்.

வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்

(1) வாழ்க்கை   அழகாக   இருக்கட்டும் ______________________________________ அலெக்ஸாண்டர்  போல ஆக்ரமிப்பிற்கு எதற்காக அலைகிறீர்கள்...? குடும்பம்  தொலைத்து.. குழந்தைகள்  மறந்து.. சுற்றம்  தவிர்த்து.. மனைவி  பிரிந்து.. தாய், தகப்பன், உடன் பிறப்புகளை உதறி விட்டு... யாருக்காக ஆயுதங்கள்  தரித்துப்  போகிறீர்கள்...? நீங்கள்  செத்து..…
வசந்ததீபன் கவிதைகள்…!

வசந்ததீபன் கவிதைகள்…!

(1) ஒரு ரூபாய் மகாத்மியம் __________________________________ அவனிடம் ஒரு ரூபாய் இருந்தது என்ன கிடைக்கும் ? ஒரு பூ ஒரு வடை ஒரு பேனா ஒரு மிட்டாய் ஒரு காகிதம் ஒரு சிகரெட் ம்க்கூம் ஒன்றும் கிடைக்காதா ! என்ன செய்யலாம்...…
வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்

  ரணத்தின் மீச்சிறு அலகு __________________________________ துயரங்களின் பெருவலி எக்கணமும் என்னுள் குமிழியிட்டுக் கொண்டே இருக்கிறது. சக மனிதர்களோடு உரையாடுகிறேன் வெறுமை என்னை தன் கைப்பிடிக்குள்ளே வைத்திருக்கிறது. கனவுகளில் பயணிக்கிறேன் துயரார்ந்த விபத்துகளே நேர்கிறது. மனதுள் பூஞ்செடிகளை பதியமிடுகிறேன் கடுங்கோடையின் முட்களே…
வசந்ததீபன் கவிதைகள்

வசந்ததீபன் கவிதைகள்

மானுடத்துயர் _________________ கடவுள்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர் மனிதர்கள் கைகால்‌விலங்கிடப்பட்டுள்ளனர் பயணங்கள் யாவும் மின் அனுமதி சீட்டில் வேலியிடப்பட்டிருக்கின்றன பறவைகள் வழக்கம் போல் பறந்து திரிகின்றன எறும்புகள் ஊறித் திரியாமல் இல்லை இரவும் பகலும் நாய்கள் சுதந்திரமாய் அலைகின்றன ராமரும் அல்லாவும் மெளனமாய்…