Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies

தொடர் 14: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



தழுவல், காப்பி, மொழிமாற்றத் திரைப்படங்கள்

உலகெங்கும் திரைப்படங்கள், பாதிப்பு, தழுவல், மொழி மாற்றம், காப்பி எனும் ஜாபிதாவுக்குள் அசலல்லாத ரீதியில் அடங்குகின்றன. இவை ‘‘காப்பி’’ என்பதைத் தவிர்த்து நியாயமான வழிமுறையில் வருபவை. காப்பியடித்தலை திருட்டு என்றும் கொள்ளலாம். எடுத்துச் சொன்னால் கோபமும் வெறியும் பொத்துக் கொண்டு வரும். வார்த்தை ரீதியான வன்முறையிலும் அடிதடி வரையிலும்கூட போய் விடுவார்கள். அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Moviesபாதிப்பு என்ற நல்ல வழிமுறையில் ஓர் உதாரணம், 1956-ல் தமிழில் எடுக்கப்பட்ட, ‘‘முல்லை வனம்’’ முல்லைவனம், ஹாலிவுட் இயக்குனர் ஜான் ஃபோர்டின் புகழ்பெற்ற STAGE COACH படத்தின் பாதிப்பில் தமிழ் சினிமா சூழலுக்கேற்றபடி கண் மூக்கு வாயெல்லாம் மாற்றி வைத்து செய்யப்பட்ட சுமார் ரக படம். குமாரி ருக்குமணி, ராம், பி.எஸ். வீரப்பா, எஸ்.ஏ. நடராஜன் ஆகியோர் திறம்பட நடித்திருந்த படம். ஒண்ணரை நூற்றாண்டுக்கு முன் திருநெல்வேலி- கன்னியாகுமரி பகுதியில் ‘‘மெயில் வண்டிகள்’’, எனப்படும் இங்கத்திய ஸ்டேஜ்கோச்சுகள் புழக்கத்திலிருந்து வந்ததை மா. அரங்கநாதன் அடிக்கடி குறிப்பிடுவார். அவர் தம் நாவல், ‘‘பறளியாற்று மாந்தர்’’லும் அந்த மெயில் வண்டி வரும் காட்சியைக் கொண்டு வருவார். இந்த மெயில் வண்டிகளில் பயணிகளும் சவாரி செய்வார்கள். இவற்றில் முக்கியமாக தபால் ஏற்றப்பட்டு (MAIL) வண்டி என்றழைக்கப்பட்டது. இவற்றில் ரெயில்வே ஸ்டேசனில் டிக்கட் வசூலில் சேரும் பணம் நிறைந்த இரும்புப் பெட்டகங்களும் சவாரி செய்யும். அவற்றை கஜானாவுக்கு எடுத்துச் செல்லுவார்கள். பாங்குகளின் பணமும் மெயில் வண்டிகளில் எடுத்துச் செல்லப்படும். இத்தகைய சேவை மேற்கத்திய படங்களிலும் இடம் பெறும். அதை வழிப்பறி செய்ய கயவர்கூட்டமும் வரும். தமிழ்நாட்டில் சங்கரலிங்கத் தேவன் போன்ற வழிப்பறி கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து மெயில் வண்டிகளை வழிப்பறி செய்வது சகஜம். இது போன்ற சம்பவங்கள் ஜான் ஃபோர்டின் படங்களிலும் பிற்காலத்தில் செர்ஜியோ லியோன் (Sergio Leone) படங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Moviesமுல்லை வனம் படத்தின் கதையும் சண்பகராமன் புதூர்- மார்த்தாண்டம் பகுதியில் நடப்பதாகவே அமைந்திருப்பது வசதியாய்ப் போயிற்று. முல்லை வனத்துக்கு முன்னமேயும் மேனாட்டு கதைகள், நாடகங்களைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்கள் உண்டு. சாரங்க பாணி, வி.ஆர். செல்லம், நாகர்கோயில் மகாதேவன் நடித்த புகழ்பெற்ற நகைச்சுவைப் படமான ‘‘என் மனைவி’’ (1942) ஃபிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரின் நாடகம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது. ‘‘FABULOUS SENORITA’’ என்ற ஃபிரெஞ்சு படத்தைத் தழுவி பானுமதி. ‘‘மணமகன் தேவை’’ நகைச்சுவைப் படத்தை எடுத்தார். திரைப்பட ஆக்கத்தில் உலகெங்கும் தழுவல்கள் நடந்தபடியே வருகின்றன. ஜப்பானின் புகழ் பெற்ற அகிரோ குரோசாவா ஷேக்ஸ்பியரின் மற்றும் தாஸ்தாவ்ஸ்கியின் கதைகளைத் தழுவி நிறைய படங்களைப் பண்ணினார். மிக அற்புதமாக பண்ணினார். RAN, THRONE OF BLOOD என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

நமது வீணை எஸ். பாலச்சந்தர் குரோசாவின் திரைக்காவியமான ரஷோமான் படத்தின் கதையைக் கச்சிதமாக தமிழாக்கி அற்புதமான படமாய் ‘‘அந்த நாள்’’-ஐ ஏவிஎம் நிறுவனத்துக்காக இயக்கினார். நேர்மைக்கு உதாரணமாக வீணை பாலச்சந்தர் அந்த நாள் கதையைத் தாம் எவ்வாறு ரஷோமனிலிருந்து கற்க முடிந்தது என்பதை மிக வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவருக்கு கிட்டதட்ட நேர்மையான மற்றொரு இயக்குனர் கே.ராம்னாத், விக்டர் ஹியூகோவின் அமர நாவலான ‘‘லே மிஸரப்னே’’யைத் தழுவி, ‘‘ஏழைப் படும்பாடு’’ படத்தை எடுத்தபோது க்ரெடிட் டைட்டில்ஸில் தம் தழுவல் தகவலைத் தவறாது குறிப்பிட்டார். இதுபோல நூற்றுக்கு அதிகமாகவே தமிழில் மட்டும் தழுவல் படங்களிலிருக்கின்றன. இதுபோன்ற நேர்மையை இயக்குனர் மகேந்திரனிடமும் கமலஹாசனிடமும் காணலாம்.

தழுவலுக்கும் காப்பியடித்தலுக்கும் உள்ள சிறு வேறுபாடு, ஒருவன் தவறி கீழே போட்ட பணப்பையை இன்னொருவன் எடுத்துக் கொள்ளுவதற்கும், பிக்பாக்கெட் அடிப்பதற்குமுள்ள வேறுபாடு மாதிரி.. ராம்னாத்தான் இயக்கிய கன்னியின் காதலி, மர்மயோகி, விடுதலை ஆகிய திரைப்படங்களின் கதைகள், எந்தெந்த மூலக் கதைகளின் தழுவல் என்பதை வெளிப்படையாகவே குறிப்பிட்டவர். இங்கு காப்பியடிப்பதும் அப்பட்டமாய்த் திருடுவதும் கதைகளை மட்டுமல்ல, காட்சிகள் ஒளிப்பதிவு, நடிப்பு எல்லாமே அவ்வப்போது எங்கெங்கு தேவையோ அவ்வப்போதெல்லாம் அங்கெல்லாம் தயக்கமில்லாமல் மனசாட்சியில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. யாரெல்லாம் அத்தகைய காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை சொல்லாமலே உங்களுக்குத் தெரியக்கூடும்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies
Vaddante Dabbu (பணம் படுத்தும் பாடு) – Wikipedia

நான் என் பெற்றோர்களோடு 1955-ல் வெளிவந்த ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்தேன். ‘‘பணம் படுத்தும் பாடு’’ என்ற அந்தப் படம் தெலுங்கிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படம். தமிழ்ப் படத்தில் ஓரிரு முக்கிய கதா பாத்திரங்களின் நடிகர்களாய் அசல் தமிழ் நடிகர்களைக் கொண்டு நடிக்கப்பட்டது. என்.டி.ராமராவ், சவுகார் ஜானகி, செருகளத்தூர் சாமா, தங்கவேலு, ஜமுனா ஆகியோர் நடித்த முழுக்கவும் நல்ல நகைச்சுவைப்படம். டிராயிங் மாஸ்டர் அளவுக்கு சித்திரம் வரையத் தெரிந்த ஒருவன் (என்.டி.ஆர்) ஓவியன் என்று படத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறான். இவன் படங்கள் போணியாகாமல் வறுமையில் வாடுகிறான்.இவனது படங்களைக் கொண்டுபோய் விற்க முயலும் ஆப்த நண்பன் ஒருவன் இவனைப் போலவே வேலையின்றி இவனோடு வசிப்பவன். ஓவியன் ஆற்றங்கலையில் உட்கார்ந்து படம் வரைந்து கொண்டிருக்கையில் பாட்டு பாடினபடி செக்காவின் நாய்க்கார சீமாட்டிபோல அழகிய இளம் பெண்ணொருத்தி அங்கே தன் நாயோடு ஓடிப் பிடித்து ஆடுகிறாள். ஓவியன் அவளையும் அவளது நாயையும் வரைகிறான். அவள் அதைப் பார்க்கிறாள். இருவரும் காதலில் சிக்கினார்கள். அவளுடைய தந்தை ஒரு கோடீசுவரன் இரண்டு டஜந் நாய்களோடிருக்கும் பணத்திமிர்காரன். இந்த ஓவியனைத்தான் கல்யாணம் செய்து கொள்ளுவேன் என்று அந்தப் பெண் (செளகார் ஜானகி) பணக்கார தந்தையிடம் கூறி காதலனை அறிமுகப்படுத்துகிறாள். தந்தை தெனாவாட்டாக செருகளத்தூர் சாமா ஓவியனைக் கேட்கிறான்.

‘‘ஓவியன்னு சொன்னா, நாய்ப் படம் போடுவியா? எனக்கு நாய்ப் படம்தான் வேணும்’’
மாத வருமானம் என்று எதுவுமில்லாத ஓவியனிடம் கூறுகிறான்.

‘‘சம்பாதிக்கத்தான் தெரியில்லே. சரி, செலவழிக்கவாவது தெரியுமா? இந்தா, ஒரு லட்சம் ரூபாய். எல்லாம் நூறு ரூபா நோட்டு. நூறு ரூபா நோட்டு பாத்திரிக்கியா? இந்த ஒரு லட்சத்தையும் ஒரு மாசத்துக்குள்ளே செலவு செஞ்சிட்டைன்னா, எம்பொண்ண உனக்கு கட்டி வைக்கிறேன்.’’ என்று கூறி ஒரு லட்சம் ரூபாயை ஓவியன் ராமராவிடம் கொடுக்கிறான். ஆனால் நண்பன் (தங்கவேலு) அதைச் சுலபமாக செலவழித்துவிடலாமென சொல்லுகிறான்.

குதிரைப் பந்தயத்தில் பெரும் தொகையை வைத்து ஆடினால், ஒன்றுக்கு பல மடங்கு பணம் கிடைத்து விடுகிறது. ஏராளமான திட்டத்தில் வீடு கட்டி செலவழிக்க கடைக்கால் தோண்டுகையில் தங்க நாணயங்கள் நிறைந்த பெரிய தவலை கிடைக்கிறது. பணத்தை எண்ணுவதற்கென நியமிக்கப்பட்ட நால்வர் இவர்கள் இருவரையும் அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். பணம் ஒழிந்தது என்று இருந்தால், ஓடியவர்கள் பிடிபடுகிறார்கள். போன பணம் திரும்ப வருவதோடு, வெகு காலமாய்த் தேடப்பட்டு வந்த அகில இந்திய கொள்ளையரைக் காட்டிக் கொடுத்தமைக்கான பரிசுத் தொகையும் சேர்கிறது.

எ்ப்படி செலவழித்தாலும் அதைப் போன்ற பத்து மடங்கு அதிகமாய் பணம் வந்து சேருகிறதே ஒழிய செலவழிக்கவே முடியாது கெடு வைத்த ஒரு மாத காலமும் முடிகிறது. ஓவியன் மனமுடைந்து காதலியின் தந்தை கொடுத்த ஒரு லட்சம் ரூபாயையும் அது ஈட்டித் தந்த பல லட்சத்தையும் சேர்த்து கொண்டுபோய் அவர்கள் வீட்டில் போட்டுவிட்டு வெளியேறுகையில் பணக்காரன் தன் மகனை ஓவியனுக்கே மணமுடித்து வைக்கிறான்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Moviesஇப்படத்தை பார்த்து வைத்த சிறிது காலம் போய் சேலம் இம்பீரியலில், ‘‘THE MILLION POUND NOTE’’ என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். இது 1954 வெளியீடு. இரு பணக்கார நண்பர்கள் தங்களுக்குள் ஒரு பந்தயம் கட்டுகிறார்கள். ஒரு மில்லியன் பவுண்டு பணத்தை காசில்லாத ஒருவனுக்குக் கொடுத்து, அவனால் அதை வைத்துக் கொண்டு செலவே செய்ய முடியாமலிருந்தால் எப்படியிருக்கும் என்றும் அது சாத்தியமா, சாத்தியப்படாதா என்பது பந்தயம். அதன்படி ஏழை கப்பல் தொழிலாளி ஒருவனைப் பிடித்து ஒரு மில்லியன் பவுண்டு நோட்டைத் தந்து ஒரு மாதத்துக்குள் செலவு செய்து காட்டும்படி சொல்லுகிறார்கள். அவனும் மகிழ்ச்சியோடு பணத்தைப் பெற்றுக் கொண்டு போகிறவன் செலவு செய்யச் செய்ய அது மேன்மேலும் பெருகுகிறதே தவிர செலவாகிறதில்லை.

இப்படத்தின் கதை புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் (MARK TWIN) எழுதிய சிறுகதையொன்றைத் தழுவியது. படத்தை ரொனால்டு நீயெம் RONALD NEAME என்பவர் இயக்கியிருக்கிறார். ஏழை கப்பல் தொழிலாளியாக கிரிகரி பெக்கும் (GREGORY PECK) நண்பர்களாய், டொனால் ஸ்க்வைரும் (DONALD SQUIRE) வில்ஃபிரட் ஹைட் வைட்டும் நடித்திருக்கிறார்கள். இப்படம் வெளிவந்த சூட்டிலேயே நம்மவர்கள் தமிழ் – தெலுங்கு இரு மொழியிலும் காப்பியடித்துத் தயாரித்துவிட்டனர். க்ரெடிட் பட்டியலில், ‘‘இவரது கதையைத் தழுவியது என்றோ, இந்தப் படத்தின் கதையைத் தழுவியதென்றோ அறிவிக்கும் குறைந்த பட்ச நாணயம் – நேர்மைகூட நமது வெகுஜன சினிமாக்காரர்களுக்கு அன்று முதல் இன்று வரை ஓரிருவரைத் தவிர இல்லை. இதே கதையை வைத்து ரஜினிகாந்தும் ஒரு படம் பண்ணியிருப்பதாய் அறியப்படுகிறது.

