வாஸ்து கவிதை – ச.லிங்கராசு

வாஸ்து கவிதை – ச.லிங்கராசு




அவரவர் கலாச்சாரம் சொல்லும்
ஆடைகளில் நீங்கள் செல்லும்
பொழுதுகளில் அறியவில்லையா
இது பன்முகத்து பூமி என்று?
இல்லை இது ஒரே பூமி என்று
உளறும் நீங்கள் ஏன் உங்கள்
ஒரே ஆடையில் செல்வதில்லை?

வேஷங்களில் உங்களை வீழ்த்த
வேரெவரும் பிறக்கவில்லைதான்
வேறு எதுவும்உங்களிடம் இல்லை என்று
விளங்குவதற்கு இங்கு என்ன விற்பனர்கள் தேவையா?
சாஸ்திரத்தை கட்டிக்கொண்டு
சதிராடும் நீங்கள்
சாமன்யனின் சங்கடங்களைத்
தீர்த்து வைப்ப தெப்படி?

பொருளாதாரம் புதைகுழிக்குப்
போகின்ற நிலையிலும்
வானுயர சிலை வைத்து
வாழ்த்துப் பாடுகின்றீர்
வாஸ்து பார்த்து வடிவமைத்த
கட்டடத்திலும் நீங்கள் வசைப் பாடப்

போவது இன்னும் வாழும் நீதிகளை தான்!

ச.லிங்கராசு