ஒரே சமயத்தில் ஒன்றுக்கொன்று ஒரே மாதிரியிருக்கும் கதைகளிலமைந்த திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு போயிருக்கின்றன. உதாரணம்: அம்மையப்பன், சுகம் எங்கே.

அது போல ஹாலிவுட்டிலும் இரு ஆங்கிலப் படங்கள் காலத்தால் சற்று முன்னும் பின்னுமாயும், கதையமைப்பில் கொஞ்சம் மாற்றத்தோடும் எடுக்கப்பட்டன. ஆனால், அவைகளுக்கிடையே எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அவைகள்: 3: 10 TOYUMA, THE LAST TRAIN FROM THE GUNHILL.

3:10 To Yuma படத்தில் ஒரு கொலைக் குற்றவாளியைத் தன் உயிரைப் பணயமாக்கி குடிகார விடுதியிலிருந்து கைது செய்து யூமா எனுமிடத்திலுள்ள சிறைச் சாலைக்கு ரயிலிலேற்றி கொண்டுபோகும் அமெரிக்க மார்சல் (போலீஸ் அதிகாரி) ஒருவனின் கதை திகிலும் சாகசமும் மிக்கதாய் சொல்லப்படுகிறது. மார்சலின் முயற்சியை முறியடித்து கைதியைத் தப்புவிக்க அவனுடைய ஒன்பது கூட்டாளிகள் ஆரம்பத்திலிருந்தே மார்சலைப் பின் தொடர்கிறார்கள். கொலையாளியின் விலங்கிடப்பட்ட சங்கிலியை ஒரு கையிலும், அவன் கழுத்தைத் தொட்டபடியுள்ள துப்பாக்கியை மறு கையிலும் பிடித்தவாறு மார்சல் கூரையில்லாத மொட்டைக் குதிரை வண்டியிலேற்றி நின்றவாறே குதிரைக் கடிவாளத்தையும் பிடித்தபடி ரெயில்வே ஸ்டேசனுக்கு மெதுவாகப் போவதுதான் படம். ஸ்டேஷனை நெருங்க நெருங்க பாதுகாப்பு குறைந்து குற்றவாளியின் சகாக்களால் எந்த கணமும் தாக்கப்பட நேரிடும் என்ற எச்சரிக்கை மார்ஷலுக்குக் கூடிக் கொண்டே போகும். மார்ஷலின் மனைவியும் மிகுந்த தவிப்போடு வேறொரு வழியில் வருவாள். ரயிலும் வந்துவிடுகிறது. ரயிலைப் பிடித்து குற்றவாளியோடு கிளம்பாவிட்டாலும் பேராபத்து. மார்ஷல் ரயில் எஞ்சின் விடும் பெருத்த புகைப் பீச்சலைப் பாதுகாப்பு கவசமாய் எடுத்துக் கொண்டு அந்தப் புகையில் தன்னையும் குற்றவாளியையும் ஒளித்தபடி பெட்டியில் ஏறிவிடுகிறான். கூட்டாளிகள் ஸ்டேஷனை நெருங்கும் முன் ரயில் கிளம்பி வேகமெடுக்கிறது. மார்சலின் மனைவி, ஊர் எல்லையிலுள்ள சிறு நீரோடையையடுத்த பாலத் தடியில் நின்றிருப்பதாய் கூறியிருந்தபடி நிற்கிறாள். மார்சல், வண்டி பாலத்தைக் கடக்கையில் கையசைத்து மனைவியிடம் விடை பெறுகிறான். இறுக்கம் தளர்ந்து கண்ணீருடன் கையசைப்பாள் மனைவி. மார்சலாக க்ளென்ஃபோர்டு நன்றாக நடித்திருப்பார். (GLEN FORD).

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies‘‘கன்ஹில்லிருந்து கடைசி ரயில் (THE LAST TRAIN FROM GUNHILL) யூமாவிலிருந்த அழகியல் சங்கதிகள் குறைவான படம். ஆனால், விருவிருப்புக்கு பஞ்சமில்லை. 1959-ல் வெளியான இவ்வண்ணப்படத்தை இயக்கியவர் ஜான் ஸ்டர்ஜெஸ் (JHON STURGES). விரு விருப்பாய் படங்களை இயக்கினவர்களில் ஒருவர் இப்படத்தின் சிறப்பான ஒளிப்பதிவை LANG என்பவர் செய்திருந்தார். பெரிய நடிகர்கள் ஆந்தனிக்வின்னும் ANTHONY QUINN கிர்க் டக்ளசும் KIRG DOUGLAS நடித்திருந்தனர். கரோலின் ஜோன்ஸ் ஷல் மக் மார்கனின் (கிர்க் டக்டள் மனைவியாக சிறிது நேரமே வந்தாலும் நன்கு செய்திருக்கிறார். மார்சல் மக்மார்கனின் மனைவி பையனோடு காட்டு வழியில் வந்து கொண்டிருக்கையில் குடிபோதையில் இரு இளைஞர்கள் வழிமறித்து மார்ஷலின் இளம் மனைவியை தாக்குகிறார்கள். மார்ஷலின் பையன் குடிகார இளைஞனின் குதிரையிலேறி ஓடிவிடுகிறான். ஓர் இளைஞன் காவல் இருக்க மற்றொருவன் மார்சலின் மனைவியை புதரில் தள்ளி கற்பழித்துக் கொன்றுவிட்டு ஓடிவிடுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு கெளபாய் கதை. யூமாவும் அதே காலத்து கெளபாய் கதை. யூமாவும் அதே காலத்து கெளபாய் கதைதான். பையன் மட்டும் அழுதபடி அந்நிய குதிரையில் வருவதைக் கண்ட மார்ஷல் மக்மார்கன் பதறுகிறான்.

மகன் வழிகாட்ட ஸ்தலத்துக்கு விரையும் மக் மார்கன் சீரழிக்கப்பட்ட நிலையில் மனைவியின் சடலத்தைப் பார்த்து கதறுகிறான். கயவனின் குதிரை மேலுள்ள சேணத்தில் ஜிஎச் என்று பொறிக்கப்பட்டுள்ளது. என்றால், கன்ஹில் என்றாகிறது. அது அடுத்த ஊரின் பெயர். கதை நடந்த காலத்தி்ல் இன்று வாகனங்களுக்கு நம்பர் ப்ளேட் வைத்து பதிவு எண் தருவதுபோல காவல்துறை குதிரைகள் மற்றும் கோச்சு வண்டிகளுக்கு அவை எந்த ஊரைச் சேர்ந்தவை, யாருக்குச் சொந்தமானவையென்ற விவரங்களை வைத்திருக்கும். சேணத்தில் இந்த விவரமுமிருக்கும். மேலும் மனைவியைக் கெடுத்த இளைஞனிந் துப்பாக்கியும் அவன் குதிரையிலேயே இருந்ததால் அவன் யார் என்பதையும் அவன் ஊரையும் கண்டு பிடிக்கும் மார்சல் மக் மார்கன் அவனைக் கைது செய்ய ரயிலில் கன்ஹில்லுக்குப் போகிறான்.

மார்ஷலின் மனைவியைக் கெடுத்த தன் மகன் …. புரிந்ததை அறியும் அவன் தந்தை மிகவும் வருந்துகிறான். அவனும் மார்ஷலும் இளம் வயதில் நெருங்கிய சினேகிதர்கள். மார்ஷல் கன்ஹில்லுக்கு வந்து விடுதியில் தங்கியிருப்பதையறிந்த கொலையாளியின் தந்தை (ஆந்தனி க்வின்) நண்பனை சந்தித்து அவன் மனைவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துவிட்டு, அதற்கு தன் மகன் சார்பில் மன்னிப்பும் வேண்டுகிறான். தன் ஒரே மகனைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்துச் சென்று தூக்கில் போட்டு விடவேண்டாமென மன்றாடுகிறான். ஆனால் மார்ஷல் சட்டம் நீதி கருணை என்பதற்கு மேலே கெடுத்து கொல்லப்பட்டவள் தன் மனைவி என்பதை அழுத்தத் திருத்தமாய் சொல்லிவிடுகிறான். ‘‘அப்படியானால் நாமிருவரும் எதிரிகள். நீ என் மகனோடு கன்ஹில்லை விட்டு போக முடியாதென்று கூறி போய்விடுகிறான் பையனின் தந்தை. அந்த ஊரிலுள்ள ஒரே விடுதியும் மது வருந்தும் இடமுமான அங்கு வரும் குற்றவாளிப் பையனை துப்பாக்கி முனையில் கைது செய்து விலங்கிட்டு வண்டியிலேற்றி துப்பாக்கி முனையிலேயே ரயில்வே ஸ்டேஷனுக்கு பலத்த எதிர்ப்புகளையும் மீறி போகிறான் மார்ஷல். ரெயில்வே ஸ்டேஷனை நெருங்கும் வேளை- ரயிலும் ஏற்கெனவே வந்து நிற்கிறது. குற்றவாளியின் சினேகிதன் ஒருவன் திடீரென தோன்றி அந்தப் பையனைச் சுட்டு கொன்று விடுகிறான். எப்படியோ தனக்கு வேலை மிச்சம், ஆனால் மனைவியைக் கெடுத்துக் கொன்றவன் தீர்ந்தான் என்று நிம்மதியோடு புறப்படத் தயாராயிருக்கும் ரெயிலின் பெட்டியில் ஏறப்போகிறான் மக்மார்கன். அப்போது பையனின் தந்தையும் மார்ஷலின் நண்பணுமானவன் துப்பாக்கியோடு தோன்றி, தன் ஒரே மகனின் சாவுக்கு அடுத்து மார்ஷல் கன்ஹில்லை விட்டுப் போகக்கூடாதென்று கத்துகிறான்.

ரயில் புறப்படுகிறது. அதுதான் கடைசி ரெயில். அதைத் தவறவிட்டால் நாளை வரை விடுதியில் தங்க வேண்டும். அது உயிருக்கு உத்தரவாதமில்லை. வழி ஒன்றே ஒன்றுதான். ரெயிலும் வேகமெடுக்கிறது. மார்ஷல் துப்பாக்கியை உயர்த்துகிறான். இருவருமே ஏக காலத்தில் சுடுகிறார்கள். செத்து விழுவது ஒருவன்தான். மார்ஷல் மக்மார்கன் கடைசி ரயிலின் கடைசிப் பெட்டியில் தாவி ஏறிக்கொள்ளுகிறான். வண்டி கன்ஹில் கிராம எல்லையைக் கடக்கிறது. கிர்க் டக்ளஸ் மக்மார்கனாகவும், அவரது நண்பனும் குற்றவாளிப் பையனின் தந்தையுமாய் ஆந்தனிக்வின்னும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies

திரைப்படத் தொழில் – வர்த்தக ரீதியாக நம் நாட்டில் இந்திக்கு அடுத்ததாயும் – இந்திக்கு சரிசமமாயும் இருப்பது தமிழ்தான், எனவே ராஜ்கபூர், மெஹபூப்கான், ஆஸிஃப், போன்றோர் தம் படங்களை இந்தியிலிருந்து தமிழில் மட்டுமே மொழி மாற்றம் செய்தார்கள். அந்தவிதமாக “ஆஹ்” – அவன் என்றும், “ஆன்” – கௌரவம் என்றும் மொகலே ஆஸாம் – அக்பர் என்றும், உரோன் கடோலா வானரதமாகவும், நயாதௌர் – பாட்டாளியின் சபதமென்றும் தமிழில் மட்டுமே மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்திப் படங்கள். நிறைய இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் படங்களுமுண்டு. கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், மிஸ்ஸியம்மா, சந்திரலேகா, கட்டபொம்மன் என்று பட்டியல் நீளும். பாடல்களையும் சேர்த்தே மொழி மாற்றம் செய்யும்போது சாஸ்திரிய மரபிலான இசையில் ஒரு மொழிப் படத்தில் இடம்பெற்ற பாடலை இன்னொரு மொழியில் மாற்றுவதில் சில சமயம் கஷ்டம் வந்துவிடுகிறது. மொகலே ஆஸாம் அப்படியான விஷயம். படத்தில் சலீமும் அனார்கலியும் ரம்மியமான பௌர்ணமி இரவில் அரண்மனை நீருற்றருகில் காதலில் கட்டுண்டிருக்கும் காட்சி. எவ்வித உரையாடலுமில்லாத அக்காட்சியை காமிரா மிக அற்புதமாகச் சுழன்றுச் சுழன்று காட்சிபடுத்தியிருக்கும்.

பின்னணியில்தான் சென் மியானின் அதி உன்னத சிங்கார ரசனை தோய்ந்த ஒரு தும்ரி ராகத்தில் உள்ள தாத் படே குலாம் அலிகானின் பிரமாத குரலில் பாடப்படும், “ஜோகன பன்கே…”, எனும் பாடல் வந்தவாறு இருக்கும். தம்பூரின் சுருதியொலி தவிர வேறெந்த இசைக் கருவியும் பயன்படுத்தாத – பயன்படுத்த முடியாத ராக ஆலாபனை போன்ற அந்தப் பாடல் பின்னணியில், பாய்ந்து உயரே பீய்ச்சியடிக்கும் நீரூற்று ரம்மியம். முழு நிலவின் குளிர்ச்சி. நள்ளிரவு சூன்யம். அங்கு சலீமின் மடியில் கண்மூடி கிடக்கும் அனார்கலியின் நெற்றி, மூக்கு, கண் ஓரம், உதடுகள், தாடை, காதுமடல், கழுத்தோரமெங்கும் எதோ பறவையின் மென்மையான இறகால் வருடிக்கொண்டேயிருக்கும் சலீம் – திலிப்குமார் – மதுபாலா நடிப்பில். முதலில் சினிமாவுக்கு பாட முடியாதென்று மறுத்த கான்சாஹிப்பை, இசையமைப்பாளர் காலைப் பிடித்து கெஞ்சாத அளவுக்கு வேண்டி சம்மதித்து உயரியதோர் தும்ரியை படத்தில் அமைத்தார் நௌஷத் அலி. இந்தப் பாடலை எவ்விதத்திலும் தமிழ்ப்படுத்தவும் இயலாதது மட்டுமல்ல, அதற்கொத்து இசையறிந்த குரலும் தமிழில் கிடைக்காது என்ற நிலையில் அந்த ரம்மிய சூழலில் காதலை சொல்லும் விதமாக எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒரு பாடலைப் பாட விட்டார்கள், தமிழில் மொழி மாற்றம் செய்த அக்பரில். இதற்கெல்லாம் பல வருடங்கள் முன்னால் “இராமராஜ்யம்” தமிழில் சிறப்பாக மொழி மாற்றம் செய்யப்பட்டபோது எல்லா இந்திப் பாடல்களும் நல்ல விதமாயே தமிழ்படுத்தப்பட்டன.

அதற்கு பின் ஆங்கில வண்ணப்படமொன்று தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவையும் அங்கே கப்பல் சிதைவால் ஒதுங்கிய ஆண் பெண்களின் கதை, 1949-ல் பிரிட்டிஷ் தயாரிப்பில் ஃபிராங்க் லாவ்ண்டர் [FRANK LAUNDER] எனும் ஜெர்மன் இயக்குனரால் இயக்கப்பட்ட “THE BLUE LAGOON,” ஜின் சிம்மன்ஸ் [JEAN SIMMONS] [DONAL HOUSTON] டொனால் ஹௌஸ்டன், பீட்டர் ஜோனீஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது. என்ன நோக்கத்திலோ இப்படத்தை தமிழில் மொழிமாற்றி, “நீலக் கடல்” என்ற பெயரில் தமிழ் நாடெங்கும் 1952-ல் வெளியிட்டனர். ஹாலிவுட் நடிகர்களின் உதட்டசைவும் பின்னால் குரல் கொடுத்தவர்களின் வசனமும் கொஞ்சமும் சரி போகவில்லை. உதட்டசைவும், முக பாவமும், முடிந்த பிறகும் வசனம் தொடர்ந்தபடியிருந்த நீலக்கடலில். விரைவில் இப்படம் வாபஸ் பெறப்பட்டது.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Movies

மொழிமாற்றத்தின்போது திரைப்படத் துறையில் கலை நுணக்க ரீதியாகக் கடைபிடிக்கப்படும் திருட்டுத்தனமும் தெரிய வருகிறது. வீர பாண்டிய கட்டபொம்மன் இந்தியில், “வீர் அமர்” என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. வீர் அமரிலிருந்து சில காட்சி சட்டகங்களை [அதாவது அசல் கட்டபொம்மன் படத்திலிருந்து] இந்திப் படத்தயாரிப்பாளர் ஒருவர் தமது அசல் இந்திப் படமான, “அங்குலிமால்” எனும் வண்ணப்படத்தின் இடையில் வெட்டியெடுத்து செருகிவிட்டார். அங்குலிமாலனை [பரத் பூஷன்] பிடிக்க அவன் பதுங்கியுள்ள காட்டுக்கு அரசர் படையொன்றை அனுப்புகிறார். இக்காட்சிக்காகத்தான் இந்தியில் மொழிமாற்றம் செய்த வீரர் அமர்-கட்டபொம்மனிலிருந்து ஒரு சிறு பகுதி வெட்டி ஒட்டப்பட்டது. ஜாக்சன் துரையைச் சந்திக்க இராமலிங்க விலாசத்துக்கு கட்டபொம்மனும் அவனது பரிவாரமும் பாடலுடன் செல்லும் காட்சியை [நல்லவேளை இந்தத் தமிழ்ப் பாடல் இந்தி வீர் அமரில் இடம் பெற்றிருக்கவில்லை] வெட்டி, அங்குலு மாலனைப் பிடிக்கச் செல்லும் அரசபடையாக உபயோகித்திருந்தனர்.

மொழி மாற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் நடந்த ஒரு விசித்திரத்தையும் பார்க்கலாம். ஆங்கிலத்தில் பேசும் பிற ஐரோப்பிய மொழிப்படங்கள் அமெரிக்காவில் போலியானவையாகக் கருதப்பட்டன. மிகச் சிறந்த படத்துக்கும் அங்கு இதே மரியாதைதான். MARCEL PROUSI-ன் புகழ் பெற்ற நாவலான, “SWANN IN LOVE” 1984-ல் ஆ்ங்கிலத்தில் படமாக்கப்பட்டது. படத்தை இயக்கியவர் VOLKER SCHLONDROFF எனும் ஜெர்மன் இயக்குனர். மகாபாரதத்தை நவீன வடிவில் தயாரித்து இயக்கிய PETER BROOK-ம் JEAN CLAUDE CARRIERE என்பவரும் இணைந்து தயாரித்தனர். கதாநாயகன் SWANN – ஆக ஆங்கில நடிகர் \ JEREMY IRONS என்பவரும் இத்தாலிய நடிகை ORNELL A MUTTI என்பவர் கதாநாயகி ODETTE. ஆகவும் சிறப்பாய் செய்திருக்கின்றனர். பாலே நடன வடிவுக்கு இணையாக அமைந்திருந்த இந்த அற்புத படத்தை தம் காமிரா கலை நேர்த்தியில் காட்சிபடுத்தியவர் ஸ்வீடிஷ் ஒளிப்பதிவாளரும் இங்மர் பெர்க்மனின் ஒளிப்பதிவாளருமான SVENN NYKVIST படத்தின் ஒவ்வொரு காட்சி சட்டகமும் பதினேழாம் நூற்றாண்டு ஃபிரெஞ்சு ஓவியங்கள் எனும் படிக்குத் தோன்றக் கூடியதாய் ஒளிப்பதிவாக்கியிருக்கிறார் ஸ்வென் நிக்விஸ்ட். இவர் ஸ்வீடிஷ் இயக்குனர் இஸ்மர் பெர்க்மனின் மகத்தான திரைப்படங்கள் எல்லாவற்றுக்கும் ஒளிப்பதிவு செய்த உலகின் தலை சிறந்த திரைப்பட காமிரா கலைஞர்களில் ஒருவர். நாவலின் சூழலை நன்கு உள்வாங்கிக்கொண்டவர்களாய் நடிகர்கள் தம் பாத்திரங்களில் ஒன்றிப் போயிருந்தனர். படத்தின் அற்புத இசையமைப்பு. இந்த ஆஸ்திரிய இசையமைப்பாளரின் இசைக்கோர்வையின் பிரதிபலிப்பை, இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கோர்வையாளர் LOUIS BANKS-யிடமும் காணலாம்.

Bioscope Karan 14th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Adaptation, Dubbed Moviesஇந்த அசல் ஆங்கிலப் படத்தை ஃபிரெஞ்சில் மொழி மாற்றம் செய்து [அமெரிக்காவுக்காக] ஆங்கிலத்தில் சப்டைட்டில்சுகளோடு வந்த பிரதியை நம் தூர்தர்ஷன் ஒளிபரப்பியது. அசலில் ஆங்கிலம் பேசிய ஸ்வான், அமெரிக்காவுக்காக ஃபிரெஞ்சில் மொழி மாற்றத்துக்குள்ளானது. SWANN – ஆக நடிக்கும் ஜெரெமி ஐரன்ஸின் ஃபிரெஞ்சு உச்சரிப்பு ஆங்கிலேயர் உச்சரிப்பது போல்அழுத்தத்தோடு இருக்கும். அசல் ஃபிரெஞ்சுக்காரர் மிக மிருதுவாய் பேசுவர். ஆனால் இந்த நடிகரின் குரல் கம்பீரத்துக்கு ஏற்கெனவே அடிமையாகியிருக்கும் அமெரிக்கர்கள் ஆர்வத்தோடு அக்குரலைக் கவனித்தனரே அன்றி அவரது ஃபிரெஞ்சு உச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை.

அதே சமயம், ஃபிரான்சில் இப்படத்தை திரையிடுவதற்காக மீண்டும் ஒருமுறை ஃபிரெஞ்சு ரசிகர்களைத் திருப்திபடுத்துவதற்காக, உண்மையான ஃபிரெஞ்சு கலைஞர்களைக் கொண்டு மொழிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. எனவே இப்போது இரண்டு ஃபிரெஞ்சு பதிப்புகளில் ஸ்வான் இன் லவ், படம் கிடைக்கவும் ஆதியில் அசல் ஆங்கிலம் பேசிய முதல் பதிப்பு கேட்பாரற்றுப் போனது. இந்தியா போன்ற நாடுகளில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்காய், முதலில் அமெரிக்கருக்கு மொழி மாற்றம் செய்த ஃபிரெஞ்சு பதிப்பையே ஆங்கில சப் டைட்டில்களோடு அனுப்பி வைத்தனர். மொழி மாற்றம் மற்றும் உப-தலைப்புகள் விஷயமாய் ஏராளமாய் பேசலாம். இப்போதைக்கு இது போதும்.

– தொடரும்.

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 



புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்



தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்



தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

தொடர் 13: பயாஸ்கோப்காரன் (ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்) – விட்டல்ராவ்

Bioscope Karan 13th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Tamil titles for English films

தொடர் 13: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள்

TRICK OF THE TRADE – என்பார்கள், ஆங்கிலத்தில் வியாபார தந்திரத்தை. அது பலவகைப்பட்டது. கூட்டம் சேர்க்க, விற்பனை அதிகரிக்க, தேவையை உண்டு பண்ண, வாடிக்கையாளர்களை ஈர்க்க என்று பல்நோக்கு தந்திரங்கள் ஏராளம். எல்லோரும் அறிந்த அந்த வழியில் திரையரங்குக்காரர்களும் தாம்திரையிடும் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் நல்ல கூட்டத்தை – நல்ல வசூலைஎதிர்நோக்கி ஜனங்களை வசீகரித்து ஓடிவரச் செய்தவிதமாய் சேலம் நியூ இம்பீரியல் தியேட்டர், அங்கு திரையிட்ட ஹாலிவுட்திரைப்படங்களுக்கு சூட்டிய ஆச்சரியமான தமிழ்த்தலைப்புகள் தலைமுறைகளின் மறக்க முடியாதநினைவுகளாய் நிலைத்துப்போயின. இந்த வித்தை அங்கிருந்து பிறமாவட்டத்தலைநகர் திரையரங்குக்காரர்களையும் தொத்திக் கொண்டது.

Bioscope Karan 13th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Tamil titles for English filmsஎங்கோ உல்லாசப் பயணம்போகபுறப்பட்ட பயணிகள் விமானமொன்று பழுதடைந்ததால் விமானியானவர் விபத்தின்றி ஆளேயில்லாத சிறு தீவு ஒன்றில் விமானத்தை இறக்கி விடுகிறார். பயணிகளில் ஓர் அழகிய பெண். சிறந்த நீச்சல்காரி. நீச்சல் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பவள். அவளோடு அத்தீவில், அதன் காட்டில் வனவிலங்குகள், பறவைகள் இவற்றோடு சுற்றிவருகையில் ஒரு நகைச்சுவைகதை ஊடாடிபடத்தை சுவாரசியப்படுத்துகிறது. நீச்சல் அழகியாக நடித்த நடிகை எஸ்தர் வில்லியம்ஸ் நிஜ வாழ்க்கையிலே ஒலிம்பிக் போட்டியில் நீச்சலில் தங்கப்பதக்கம் வென்றவர். நிறைய நீச்சல் போட்டிகளில் பரிசு பெற்றவர். அங்கிருந்து சினிமாவுக்கு வந்த அவரை நீச்சல் உடைத்தோற்றத்தில் நடமாட வைத்துகாசுபண்ணியது ஹாலிவுட் சினிமா. அவரோடு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தவர் மிக்கிரூனி. இவர் சின்னப்பையன் போன்ற முகத்தோற்றம் தோற்றம் கொண்ட நடிகர். பார்த்தவுடன் யாவருக்கும் அவர்மீது ஓர்ஈர்ப்பு ஏற்படும். மிக்கி ரூனிகுழந்தை நட்சத்திரமாய் நுழைந்தவர். நிறையபடங்களில் நடித்தவர். ஆஸ்கார் விருது பெற்ற நடிகர். எட்டு முறை விவாகரத்து செய்தவர். ஹாலிவுட் கனவுகன்னிகளில் ஒருவரான ஆவாகார்டனரையும் மணந்து குடித்தனம் செய்துவிட்டு விவகாரத்து செய்தவர். மிக்கிரூனி தமது 93-வது வயதில் 2014-ல் காலமானார். இவரையொத்த ஒரு நகைச்சுவை நடிகர் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் இருந்தார். அவர் பெயர் வாதிராஜ். மிக்கிரூனி தம் இறுதிநாள் வரை சின்னப்பையன் தோற்றத்திலேயே இருந்ததைப் போலவே வாதிராஜும் இருந்தவர். வாதிராஜ் குழந்தைகளுக்கான திரைப்படமொன்றை எடுத்து ஜனாதிபதி பரிசு பெற்றவர். அனேகமாக அவர் ஏ.வி.எம், ஜெமினி மற்றும் வீணை பாலச்சந்தரின் படங்களில் ஆபீஸ் பையனாகவே நடித்திருப்பவர்.

எஸ்தர் வில்லியம்ஸ், மிக்கிரூனி ஆகியோர் நடித்த அந்தப்படம், “ON AN ISLAND WITH YOU” என்பது. இப்படத்திற்கு சேலம் இம்பீரியல் தியேட்டர்காரன் தந்திருந்த தமிழ்தலைப்பு, “ஆளே இல்லாத தீவில் ஆளுக்கு ஆள் ஜல்சா” என்பது. “EVERY DAY IS A HOLIDAY” எனும் படத்துக்கு இம்பீரியல் காரன் தந்த தமிழ் தலைப்பு, “தினோம்ஜல்சா” என்பது. இது இசை, நடனம் நிறைந்த நகைச்சுவைப் படம்.

சமீபத்தில் தமது 103-வது வயதில்காலமானார். புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிர்க்டக்ளஸ். மைக்கேல் டக்ளஸ் எனும் நடிகரின் தந்தை. இவர் “யுலிசெஸ்” “வைகிங்ஸ்” ஆகிய படங்களைத் தயாரித்தும் நடித்தவர். இவரது மற்றொரு புகழ் பெற்ற தயாரிப்பு ஸ்பார்டகஸ் [SPARTACUS]. அடிமை வீரன்ஸ் பார்டகஸாககிர்க்டக்ள சோடுபீட்டர் உஸ்தினோவ், சர்லாரன்ஸ் அலிவியர், ஜேம்ஸ்மேசன், ஆகிய சிறந்த நடிகர்கள் நடித்த படம். ஸ்பார்டா கஸ் 3-டியில் படமாக்கப்பட்டு இந்தியாவுக்கு சினிமாஸ்கோப் படமாக அனுப்பப்பட்டது. ரோமில் அடிமைகளை பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட பயிற்சியளித்து சிறையில் வைத்து அவ்வப்போது போர்களத்தில் அவர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து சண்டையிடச் செய்து அச்சண்டையை அரசு பெருங்குடியினர், பிரபுக்கள், அரசு அதிகாரிகள் என ஆண்பெண்களாய் உயரமான மேடைகளிலிருந்து கண்டுகளிப்பர். பொதுமக்களும் திரண்டு வந்திருந்து பார்த்து மகிழ்வர். ஆரவாரிப்பர். வல்லவன் ஒருவன் சண்டையில் மற்றவனை கொல்லும் வரை சண்டை நீடிக்கும். எல்லோரும் உற்சாக மூட்டி கொல்லும் படிக்கான கை விரல் முத்திரையைக் காட்டுவார்கள். இந்த க்ளாடியேட்டர்கள் சண்டை ஒன்று ஸ்பான்லி கூப்ரிக் [STANLEY KUBRICK] படமாக்கியிருக்கிறார். முதற்பாதி படம் பண்டைய ரோமில் அடிமைச் சந்தையில் அடிமைகளைத் தேர்ந்தெடுத்து வீரர்களாக [GLADIATORS] பயிற்சி அளித்து ஒருநாள் களத்தில் இன்னொரு வீரனுடன் சண்டையிட்டு ஒண்ணு அவனைக் கொல்லவேண்டும் அல்லது அவனால் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்படுகிறது.

Bioscope Karan 13th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Tamil titles for English filmsமுதலில் படத்தை இயக்குவதாயிருந்த மற்றொரு புகழ்பெற்ற இயக்குநர் THOMAS MANN என்பவர் விலகியதால் ஸ்டான்லி கூப்ரிக்படத்தை இயக்கினார். ஒரு சண்டையில் கருப்பினவீரன்வெள்ளையின கிரேக்கனானஸ் பார்டகஸை தோற்கடித்துவிட்டு சபையோரை பார்க்க சபையும், பொதுமக்களும் தரையில் வீழ்ந்தவனைக் கொன்றுவிடுமாறு கருப்பின வீரனை கட்டளையிடுகிறார்கள். சற்றுமுன்வரை இருவருமே ஒரே சிறையறையில் நட்போடு இருந்தவர்கள். கருப்பின வீரன் சண்டையிலும் தருணத்தில்கூட நண்பனைப் பார்த்து புன்னகைபுரியும் கட்டமும், டைரக்ஷனும் நடிப்பும் அபாரம். கருப்பினவீரனாக நடிக்கும் கருப்பு நடிகர் வூடிஸ்ட்ரோட் [WOODE STRODE] சிறந்த சில்லரை நடிகர். இவர் ஜான்ஃபோர்டு, சர்ஜியோலியோன் ஆகியோர் இயக்கத்தில் சார்ஜண்ட்ரட்லஜ் போன்ற படங்களில் சிறப்பாக செய்திருப்பவர். நண்பனைக் கொல்லமறுத்தகருப்பின வீரன் அரச குலத்தினர் அமர்ந்துள்ள காலரி மீது வேங்கைபோலபாயவும், சிப்பாயின் வேல்பாய்ச்சலில் இறந்துபோகிறான். அந்த குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டுஸ்பார்டகஸ்தப்பி ஓடிவிடுகிறான். பிறகு சிறைகளை உடைத்து எல்லாவீரர்களையும் விடுவித்து கொடுங்கோல்ரோம அரசை எதிர்த்து போராடும் படையாக ஆக்குகிறான். ரோமானிய அரசியல் செனேட்டிலும் ஆட்சிப்பிடிப்புக்காக குழப்பங்கள், சூது, துரோகம், சதியெல்லாம் ஏற்படுகிறது. ஸ்பார்டகஸ்ஸின் புரட்சி பாதியில் நாசமாகி அவனை சிலுவையில் அறைகிறார்கள். தன் குழந்தையை சாகும் தருவாயில் எதிர்காலத்தில் ரோமானிய அடிமைகளை விடுவிக்கும் வீரனாய்வளரட்டுமென வேண்டிவாழ்த்தி உயிர் துறக்கிறான் ஸ்பார்டகஸ். இத்திரைப்படத்தின் தொடக்கத்தில் க்ரெடிட் விவரம்காட்டுவது ஒரு ரோமானிய மனித முகத்தைக் கொண்ட சிற்பத்தின் பின்னணியில். அச்சிற்ப முகத்தை காமிராவெவ்வேறு கோணங்களில் மாறிமாறி காட்டிக்கொண்டே உடன்வாள், ஈட்டி என்பவையும் காட்டும்படம். இறுதியில் முகச்சிற்பம் பல விரிசல்களோடு சிதறுவதுமிக அற்புதமாயிருக்கும். பலராலும் பாராட்டிக் குறிப்பிடப்பட்ட இந்த ஆரம்பத்தை சற்றுதாமதமாகவந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான்கென்னடி அவர்கள் அந்த CREDITS காட்சியை மட்டும் பார்ப்பதற்காக மீண்டும் தியேட்டருக்கு வந்து அதை மட்டும்பார்த்துவிட்டுப் போனார்.

ஸ்பார்டக்ஸ் என்ற படத்திற்கு நியூ இம்பீரியல் காரன்தந்திருந்த தமிழ்த் தலைப்பு:- “செத்தாலும் விட மாட்டேன்” ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களில் சிறந்தவர்களில் ஜான்ஹுஸ்டன் [JOHN HUSTON] ஒருவர். நடிகரும்கூட. இவரதுபுகழ்பெற்றமாபெரும்திரைக்காவியம் “BIBLE” இந்த கிறிஸ்தவ மத சரித்திரப் படத்தில் நோவாவின் மரக்கலம் பகுதியில் நோவாவாக ஜான்ஹுஸ்டன் நடித்திருக்கிறார். இவரது இயக்கத்தில் மற்றொரு சிறந்தபடம், “THE SINGER NOT THE SONG” [பாட்டை விட பாடகனே மேலானவன்] இதன் இம்பீரியல் தமிழ்த் தலைப்பு : “காட்டான் மவனா, நாட்டான் மவனா?” ஒரு முரட்டுமனிதனை தேவாலயபாதிரியார் நல்வழிக்கு கொண்டு வரும் நல்ல படம்.

Bioscope Karan 13th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Tamil titles for English filmsகிரேக்க புராணத்தில் வீரர்கள், அழகிகள், கடற்பயணம், ஒரு கண்ராட்சதர்கள், கடவுளர்கள், குட்டி தேவதைகள் என்று பிரதானமாயிருப்பவை. ஏராளமான கதைகள் இவைகளைக் கொண்டு. ஏராளமான திரைப்படங்களும் இக்கதைகளை வைத்து, அப்படியான கதை ஒன்றின் வீர இளைஞன் மாசிஸ்ட் ஒரு கண் ராட்சதர்களை [CYCLOP] கொன்று அவனால் சிறைவைக்கப்பட்ட அழகிய இளவரசியை மீட்கும் சாகசப்படம், ”MACISTE AMONG CYCLOPES”. இது ஒரு இத்தாலிய திரைப்பட நிறுவனத் தயாரிப்பு. இப்படத்துக்கான இம்பீரியலின் தமிழ்த்தலைப்பு, “அடியில் பீமன், அழகில் மன்மதன்.”

திகில் படங்கள் தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்புகளாய் திரையிடப்பட்ட சமயம், அவற்றில் ஒன்று, 13 GHOSTS. இதற்கான இம்பீரியல் தமிழ்த்தலைப்பு, “ஐயோ பேய்! ஐயோ பிசாசு!” இப்படத்தை இயக்கிய WILLIAM CASTEL, ஆல்ஃப்ரெட்ஹிட்ச்காக்கிற்கு அன்று ஒரு போட்டி. இவருடைய மற்றொரு திகில் படம் உண்மையிலேயே நல்ல தோர்மர்மப்படம், அதன் பெயர் SHADOW OF THE CAT என்பது. நிறைய கொலைகள் நடக்கின்றன. கொலை விழும் ஒவ்வொரு இடத்திலும், சமயத்திலும் கருப்புப்பூனையொன்று ஓடி மறையும். இந்தப் பூனைக்கும் கொலைகாரனுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகசந்தேகிக்கும் குற்றவியல் நிபுணர்கள் பூனையைப் பிடிப்பதில் திசை திரும்புகின்றனர். பழைய தமிழ் சினிமா படத்தின் பாட்டுப்புத்தகங்களில் ஒவ்வொரு படத்தின் கதைச்சுருக்கமும் தரப்பட்டிருக்கும். முப்பத் தெட்டு முப்பத்தொன்பதிலிருந்து 50-வரை வெளிவந்த படங்களுக்கான பாட்டுப் புத்தகங்களில் தமிழில் கதைச்சுருக்கத்தோடு அதையே ஆங்கிலத்திலும் பதிப்பித்திருப்பார்கள். கதையை முடிக்காமல் இறுதி வரியாக, “மீதியை வெள்ளித்திரையில் காண்க” என்று தரப்பட்டிருக்கும். அதைப்போல ஷேடோ ஆஃப்தி கேட்படக்கதையையும் நான் முடிக்காமல் விடுகிறேன். ”SHADOW OF THE CAT” என்பதற்கு சேலம் இம்பீரியலில் சூட்டப்பட்ட தமிழ்த் தலைப்பு, “பேய் புடிச்ச பூனை” (சைகோ படத்தைப் பார்த்து பயப்படாதவர்களுக்கு மட்டும்) என்று அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுமிருக்கும். வில்லியம் கேஸில் அறுபத்து மூன்றின் இறுதியில் ஒரு அருமையான திகில் படத்தை எடுத்தார். அதன் அசல் தலைப்பு ஆங்கிலத்தில், ”HOMICIDAL” என்பது. அதற்கான இம்பீரியல் தலைப்பு, “கொலையழுத்தும் தலையெழுத்து” இந்தப்படம் சென்னை பாண்டி பஜாரிலிருந்த சாஹீனி தியேட்டரில் வெளியான போது பயங்கரமான திகில் விளம்பரம் செய்யப்பட்டது. எல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்ததை நான் தமிழில் தருகிறேன்:-

Bioscope Karan 13th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Tamil titles for English films“கோழைகள் இப்படத்தைப் பார்க்க தயவு செய்து வர வேண்டாம். தவறி வந்துவிட்டால் தியேட்டருக்குள் கோழைகளுக்காக பிரத்தியேக கோழைகள் மூலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். அங்கு போய் விடவும். பலஹீனமான இதயம் கொண்டவர்கள் கண்டிப்பாக ஹோமிசைடல் படத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கோழைகள் மூலைக்கு வருகிறவர்கள் அங்கிருக்கும் சிறு படிவத்தை பூர்த்தி செய்து தாங்கள் நிஜமாகவே கோழைகள்தான் என்று உறுதியளித்து கையொப்பமிட்டால் டிக்கட் கட்டணத்தை வரி நீங்கலாகத் திருப்பித் தரப்படும் முதலில் உங்களை கோழை என்று ஒப்புக் கொள்ளுங்கள். இப்படத்தில் இறுதி காட்சி மிக மிக டென்சனை பார்வையாளர்களுக்கு உண்டாக்கும். ஒரு வயதான பணக்காரியைத் தீர்த்துக் கட்ட முயற்சிக்கும் காட்சி படத்தின் இறுதியில் வருகிறது. அப் பெண் இரு கால்களும் சுவாதீனமிழந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவள். அவள் மாடியிலிருந்து சக்கர நாற்காலியில் அதற்கான சரிவுப் பாதையில் கீழே இறக்கப்படுகிறாள். உடனே திரையில் ஒரு கடிகாரம் Timepiece தோன்றி அதன் முட்கள் நகர டிக்.. டிக் ஓசையோடு படத்தின் இயக்குனர் வில்லியம் கேஸிலின் குரலும் கேட்கிறது. அவர் நம்மைப் பார்த்து பேசுகிறார்.

இன்னும் பத்தே பத்து நொடிகளில் எதில் பார்க்காத திடுக்கிடும் நிகழ்வு நடந்துவிடும். உங்களுக்கு ஓர் இறுதி சந்தர்ப்பம் தருகிறேன். பத்து நொடிகள் முடிந்ததும், உங்கள் முன் உள்ள கடிகாரத்தில் ஒரு மணி யோசை கேட்கும். அதற்கு முன்னால் முடிவின் திகிலைத் தாங்க முடியாத இதய பலகீனர்களும் கோழைகளும் எழுந்து கோழைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மூலைக்கு போய் விடுங்கள். கட்டணம் திருப்பித் தரப்படும்.

சாஹ்னிஸ் என்பது ராஜகுமாரி தியேட்டர் போக்கியத்துக்கு விடப்பட்டிருந்த காலத்தில் லீஸில் எடுத்திருந்த வட நாட்டிவர் தந்திருந்த பெயர். தியேட்டருக்கு ஓரமாய் கோழைகள் மூலை Cowards Corner என்று போர்டு போட்ட இடமிருந்தது. சேலம் இம்பீரியலில் இதெல்லாம் எதுவுமில்லை. ஆனால் முடிவு என்னவோ புஸ்ஸென்றாகிவிடுகிறது. அதனால் உண்மையிலே்யே நல்ல மர்மபடமான ஹோமிசைடல் தோல்வியுற்றது. அதற்குக் காரணம் தயாரிப்பாளர்கள் கொடுத்த அதீத எச்சரிக்கைகளே. மேலும் ஹிட்ச் காக்கின் எல்லா திகில் படங்களும் வெறும் திகில் படங்கள் மட்டுமல்ல. ஒரு நல்ல கலையழகுமிக்க ART FILMகு உண்டான அழகியல் லட்சணங்கள் கொண்டவை. வில்லியம் கேஸிலின் படங்களில் அழகியல்தன்மை சூனியம். ஷேடோ அஃப் தி கேட் படம் போலவே கிட்டதட்ட இருப்பது ஹிட்ச்காக்கின் To CATCHA THIEF படம். நான் குறிப்பிடும் அழகியல் விசயம். பின்னதிலிருப்பதுபோல முன்னதில் இருக்காது. இவை இரண்டுக்குமே ஆர்தர் கானண்டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் சிறந்ததும் முக்கியமானதும் திரைப்படமாக்கப்பட்டதுமான THE HOUND OF THE BASKERVILLES (தி ஹொண்ட் ஆஃப் தி பாஸ்கர்வில் மூலமாகிறது. இக்கதையைச் சற்றே மாற்றி இந்தியில் பிரபல இசையமைப்பாளர் ஹேமந்த குமார் முகர்ஜியும் ஒரு படம் எடுத்து வெற்றியும் பெற்றார் அந்தப் படம், பீஸ் சால் பாத்.’’

Bioscope Karan 13th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Tamil titles for English films

ஒரு ஃபிரெஞ்சு திரைப்படம் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இம்பீரியலில் திரையிடப்பட்டது. AND GOD CREATED WOMAN இந்த ஆங்கிலத் தலைப்புக்கு இம்பீரியல் காரன் இட்ட தமிழ்த் தலைப்பு, பிஞ்சிலே பழுத்த ஃபிரெஞ்சுக்காரி ரோஜர் வாடிம்ஸ் என்பவர் இயக்கிய அரிய படம் ROGER VADIMS ஒரு இளம் பெண் மாடல் பெண்ணாகவும் நடிகையாகவும் வாழ்க்கையில் நுழைகையில் ஆணுலகம் எப்படியெல்லாம் அவனை வைத்து விளையாடுகிறது என்பதை வெகு பூடகமாய்ச் சொல்லும் படம், ஃபிரெஞ்சு பெண்ணாக Brigitte Bardot எனும் இளம் நடிகை அபாரமாய்ச் செய்திருக்கிறார்.

இந்தியாவிற்கு வந்து அமெரிக்கா,ரஸ்யா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் நிறைய திரைப் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் படங்களில் நமது கலைஞர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய நடிகர்களில் முன்னோடியாயிருந்தவர்களுள் சொல்லப்படுவர் ஐ.எஸ். ஜோஹர். ஒரு கோமாளி, பம்பாயிலிருந்து வெளிவரும் ஃபிலிம் ஃபேர் இதழில் கேள்வி பதில் பகுதி இவர் பொறுப்பிலிருந்தது அதில் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவும், ஜோஹரின் அவற்றுக்கான பதில்களும் தென்னிந்திய சினிமாவையும், கலைஞர்களையும் கேலியும் கிண்டலும் நக்கலும் செய்வதாயிருந்தவை. தமிழகப் பத்திரிகைகளில் அவரது நக்கல்- கேலி- கிண்டலுக்கு எதிராக நிகரான பதில்கள் உடனுக்குடன் தரத் தவறியதில்லை. ஐ.எஸ்.ஜோஹர் அதிர்ஸ்டசாலி. அந்த முகத்துக்கும் நடிப்புக்கும் டேவிட் லீன் படமான Lawrance of Arabia வில் ஓரிரு காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே. இதற்கு முன்னும் இவர் ஓரிரு ஹாலிவுட் படங்களில் நடித்தவர். அதில் ஒன்று இந்தியாவில் காடுகளில் படமாக்கப்பட்ட HARRIBLACK AND THE TIGER, ஹாரி பிளாக் அண்டு தி டைகர். என்ற புலிவேட்டைப் படத்துக்கு இம்பீரியர்காரன் அளித்த தமிழ்த் தலைப்பு ”ஹரிகர கருப்பனும் பயங்கர புலியும்”. இந்த சமயத்தில் இம்பீரியலுக்கு ஹாலிவுட் திரைப்படங்கள் கிடைப்பது அரிதாகும்போது, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ரஷ்ய திரைப்படங்கள் கிடைத்தன. அவற்றில் மிகவும் பிரபலமான ரஸ்ய படம் ஒன்று, இரண்டாம் உலகப் போர் நிகழ்வு ஒன்றைப் பற்றியது. T 32 TANK என்பது. T3 2 கவச மோட்டார்கள் ரஷ்ய போர் அரங்குகளில் நிறைய சாகசங்கள் புரிந்தவை. ஜெர்மனி படையில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்திய கவச மோட்டார்கள். அதற்கு இம்பீரியல்காரன் அளித்த தமிழ்த் தலைப்பு ”இது ஒரு யுத்தப் படம்”.

Bioscope Karan 13th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies. Tamil titles for English films

அப்போதெல்லாம் ரஷ்ய திரைப்படங்களில் மக்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். மிக மெதுவான நகர்வு, ஆக்ஷனில் விரு விருப்பமில்லை என்று அலட்சியப்படுத்துவார்கள். இந்த சமயம் இத்தாலியைச் சேர்ந்த கலைஞர்கள் சிலர் மேற்கத்திய சாகசக் கதைகளை WESTERN SPAGHETTI சங்கிலித் தொடராய் படமெடுத்து வசூல் சக்கரவர்த்தியானார். அவர்களில் மிகவும் புகழ் பெற்ற இயக்குனர் செர்ஜியோ லியோன் SERGIO LEONE இவரது படங்களின் நட்சத்திர நடிகர்கள் கிளிண்ட் ஈஸ்ட்வுட், மற்றும் லீவான் க்ளீஃப் ஜான் ஃபோர்டு இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட அற்புத வெஸ்டெர்ன் கெளபாய் திரைப்படங்களின் காலம் முடிந்த பின் வேறுவிதமான வெஸ்டெர்ன் படங்களாய் செர்ஜியோ லியோன் எடுத்தார். இவை வட அமெரிக்க கெளபாய் சாகசக் கதைகளல்ல. மாறாக மெக்சிகோ உள்ளிட்ட ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்க கெளபாய்களின் சாகசக் கதைகளைக் கொண்ட படங்கள். இவரது படத்தின் முதுகெலும்பு போன்றது அதில் கோர்வை படுத்தப்பட்ட ஸ்பானிஷ் தென்னமெரிக்க இசை. செர்ஜியோ லியோனின் இணை பிரியா இசைக் கோர்வையாளர் என்னியோ மோரிகோன். ENNIO MORRICONE FISTFULL OF DOLLARS, FOR A FEW DOLLARS MORE மற்றும் THE GOOD, BAD, AND UGLY எனும் படங்களின் க்ரெடிட் இதை முதல் படம் முழுக்க முறைப்படுத்தப்பட்ட என்னியோ மோரிகோனின் ஸ்பானிஸ் கிடார் மற்றும் இதர கருவிகளாலான இசைக் கோர்வை அபாரமானது.

செர்ஜியோ லியோனின் ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டால்லர் ( Fistful of Dollars) படத்துக்கு சேலம் இம்பீரியல் தந்த தமிழ்த் தலைப்பு. ”இன்னா நெனச்சிக்கினே?” என்பது செர்ஜியோ லியோனுக்கு முன்னும், பின்னும் சம காலத்திலுமெல்லாம் வெவ்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களால் நிறைய தென்னமரிக்க வெஸ்டர்ன் படங்கள் வந்திருக்கின்றன. அவைகளில் வெகுஜன ரீதியாக புகழ் பெற்றிருந்தாலும் செர்ஜியோ லியோன் படங்களில் அங்காங்கே கிடைக்கும். அரிதான அழகியல் சங்கதிகள் இருக்காது. இவ்வகைப் படங்களில் குதிரைச் சவாரி, ரயில் பயணம், கோச்சு வண்டிகள், சவுக்கடி, துப்பாக்கிச் சூடு, வெடி மருந்து, தூக்கிடல், கொலைகள், கொள்ளை என்பவையிருக்கும். இப்படங்களில் கொலைகள் விழுவதால், ஊரில் உடனுக்குடன் சடலங்களை அப்புறப்படுத்தி சவப் பெட்டியிலிட்டு அடக்கம் செய்யும் காரியமும் இன்றியமையாதிருக்கும். நல்லடக்கம் கருதி ஃபாதிரியாரும், சவப் பெட்டி தயாரித்து விற்பவனும் இருப்பார்கள். அப்படியான ஒரு படம் ”DJANGO” ஃபீராங்கோ நீரோவென்ற இத்தாலிய சாகச நடிகர் நடித்தது. ஜாங்கோவிற்கான இம்பீரியல்காரனின் தமிழ்த் தலைப்பு ”அடே சண்டாளா! இதோ உன் சாவுக்கு முன்னால் ஒரு சவப் பெட்டி தயார்”.

இன்னும் ஏராளமான மேனாட்டு திரைப்படங்களின் ஆங்கிலப் பெயர்களுக்கான வசீகரமிக்க தமிழ்த் தலைப்புகளை சேலம் இம்பீரியல் தியேட்டர் தலைப்பு நிபுணர் வாரி வழங்கியிருக்கிறார்.

– தொடரும்.

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 



புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்



தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்

தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

தொடர் 12: பயாஸ்கோப்காரன் (சினிமா பார்க்க சீசன் டிக்கட்) – விட்டல்ராவ்

Bioscope Karan 12th Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies and Dramas. Book Day

தொடர் 12: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்



சினிமா பார்க்க சீசன் டிக்கட்

மின்சார ரயில் பயணத்துக்கு, நகரப் பேருந்துப் பயணத்துக்கு சீசன் டிக்கட் வழங்கப்படுகிறது. சினிமா பார்ப்பதற்கு ஒரு தியேட்டர் சீசன் டிக்கட் வழங்கிய தென்பதை கேள்விப்பட்டிருப்பீர்களா? சேலத்து நியூ இம்பீரியல் தியேட்டர் அதில் திரையிடப்படும் படங்களுக்கு சீசன் டிக்கட்டுகளை ஒரு காலத்தில் வழங்கிப் பார்த்து கொஞ்ச மாதங்களில் நிறுத்திக் கொண்டது. இந்தத் தகவலை எனக்குச் சொன்னவரும் துரை பழநி வேலன்தான். அந்த சமயம் நான் நாலாவது படிவத்துக்கு (ஒன்பதாம் வகுப்பு) வந்துவிட்டேன்.

இந்த சினிமாவுக்கான சீசன் டிக்கட் ஏற்பாடு எப்படியென்பதைப் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஆங்கில சினிமா ரசிகர்களுக்கு பரவலாக அறியப்பட்டவராய், அவரது படங்கள் பிரபலமானவையாக ஓடியிருக்கும் பட்சத்தில், பளிச்சிட்டவராய் பதிந்திருப்பார். பெயரைச் சொன்ன மாத்திரத்தில் சட்டென்று நினைவுக்கு வருவதோடு அவரது திரைப்படங்களும் கூடவே நினைவுக்கு வந்துவிடும். இப்படிப்பட்ட சில டைரக்டர்களின் படங்களை வாரம் இரு படங்கள் போல ஓரிரு மாதங்களுக்கு திரையிடப்பட்டன. பிரதி மாதம் சீசன் டிக்கட் வழங்கப்பட்டது. சீசன் டிக்கட்டுக்கான கட்டணம் மிகவும் குறைவு. இயக்குனர்கள் வரிசையில் ஜான் ஃபோர்டு, வின்செண்ட் மின்னெல்லி ஜார்ஜ் கூக்கர், ஆல்ஃபர்டு ஹிட்ச்காக் ஆகியோரின் படங்கள் சீசன் டிக்கட்டில் போடப்பட்டன. ஓர் இயக்குனரின் இரு படங்கள் வாரத்தில் இரண்டு என, ஒவ்வொன்றும் மும்மூன்று நாட்கள் திரையிடப்பட்டன. ஒரு சீசன் டிக்கட்டில் இரு படங்களையும் வாரம் முழுக்கவும் பார்க்கலாம். ஒரு டிக்கட்டை இருவர் பகிர்ந்து கொண்டும் பார்க்கலாம். சீசன் டிக்கட்டின் சொந்தக் காரருக்கு எவ்வித ஐ.டி. யும் அந்த காலத்தில் வேண்டப்படவில்லையாதலால், Aயின் சீசன் டிக்கட்டில் Bயும் பார்க்கலாம். எனவே இருவர் சேர்ந்து கூட்டாக ஒரு மாதாந்திர சீசன் டிக்கட் எடுத்து ஒரு படத்தை இருவரும் பார்க்கலாம். நானும் என் நண்பனும் சேர்ந்து எடுத்த சீசன் டிக்கெட்டில் நிறைய படம் பார்த்தோம். இயக்குனர் வரிசையில் Howard Hawksன் ஃபாரோக்களின் தேசம் (Land of the Pharaohs) குறிப்பிடத்தக்க படம். எகிப்திய நாகரிகம், பண்பாடு, பிரமிடுகள் கட்டப்பட்ட விதம், நோக்கம் என்று சுவாரசியமான கதையைக் கொண்ட படம். 1955-ல் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஜாக் ஹாக்கின்சும், ஜேம்ஸ் ராபர்ட்சன் ஜஸ்டிஸ் என்பவர்கள் நடித்திருந்தனர். ஹோவார்டு ஹாக்ஸ் Red River, Rio Bravo Hatari என்ற ஆக்சன் படங்களை ஜான் வைனை நடிக்க வைத்து சிறப்பாக எடுத்தவர்.

The Essentials: 5 Great Howard Hawks Films

ஜார்ஜ் கூக்கர் என்றதுமே அழகிய பெண்களும் நிறைவேறாத காதலும் நினைவுக்கு வரும் ஹாலிவுட் இயக்குனர்களில் பெண்களில் பெண்களை மிகவும் ரசிக்கும் வகையிலும் பெண்கள் ஸ்பெஷலிஸ்ட்டென்றும் அழைக்கப்பட்டவர். கூக்கரின் சில சிறந்த படங்கள் நியூ இம்பீரியலில் சீசன் டிக்கட் வரிசையில் திரையிடப்பட்டன. அவற்றில் காமில்லி (Camille) பவானி ஜங்ஷன் என்பவை. காமில்லி மிகவும் பேசப்படவேண்டிய படம். எம்.ஜி.எம். நிறுவனத்தால் 1936-ல் எடுக்கப்பட்ட இக் கருப்பு வெள்ளை திரைப்பட ஜார்ஜ் கூக்கரால் (George Cukor) ஒரு கவிதையைப் படிப்பது போன்ற காட்சி நகர்வில் படைக்கப்பட்ட அரிய படம். கூக்கர் தம் படங்களில் பெண்களை மிக நளினமாகவும் அவர்களின் உடல் வடிவமைப்பின் ஒரு சில பகுதிகளை விரசமற்று கலைத் தன்மையான இலை மறைவுக்காய் மறைவுத் தோற்றங்களாக காட்டுபவர் அறுபதுகளில் ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் நாடகம் பிக் மேலியனை (My Fairlady என்று ரெக்ஸ் ஹாரிசன், ஆட்றீ ஹெப்பர்ன் முக்கிய பாத்திரங்களில் மிக சிறப்பாக நடிக்க இசையும் நாடகமுமாய் கூக்கரின் அற்புத இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட படம் சென்னை சஃபையர் அரங்கில் முப்பது வாரங்களுக்கு ஓடியது. இப்படத்தைத் தம் இறுதி காலத்திலளித்த பேட்டியொன்றில், மிரினாள் சென் மிக உயர்வாகப் பாராட்டியிருக்கிறார்.

ஜார்ஜ் கூக்கர் 1956-ல் இயக்கிய முக்கிய படம் Bhowani Junction இம்பீரியலில் வெளியானது பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் போராட்டச் சூழலில் இந்தியா கலவரத்திலிருக்கையில் விக்டோரியா ஜோன்ஸ் எனும் ஆங்கிலோ இந்தியப் பெண் லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருகிறாள். இந்த சமயம் வடமேற்கு பகுதியில் கிளர்ச்சியில் நுழைந்த இடது சாரிகள் ரெயில்வே இருப்புப் பாதைகளை முக்கிய இடங்களில் நாசவேலை செய்ய விருப்பதாய் ஆங்கில அரசு அறிந்து அதை சமாளிக்க ராணுவத்தை உஷார் படுத்திய இடங்களில் முக்கியமான ரெயில்வே சந்திப்பு, பவானி ஜங்ஷன் அது தற்போது பாகிஸ்தான் பகுதிக்குள் இருக்கிறது. ராணுவ தளபதி கர்னல் ராட்னி சாவேஜ் என்ற ஆங்கிலேயர் இடது சாரி போராளிகள் இருப்புப் பாதை, புகை வண்டி ஸ்டேசன்களில் நாசவேலை செய்ய விருப்பதைத் தடுக்கும் பொருட்டு பவானி ஜங்ஷனில் தம் துருப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார். அவருக்கும் விக்டோரியாவுக்கும் மெல்லிய உறவு மலர்கின்ற சமயம் போராட்டம் வலுக்கிறது.

Ava Gardner in Bhowani Junction (1956)

அதே சமயம் மற்றொரு வெள்ளைக்காரன் விக்டோரியாவைக் கெடுக்க முற்படுகையில் விக்டோரியா அவனைக் கொன்று விடுகிறான். அவள் மீது குற்றம் பதிவாவதோடு பிரிட்டிஷ் அதிகாரியை பாதிக்கு இந்திய ரத்தம் ஓடும் ஆங்கிலோ இந்தியப் பெண் கொன்றாள் என்பதாக பார்க்கப்படுகிறது. தனது உறவு பிரிட்டனுடனா அல்லது இந்தியாவுடனா என்ற கேள்விக்கான போராட்டத்தில் விக்டோரியா இருக்கும் நிலையில் விடுதலை பெறுகிறாள் ஜான் மாஸ்டரின் அரிய நாவல் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.

சாகச நிகழ்வுகளையும் வீரர்களையும் வைத்து பிரெஞ்சில் நிறைய நாவல்களை எழுதியவர் புகழ் பெற்ற அலெக்சாண்டர் டூமா (Alexandre Dumas) இவரது மூன்று கத்தி வீரர்கள் இரும்பு முகமூடி மனிதன் போன்றவை தமிழில் உட்பட மேல்நாடுகளில் (உத்தம புத்திரன், விஜயபுரி வீரன் என்பவை) திரைப்படமாகியிருக்கின்றன. டூமாவென்றால் கோட்டை, குதிரை, கத்திச் சண்டை சாகசம் காதல் என்றே அறியப்பட்டவரின் ஒரேயொரு நாவல் சண்டை, சாகசம் எதுவுமேயில்லாத காதல் கதையாக இருக்கிறது. அது தான் காமில்லி (camille) மார்க்ரெட் பாரிஸில் பெரிய நடனக்காரி, பேரழகி படித்த பெரிய இடத்து வாலிபன் ஆர்மண்டு துவால் என்பவன் பேரில் ஆழ்ந்த காதல் கொள்ளுகிறாள். ஆனால் ஆர்மண்டின் தந்தை மகனை வெளிநாட்டு தூதுவப் பணியில் அமர்த்த முயற்சிக்கும் வேளையில் மார்கரெட்டை சந்தித்து தன் மகனை விட்டு விடும்படியும் அவனுக்குத் தான் அமைத்துத் தரவிருக்கும் எதிர்காலத்தைக் கெடுக்க வேண்டாமென்றும் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறார். அவளுடைய மோசமான வாழ்வின் பின்னணியை அவர் அறிவார். எனவே மகன் வாழ்வை யோசித்து அப்படி செய்கிறார். அவள் யோசித்துவிட்டு அதற்கு சம்மதிக்கிறாள். ஆர்மண்டு அவளை சந்திக்கையில், அவன் மீது தனக்கு காதல் எதுவும் கிடையாதென்று கூறிவிடுகிறாள். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் காதலிப்பதைத் தவிர்க்க முடியாது தவிக்கின்றனர். மார்கரெட் மோசமான நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு படுத்துக் கிடக்கையில் ஆர்மண்டு சென்று பார்த்து அந்த நிலையிலும் அவள் பேரில் தனக்கிருக்கும் மாறாத ஆறாத காதலை தெரிவித்து அழுகிறான். தான் மறுதலித்தும் அவன் தன் மேல் மாறாக் காதல் வைத்திருப்பதையறிய வரும் மார்கரெட் நிம்மதியோடு உயிரை விடுகிறாள்.

Camille (1936 film) - Wikipediaகாமில்லி என்பது குளிர் பிரதேசத்தில் வருட முழுக்க மலரும் ஒரு அழகிய மலராகும். மார்கரெட் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தவள். காமில்லியாக புகழ் பெற்ற நடிகை கிரேட்டா கார்போவும் (Greta Garbo) ஆர்மண்டாக ராபர்ட் டேலரும் Robert Taylor அற்புதமாக நடித்திருந்தார்கள். கிரேட்டா கார்போவை அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படத்தின் நடிப்புக்கென பரிந்துரைக்கப்பட்டார். மூன்று அகாடெமி பரிசுகளைப் பெற்ற காமில்லியில் மிகவும் சிறப்பான அம்சம் அதன் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு. காமிரா கலைஞர் வில்லியம்ஸ் டானியல் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவாக்கியிருந்தார்.

நியூ இம்பீரியல், சினிமாவுக்கு சீசன் டிக்கட் அறிமுகப்படுத்திய சமயம் சேலம் முனிசிபல் கல்லூரி பி.யூ.சி. வகுப்புக்கு ஆங்கில இலக்கியத்துணை பாடமாக ஷேக்ஸ்பியரின் ஜீலியஸ் சீசரை வைத்திருந்தது. மாணவர்கள் ஷேக்ஸ்பியரை மேலும் அறிந்துகொண்டு இலக்கிய அறிவு பெருகட்டுமென இம்பீரியல் தியேட்டர், ஷேக்ஸ்பியர் நாடகங்களை திரைப்படங்களாக ஆக்கிய அன்றைய புகழ் பெற்ற சில படங்களை சீசன் டிக்கட் வரிசையில் திரையிட்டபோது ஜீலியஸ் சீசர் வெளியானது. அது பள்ளி ஆண்டு விழா சமயமாதலால் கீழ் வகுப்பு, மேல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கில மொழிகளில் கட்டுரை, பேச்சு, நாடகப் போட்டிகளிருந்தன. மேல் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக ஆங்கிலத்தில் நாடகமொன்றிலிருந்து எதாவது பகுதியை மனனம் செய்து மேடையில் நடித்துக் காட்டும் ஆங்கில Elocution போட்டி பிரசித்தமானது. துரை பழனிவேலன் ஜீலியஸ் சீசரில், சீசர் கொலை செய்யப்பட்டவுடன் அவர் உடலை சுமந்து வந்து பொது மக்கள் முன்பு மார்க் ஆண்டனி ஆற்றும் புகழ் பெற்ற உரையை எடுத்துத் தந்து என்னை போட்டிக்கு தயார் செய்தார்.

காஷியஸ், காஸ்கா, புரூட்டஸ் ஆகியோரை முதலில் உயர்த்திப் பேசி பின் கொஞ்சம் கொஞ்சமாக ஜீலியஸ் சீசரை உயர்த்தி அவரைக் கொன்றவர்களைக் கொலைகாரர்களாக நிறுத்தி மக்கள் மனதைத் திருப்பும் கட்டம். ஆண்டனியின் அந்த உரை நாடகத்தில் மிகவும் முக்கியமானது. உணர்ச்சிகரமானது. ஆங்கில Elocution உயர் வகுப்புக்கான பரிசு எனக்குக் கிடைத்தது. பழனிவேலன் சார் அம்மாத சினிமா சீசன் டிக்கட்டை தன் செலவில் வாங்கித் தந்து அன்று வெளியான ஜீலியஸ் சீசர் படத்தைப் பார்க்க வைத்தார். ஜோசப் மான்கீவிக்ஸ் (Joseph Mankiewicz) என்பவரின் உயரிய இயக்கத்தில் புரூட்டசாக ஜேம்ஸ் மேசன், மார்க் ஆண்டனியாக மார்லன் பிராண்டோ காஷியஸாக சர் ஜான் கீல் கட், ஜீலியஸ் சீசராக லூயி கால் ஹெர்ன், ஆண்டனியின் மனைவியாக டெபர்ரா கேர், சீசரின் மனைவி கல்பூர்னியாவாக கிரீர் கார்சனும் மிக அருமையாக நடித்திருக்கும் படம். 1953-ல் தயாரிக்கப்பட்ட இப்படம் நாடகத் தோற்றத்திலிருந்து தப்பி சினிமா வடிவில் சலனிக்கும் விதமாய் முழுக்கவும் காமிராவின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. ஜீலியஸ் சீசர், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆங்கில இலக்கியம் படித்தவர்களால் அரங்கு நிறைந்து ஒரு வாரம் ஓடியது. அடுத்தடுத்து ஷேக்ஸ்பியரின் சில படங்கள் சீசன் டிக் டிக்கட் காலத்தில் காட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானவை நான்கு படங்கள். ஹாம்லெட், மாக்பெத், ரிச்சார்டு தி தார்டு மற்றும் ரோமியோ அண்டு ஜீலியட்.

Image gallery for Julius Caesar - FilmAffinity

ஹாம்லெட் (Hamlet) அதன் ஆங்கில வசன மேன்மைக்காக பல இயக்குனர்களால் பல முறை திரைப்படமாக்கப்பட்ட துன்பியல் நாடகம். நாடகத்தைக் கண்டு ரசித்து துய்த்துப் போனவர்களுக்கு அதன் திரைப்பட வடிவிலும் நாடக வடிவையே கண்டவர்களும் காண விழைந்தவர்களும் அதிகம். நாடகமாய் பல காலம் நடத்தி அனுபவம் ஏறிய பிரிட்டிஷ் ஷேக்ஸ்பியர் நாடக வல்லுனர் சர் லாரன்ஸ் அலிவியர் (Sir Lawrance Oliver) ஹாம்லெட்டை 1948-ல் திரைப்படமாய் இயக்கி நடித்தார். முக்கிய பாத்திரத்தில் அவரும் ஜீன்ஸ் சிம்மன்சும் நடித்த இப்படம் அவ்வாண்டின் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான பரிசுகள் உள்ளிட்ட நான்கு ஆஸ்கர் பரிசுகள் பெற்றது. ஆனாலும் படம் பார்க்கும்போது நாடகத்துக்கும் சினிமாவுக்குமாய் மாறி மாறி அலைக் கழிக்கப்பட்டு ஓர் அலுப்பு நம்மைத் துரத்தித் துரத்தி வருகிறது.

ஒளிப்பதிவு எங்கெங்கோ வெற்றிடத்திலெல்லாம் சிதறிப் பதிந்து நம் கவனத்தை எச்சரிக்கிறது. லாரன்ஸ் அலிவியர் ஷேக்ஸ்பியரின் மிகச் சிறந்த துன்பியல் நாடகமென கருதப்படும் ஹாம்லெட்டை கொஞ்சம் சுருக்கியே திரைப்படமாய் உருவாக்கியுள்ளார். பிறகு 1964-ல் சோவியத் ரஷ்யாவின் கலாச்சார மையத்தில் திரையிடப்பட்டது. கிரிகோரி கோசின்ட்சேவ் (Grigori Kozintsev) வியக்கும்படி இயக்கி உருவான இந்த ஹாம்லெட் உலகில் எடுக்கப்பட்ட எல்லா ஹாம் லெட்களையும் மூலையில் உட்கார வைத்தது. இதன் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவும் கம்பீரமான இசைக் கோர்வையும் காட்சியமைப்பும் நடிப்பும் எடிடிங்கும் அசத்துகின்றன. ஷேக்ஸ்பியர் துன்பியல் நாடகங்களில் தலையானது என கொண்டாடப்படும் ஹாம்லெட் அதன் பிரதான அர்த்தப்படுத்தலுக்கும் மேலே கொண்டு செல்லப்பட்டிருப்பது இந்த கோசின்ட்சேவின் ஹாம்லெட். படத்தின் தொடக்கத்தில் இருளின் அடர்த்தியில் ஓசையோடு எழுந்து மோதும் பேரிரைச்சலோடான கடலலைகளின் காட்சி சட்டகம் பிரமிப்பூட்டுகிறது. தொடர்ந்து இதமான அடக்கமான ஒற்றை மணியோசைப் பின்னணியில் காற்றுக்கு அலைபாய்ந்தவாறு எரியும் தீப்பந்தம். பல்வேறு இசைக் கருவிகளின் ஒன்று சேர்ந்த பேரிடியோசை போன்ற ஒரேயொரு இசையிழுப்பையடுத்து குதிரைகள் பாய்ச்சல். பிரிதொரு காட்சியில் குதிரைகள் கட்டவிழித்துக் கொண்டு தாறு மாறாக ஓடும் திகில். கோட்டைச் சுவரின் இருளிலும் ஒளியிலும் தோன்றித் தோன்றி மறையும் குற்றம் புரிந்த கூட்டத்தினர் சிலரின் பார்வையில் காட்சி தந்து அச்சத்தைக் கிளப்பும் கொலையுண்ட மன்னனின் ஆவி. இந்தக் காட்சி லாரன்ஸ் அலிவியரின் ஹாம்லெட்டிலும் சிறப்பாகவே அமைந்திருந்தாலும் கோசின்ட்சேவின் ஹாம்லெட்டில் கூடுதல் பரிமாணத்தைக் கொண்டிருக்கிறது. நாடகத் தன்மையிலிருந்து விலகி சினிமாவாக முழு சுதந்திரத்தோடு படத்தை ஆக்கியிருக்கிறார் கிரிகோரி கோசின்ட்சேவ். அதே சமயம் நாடகம் படமெங்கும் அதற்கான சகல மரியாதையுடனும் ஜீவித்திருக்கிறது.

Hamlet (1948) - Movie Review / Film Essay

ஹாம்லெட் மீண்டும் மீண்டும் 1969ல் டோனி ரிச்சர்ட்ஸின் இயக்கத்திலும் 1976ல் வேறொருவராலும் எடுக்கப்பட்டாலும் முதலிரண்டு படங்களைப்போல அமையவில்லை. ஹாம்லெட்டின் முக்கிய பகுதியான அரசன் கொல்லப்பட்டு ஆவியாக தோன்றி பயமுறுத்தும் பகுதியை ஏ.எஸ்.ஏ.சாமியின் வசனத்தில் 1951-ல் கே.ராம்நாத்தின் இயக்கத்தில் வந்த மர்மயோகி (எம்.ஜி.ஆர்.) கொண்டிருக்கிறது. ஜப்பானிய இயக்குனர் அகிரோ குரோசாவா (Thrown of Blood) என்று ஹாம்லெட்டை எடுத்தார். குரோசாவா ஷேக்ஸ்பியரின் KingLear ஐ RAN என்ற படமாய் செய்திருக்கிறார். ஏ.எஸ்.ஏ.சாமியின் கதை வசன அமைப்பில் கே. ராம்நாத் 1949ல் இயக்கிய கன்னியின் காதலி ஷேக்ஸ்பியரின் Twelfth Night தழுவி எடுக்கப்பட்ட படம். எஸ்.ஏ. நடராஜன், மாதுரிதேவி, அஞ்சலிதேவி) 1957-ல் வெளிவந்த “பத்தினி தெய்வம்” ஷேக்ஸ்பியரின் Tempest ஐ தழுவியும், 1963-ல் வெளிவந்த அறிவாளி ஷேக்ஸ்பியரின் Taming of the Shrew வையும் தழுவியெடுக்கப்பட்டவை.
நியூ இம்பீரியலில் சீசன் டிக்கட்டில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் திரைப்படமாக்கிய வரிசையில், பார்த்த கடைசி இரு படங்கள் Romeo and Juliet மற்றும் Richard the III என்பவை வெவ்வேறு காரணங்களுக்காக முக்கியமானவை. அவற்றில் ரோமியோ அண்டு ஜீலியட் ஒரு வாரம் முழுக்க ஓடியது. 1954-ல் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் லாரன்ஸ் ஹார்வி ரோமியோ. மற்ற விவரங்கள் நினைவிலில்லை. ஆனால் 1968-ல் Franco Zaffirelli-யின் இயக்கத்தில் வெளிவந்த ரோமியோ சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. ஆண், பெண் நடிகர்கள் எல்லாருமே ஷேக்ஸ்பியரின் அசல் நாடகத்தில் குறிப்பிட்டிருப்பது போன்று 18, 20, 21 வயதினராகவே இருந்தார்கள். படம் ஒருவித கவித்துவத் தன்மையோடு கொண்டுபோகப் பட்டிருக்கிறது.

இவ்விரு படங்களுக்கும் இடையில் 1961-ல் ராபர்ட் வைஸ் இயக்கத்தில் ஒரு ரோமியோ ஜீலியட் படம் இன்றைய அமெரிக்க சேரிச் சூழலில் நடப்பதாக மிக அற்புதமாக எடுக்கப்பட்டு பத்து ஆஸ்கர் பரிசுகளைப் பெற்றது. ராபர்ட் வைஸ் இயக்கிய அப்படம் Westside story. சிறந்த இயக்குனருக்கான பரிசு பெற்ற ராபர்ட் வைஸ் இதைப் போன்ற மற்றொரு சிறந்த இசைப் படமான Soundof Music-யும் இயக்கியவர். வெஸ்ட் சைட் ஸ்டோரியில் மோட்டார் கார்கள் பராமரித்து செப்பனிடும் அமெரிக்க சேரிவாழ் குழுக்கள் (Shark, Jet) இரண்டின் தீரா பகைமையோடு குழுக்களிடையே அடிக்கடி கைகலப்பும் மோதலும் நிகழ்கிறது. அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்களான ஷார்க் சேரி இளைஞர்களுக்கும் தென்னமெரிக்காவிலிருந்து குடியேறிய புதிய சேரி (ஜெட்) இளைஞர்களுக்கும் இருக்கும் இந்த பகைமை போட்டியினிடையே ஷார்க்கைச் சேர்ந்த இளைஞனுக்கும் ஜெட்டைச் சேர்ந்த பெண்ணுக்குமான காதல் கடைசியில் இரு கொலைகளில் முடிகிறது. காதலிக்கும் இளைஞனை காதலியின் சகோதரன் கொல்ல விடுகிறான். இப்படத்தின் நவீன இசையும் நடனமும் அசத்துபவை. அசல் இசைக் கோர்வையை அமைத்தவர் உலகப் புகழ்பெற்ற Leonard Bernstein இப்படத்தின் பல அற்புத காட்சிகளில் ஆரம்ப காட்சியும் ஒன்று. நடாலிவுட், ஜார்ஜ் சாக்கரீஸ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

Sam Marshall – Medium

நியூ இம்பீரியலில் சீசன் டிக்கட்டில் பார்த்த கடைசி ஷேக்ஸ்பியர் படம் Richard the III. படத்தை தயாரித்து இயக்கி மூன்றாம் ரிச்சர்டு பாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கும் சர் லாரன்ஸ் அலிவியர் படத்தின் தொடக்கத்தில் முக்கியமான தகவல்களை பதித்திருக்கிறார்.

ஷேக்ஸ்பியரின் அசல் நாடகத்தில் சில இடைச்செருகல்களை David Gavrick Colley Cibber ஆகியோர் செய்திருக்கிறார்கள். அந்த வடிவில்தான் நாடகம் திரைப்படமாகியுள்ளது.” இது இயக்குனரின் நேர்மையைச் சொல்லுகிறது. இங்கிலாந்தின் கதையென்பது பிற நாட்டைப் போலவே அதன் வரலாற்றாலும் வரலாற்று நாயகர்களாலும் பின்னிப் பிணையப்பட்டது. கதை நிகழ்வு 15-ம் நூற்றாண்டின் பின் பாதியில் தொடங்குகிறது. இந்த காலக் கட்டத்தில் இங்கிலாந்து மகுடத்துக்கு இரு முக்கிய ராஜ வம்சங்கள் போட்டியிட்டு மோதல்கள், சூழ்ச்சி, சதிவேலைகளில் ஈடுபட்டதை வரலாறு, ஆங்கில மகுடத்துக்கான “ரோஜாக்களின் போர்” என அறியப்படுத்துகிறது.

லங்காஸ்டர் அகம் அல்லது வம்சத்துக்கான சிவப்பு ரோஜா. யார்க் அகம் அல்லது வம்சத்துக்கான வெள்ளை ரோஜா. மகுடத்தைப் பிடிக்க சூழ்ச்சி சதி, போர் யாவும் இவ்விரு ரோஜாக்களால் ஏற்பட்டு வரும் காலக் கட்டத்தில் யார்க்கின் வெள்ளை ரோஜா இக்கதையின் தொடக்கத்தில் தன் பூக்கும் இறுதி நிலையிலிருக்கையில் ஷேக்ஸ்பியரை ஈர்த்து நாடகமாக்க உந்து சக்தியானது. இப்படத்தில் அலிவியரையடுத்து முக்கிய நடிகர்கள் Sir John Gielgud, Clair Bloom, Ralph Richardson, Stanley Baker ஆகியோரும் நடித்திருக்கின்றனர். 1954-ல் உருவாக்கப்பட்ட இவ்வரிய திரைப்படத்துக்கான கம்பீரமான இசைக் கோர்வையை புரிந்தவர் சர் வில்லியம் வால்டன் (Sir William Walton) இவர் அலிவியரின் ஹாம்லெட் மற்றும் ஐந்தாம் ஹென்றி என்ற படங்களுக்கும் இசையமைத்தவர்.

இங்கிலாந்து மன்னர் இறந்ததும் மகுடத்துக்கு உரிமை கோருபவர்களில் இருவரை கொலை செய்துவிட்டு மகுடத்தைக் கைப்பற்றுகிறான் மூன்றாம் ரிச்சர்டு. இவன் பிறவிலேயே முதுகெலும்பில் ஒரு வளைவு காரணமாய் சிறு கூன் போட்டவனாய் தாங்கித் தாங்கி நடப்பவன். விரைவிலேயே டியூடர் வம்ச படையினரால் ரிச்சர்டு போர்களத்துக்கு பறக்கின்றான் ஹென்றி டியூடர் தலைமையிலான ராணுவம் 1485-ல் Bosworth போர்க் களத்தில் நடந்த ரோஜாக்களின் இறுதி யுத்தமென சொல்லப்படும் போரில் மூன்றாம் ரிச்சர்டின் குதிரை அடிபட்டு விழுகிறது. ரிச்சர்டு தாங்கித் தங்கி வளைந்த முதுகோடு குதிரை வேண்டி கத்துவதாக ஷேக்ஸ்பியர் எழுதுகிறார். “A Horse! A Horse! A Horse For My Kingdom!” ஒரு குதிரை! ஒரு குதிரை! என் ராஜியத்தையே ஒரு குதிரைக்கு தருகிறேன்.

ஷேக்ஸ்பியரின் இந்த நாடக வசனம் இலக்கியப் புகழ் பெற்றது. எல்லாரும் ரிச்சார்டை சூழ்ந்து நின்று கெளரவர்கள் அபிமன்யூவைக் கொன்றது மாதிரி கொன்று விடுகின்றனர். அவனது மகுடம் புதரில் போய் விழுகிறது. ஹென்றி டியூடர் அதைக் கத்தியால் நெம்பி எடுக்கிறான் இந்த ஹென்றி டியூடர் பின்னர் ஏழாம் ஹென்றியாகிறார்.

மூன்றாவது ரிச்சர்டு யுத்த பூமியில் போரிட்டு மடிந்த கடைசி ஆங்கிலேய அரசன். அவனது உடல் அருகிலுள்ள லீசெஸ்டர் நகரிலுள்ள தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று அவசர அவசரமாய்தோண்டிய சிறிய சவக்குழியில் அவனது சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் போன பின் அவனது உடலடக்கம் செய்யப்பட்ட இடம் மர்மமாகவே இருந்து வந்தது. ஊர் வளர்ந்து விரிவடையவும் மிகப் பழைய இடங்களை புதியவை ஆக்கிரமித்து நின்ற நிலையில் லீ செஸ்டர் நகரில் 2012-ல் ஒரு கார் பார்க் அடியில் அவனுடைய சவபெட்டி தோண்டியெடுக்கப்பட்டது. மூன்றாம் ரிச்சர்டின் எலும்புக்கூடு உள்ள சவப் பெட்டி 530 ஆண்டுகளுக்குப் பின் தோண்டியெடுக்கப்பட்டு அரசு மரியாதையோடு சவ அடக்கமானது.

– தொடரும்.

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 



புதிய தொடர்: பயாஸ்கோப்காரன் (முன்னுரை) – விட்டல்ராவ்

தொடர் 2: பயாஸ்கோப்காரன் (கபிலர் மலையும் அரிச்சந்திரனும்) – விட்டல்ராவ்

தொடர் 3: பயாஸ்கோப்காரன் (போரும் சினிமாவும்)– விட்டல்ராவ்

தொடர் 4: பயாஸ்கோப்காரன் (மினி பயாஸ் கோப்) – விட்டல்ராவ்

தொடர் 5: பயாஸ்கோப்காரன் (சில தெலுங்குப் படங்கள்) – விட்டல்ராவ்



தொடர் 6: பயாஸ்கோப்காரன் (ரிபப்ளிக் சீரியல் படங்களும், தமிழ் சண்டைப் படங்களும்) – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் (கூடார வகை தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் (கூடார தியேட்டர்கள்) – விட்டல்ராவ்

தொடர் 9: பயாஸ்கோப்காரன் (கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும்) – விட்டல்ராவ்

தொடர் 10: பயாஸ்கோப்காரன் (சினிமா சுவரொட்டித் திருட்டு) – விட்டல்ராவ்

தொடர் 11: பயாஸ்கோப்காரன் (ஹாலிவுட் ஒரு மகா களவுலகு) – விட்டல்ராவ்

Vittalrao's Pokkidam Novel Book Review By Jayashri Raghuraman. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் நாவலின் கேள்விகள் – எஸ். ஜெயஸ்ரீ



1976இல் வெளிவந்த நாவல் போக்கிடம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையைக் கடந்து வெளிவந்திருப்பதாகவே கருதலாம். ஆனாலும் அது ஒரு பழைய நாவல் என்னும் தோற்றம் தராத வகையிலும் இன்றைய சூழலுக்கும் பொருந்திப் போகும் வகையிலும் இதன் மையக்கருத்து அமைந்திருக்கிறது. 

மலை சார்ந்த ஒரு கிராமத்தில் ஒரு வேதியத் தாது கிடைப்பதை அறிந்தவுடன், அந்த இடம் ஒரு தொழில்மைய நகரமாக மாறத் தொடங்குகிறது.  அந்தக் கிராமத்து மக்களும் வேறு போக்கிடமின்றி, அந்தத் தாதுவைத் தோண்டியெடுக்க வருகைதரும் தொழிற்சாலையிடம் தம் நிலத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து, அதற்கு ஈடாக அவர்கள் தரும் ஈட்டுத்தொகையைப் பெற்றுக்கொண்டு, அருகிலிருக்கும் ஊர்களுக்கோ அல்லது அந்தத் தொழிற்சாலையை ஒட்டிய பகுதிக்கோ குடியேறுகிறார்கள்.  அதிகாரமும் பணமும் தலைதூக்கும்போது, சாமானியருக்கும் விவசாயத்துக்கும் போக்கிடம்தான் ஏது என்பதை நாவல் பேசுகிறது.

நம் நாடு சுதந்திரமடைந்த கால்நூற்றாண்டுக்குள் தொழிற்சாலைகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ந்துவந்த நேரத்திலேயே இந்த நிலைமை தொடங்கிவிட்டது.  இன்றோ, சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டுக்காலம் கடந்த நிலையிலும் நம் நாடு இப்படித்தான் இருக்கிறது என்றால், வளர்ந்து வரும் தொழில்மயத்துக்காக நாம் மகிழ்வோமா அல்லது அழிந்துவரும் கிராமப் பொருளாதாரத்திற்காக நாம் வருத்தப்படுவோமா என்ற கேள்வியை விட்டல்ராவின் இந்த நாவல் மனத்தில் தோற்றுவிக்கிறது.

இன்று பல இடங்களில் ’செல் டவர்’ அமைப்பதற்காக எளிய மக்களுக்கு பண ஆசை காட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ கனிமவள நிறுவனங்கள் இழப்பீடு வாங்கித் தருவதாகக் கூறி ஏழை மக்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டு இழப்பீடும் தராமல் அவர்களை இழுத்தடிக்கின்றன. இப்படியெல்லாம் இன்றும் நிலைமைகள் இருப்பதாலேயே இந்த நாவலின் இளமை குன்றாமல் நீடித்திருக்கின்றது.  காலங்கள் மாறினாலும் கடந்தாலும் சாதாரண எளிய மக்களுக்கு எதுதான் போக்கிடம்?

நாவலில் நடைபெறும் மற்ற இரு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று, கணவனை இழந்த பேச்சி தன் பத்து வயது மகனோடு தனிமையில் வசிக்கிறாள். மற்றொன்று, டேனிஷ்பேட்டையின் பள்ளிக்கூடம்.  கிராமத்துப் பள்ளிக்கூடங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இதே நிலைமையில்தான் இருக்கின்றன. கிராமத்துப் பள்ளிக்கூடம் எனில், அந்த ஊருக்கு வரும் அலுவலர்கள் தங்கிச் செல்வதற்கான இடமாகவும் பெரிய மனிதர்கள் வீட்டுப் பொருட்களை இறக்கி வைப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்படுவதையே பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் முழுமையான அளவு ஈடுபாடும் காட்டுவதில்லை. ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம் நல்ல ஆசிரியர் ஒருவர் கிடைத்தால் சிறப்பாக முன்னேறும் என நினைக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஒரு கிராமத்தின் போக்கிடமாக, அதாவது ஒதுங்குமிடமாகவே அது கருதப்படுகிறது.

Vittalrao's Pokkidam Novel Book Review By Jayashri Raghuraman. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
போக்கிடம் நாவல் – விட்டல்ராவ்

பேச்சி, கருணையுள்ளத்தோடு படைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் பாத்திரம். ஆனால் அந்தப் பெண்ணை தம் உடற்பசிக்கான போக்கிடமாகவே ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். கவுண்டர், தன் மணவாழ்க்கைக்கு அப்பாற்பட்டு பேச்சியிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும், அது வெறும் உடற்பசியைத் தீர்த்துக்கொள்ளும் உறவாகவே இருக்கிறது.  மேலும், அவர் அவளுடைய நிலங்களையெல்லாம் தானே ஏதோ ஒரு விலை போட்டுக்கொடுத்து தன் பெயரில் மாற்றிக்கொள்வதன் வழியாக பேச்சியை மறைமுகமாக ஏமாற்றுகிறார். பேச்சிக்கோ, தனக்கு கவுண்டரின் உறவு அந்தக் கிராமத்தில் தனித்து வாழ்வதால் நேரும் தொல்லைகள் நேராமல் இருப்பதற்கான ஒரு போக்கிடம். அவ்வளவுதான். பெண்ணின் பாதுகாப்பு தேடும் இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆணின் மனநிலையை, இந்த உறவு கூர்மையாக வெளிப்படுத்துகிறது. நகரத்தைவிட்டு கிராமத்துக்கு வந்திருக்கும் சுகவனம் அவ்வப்போது தன் உடற்பசியை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழியாக மட்டுமே பேச்சியின் அன்பைப் பயன்படுத்திக்கொள்கிறான். அந்த அபலைக்கு உண்மையான அன்பு இத்தனை இடர்ப்பாடுகளுக்குப் பிறகே பீர்முகம்மதுவிடமிருந்து கிடைக்கிறது.

1976இலேயே விட்டல்ராவ் பேச்சி பாத்திரத்தை தன் உறவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சுயமாக யோசித்து முடிவெடுப்பவளாகப்  படைத்திருப்பது ஆச்சரியமான விஷயம். அவளும் சுகவனமும் சேர்ந்திருந்ததை, கவுண்டரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியே, சுப்புரு அவளை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறான்.  ஆனால் பேச்சியோ “போ. யாருகிட்ட வேணா சொல்லிக்கோ. உன்னோட வரமாட்டேன்” என்று சொல்லும் இடம் அபாரம்.  பிங்க் என்றொரு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. பெண் என்பவள் தன் விருப்பத்துக்கு ஒரு ஆணுடனான உறவுக்கு உடன்படவோ மறுக்கவோ உரிமையுள்ளவள் என்பதைச் சொல்லும் திரைப்படம் அது. இந்தக் கருத்தை விட்டல்ராவ் 1976இல் தன் நாவலில் பதிவிட்டிருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது.

“அம்மண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்பதுபோன்ற நிலை சுகவனத்துக்கு. தொடக்கத்தில் சிறந்த ஆசிரியனாக இருக்க வேண்டும், கிராமத்துப் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்ற துடிப்போடு டேனிஷ்பேட்டை கிராமத்துக்கு வரும் சுகவனம் இந்தச் சமூகச் சீர்கேட்டில் நிலவும் சுழலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தானும் அகப்பட்டுக்கொள்கிறான். கிடைத்த வேலையை விட்டுவிடக் கூடாது என நினைக்கும் அவனுக்கு வேறு என்ன போக்கிடம்? மதிய உணவுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை சரியாகப் பயன்படுத்த நினைக்கும் அவனுடைய மனம், அப்படிப் பயன்படுத்தாமல், அந்தப் பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் தவறேதுமில்லை என நினைக்கும் அளவுக்கு மாற்றமடைந்துவிடுகிறது. பள்ளியில் ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தவன் ப்ரைவேட் டியூஷனில் வரும் வருமானத்திற்காக ஆசைப்படுகிறான். தனக்குக் கிடைத்த ஆசிரியர் வேலையை விட முடியாத அவன் வேறு என்ன செய்ய முடியும்? இந்த அமைப்பின் சீர்கேட்டுக்குள் சிக்கிக்கொள்வதைத் தவிர அவனுக்கென வேறு என்ன போக்கிடம் உள்ளது? அவன் தன் வாழ்க்கைப்போக்கையே மாற்றிக்கொள்கிறான்.

நேர்மை, நியாயம், தர்மம், உண்மை என வாழ நினைப்பவர்களை இந்தச் சமுதாயச் சீர்கேடுகள் நிறைந்த இந்த அமைப்பு அமைதியாக வாழ விடுவதில்லை. வேறு என்னதான் போக்கிடம் என்று அவர்களும் இந்தச் சீர்கெட்ட அமைப்புக்குள்ளேயே வந்துவிடுகிறார்கள்.

விவசாயம், கிராமம் என்று தங்கள் உயிரையே வைத்திருக்கும் மக்களுக்கு இதுபோன்ற தொழிற்சாலைகள் வந்து, வேலை வாய்ப்புகளைக் கொடுத்து நிலங்களைப் பிடுங்கினால், அவர்களுக்கு வேறு எதுதான் போக்கிடம்? தன் நிலத்துக்கு தானே முதலாளியாக இருந்தவன் கூட கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவனுக்கு வேறு என்னதான் போக்கிடம்?

Vittalrao's Pokkidam Novel Book Review By Jayashri Raghuraman. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
விட்டல் ராவ்

பாவண்ணன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல ஆட்டின் கால்களில் ஒட்டியிருக்கும் தாரை பீர்முகம்மது அகற்றும் காட்சியும் தீப்பெட்டியில் அடைத்துவைக்கப்பட்ட வண்டு பறந்துபோகும் காட்சியும் நாவலில் மிகவும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.

சேலத்து வட்டாரமொழியில் இந்த நாவலை விட்டல்ராவ் அழகாக படைத்துள்ளார். மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும், நாவலை வாசிக்கும் வாசகர்களின் மனத்தில் தோன்றவைக்கும் விட்டல்ராவ், கதையை அப்படியே சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். அவராக தத்துவங்கள், கேள்விகள் என எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை. நாவல் தெளிவாக நீரோட்டமாக ஒரே வாசிப்பில் படித்து முடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பின்னிணைப்பாக விட்டல்ராவின் நேர்காணலை (பாவண்ணனால் எடுக்கப்பட்டது) இணைத்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது. இன்று விட்டல்ராவ் எழுபது வயதைக் கடந்தவர்.  பாவண்ணனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எப்போதும் திருத்தமான உடையணிந்து, நிழற்படக்கருவியோடு சுறுசுறுப்பாக இங்குமங்கும் இயங்கியபடியே இருந்தார். அனைவரோடும் கலகலப்பாக பேசினார். போக்கிடம் நாவலை அவர் 1976இல் எழுதியிருக்கிறார் என்றாலும் அவரைப்போலவே நாவலும் புதுப்பொலிவோடு இக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. மறுபதிப்பாக, இந்த நாவலை வெளியிட்டுள்ள சிறுவாணி வாசகர் மையத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

(போக்கிடம் – நாவல். விட்டல்ராவ், சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை, 38. விலை ரூ180)

எஸ். ஜெயஸ்ரீ

Bioscope Karan 11 Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies and Dramas. Book Day

தொடர் 11: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

ஹாலிவுட் ஒரு மகா களவுலகு இந்த பயாஸ்கோப்காரன் சேலத்துக்கு வந்த பிறகு தான் ஹாலிவுட் தயாரிப்புகளில் பல மகத்தான திரைப் படங்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. பலர் ஹாலிவுட் திரைப்படங்கள் என்றதுமே மொத்தமாகவே ஏளனமாய் ஒதுக்குவார்கள். அது சரியே அல்ல. சத்யஜித்ரே,…
Bioscope Karan Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies and Dramas. Book Day - Bharathi Puthakalayam

தொடர் 10: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

சினிமா சுவரொட்டித் திருட்டு தருமபுரியில் நாங்கள் குடியிருந்த திண்ணை வைத்த வீட்டுக்கு எதிரே ஜோசியரின் வீடு. இடையில் அகன்ற தெரு. நாழியோட்டு வீட்டில் தேள் உபத்திரவமதிகம். இரு முறை என்னைத் தேள் கொட்டினபோது எங்கள் வசமிருந்த பழைய உடைந்துபோன கிராமஃபோன் இசைத்…
Bioscope Karan Web Article Series by Vittal Rao. This Series About Indian (Tamil Cinema) Classic Movies and Dramas. Book Day - Bharathi Puthakalayam

தொடர் 9: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கந்தர் ஃபிலிம்சும், மாடர்ன் தியேட்டர்ஸும் யுத்தம் ஓய்ந்த பின்னும்கூட அதன் விளைவாய் ஏற்பட்ட பஞ்சம் ஓயவில்லை. சர்க்கார் யுத்தம் முடிந்த பின்னும் WAR FUND  எனும் யுத்த உதவி நிதி வசூலை நிறுத்திவிடவில்லை. வருவாய்த்துறையின் பொறுப்பில் யுத்த நிதி வசூல் சம்பந்தப்பட்டபோது…
தொடர் 8: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 8: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கூடார தியேட்டர்கள் இன்றைக்கும் சர்க்கஸ் காட்சிகள் பெரிய கான்வாஸ் துணி கூடாரங்களில் தான் Tent) நடைபெறுகின்றன. அன்றைக்கு கான்வாஸ் துணி கூடாரங்களில்தான் சினிமா காட்டப்பட்டது. சர்க்கஸ் கூடாரம் மிகவும் பெரியது. அதுவும் 3 ரிங் சர்க்கஸ் என்றால் கூடாரமும் பிரம்மாண்டமாயிருக்கும் 3…
தொடர் 7: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 7: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கூடார வகை தியேட்டர்கள் திருச்செங்கோட்டுக்கு நாங்கள் வந்த சமயம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன் விளைவுகள் காலனிய ஆட்சியினரால் அதன் இயல்பைவிட பெரிதாக்கப்பட்டு பொது மக்கள் பேரில் சுமைகள் போடப்பட்டிருந்தன. ஊர்திகள் யாவும் பெட்ரோல் இல்லாமல் மரக்கரியால்…