ஜெய்ஷாவின் ஆடுகளம் – இந்திய கிரிக்கெட் பாஜகவின் கட்டுப்பாட்டில் . . .
பீலே மறைந்தார் கட்டுரை – அ.பக்கியம்
உலக கால்பந்து ஜாம்பவான், கால்பந்தின் அடையாளம், பீலே 29-ம் தேதி தனது 82 வது வயதில் பிரேசிலின் சா பவலோ நகரில் மறைந்தார்.
உலகம் அஞ்சலி அலைகளால் திணறிக் கொண்டிருக்கிறது.
அவரது உடல் இருக்கும் மருத்துவ மனையை சுற்றி மக்கள் வெள்ளம் சூழ்ந்து மூழ்கடிக்கப்பட்டு விட்டது.
நாங்கள் உன்னை எல்லை இல்லாமல் நேசிக்கிறோம் நிம்மதியாக இருங்கள் என்று அவரது மகள் கிளி நாசிமெண்டோ தெரிவித்துள்ளார்.
பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், பீலே கால்பந்தை ஒரு கலையாக மாற்றியவர், பிரான்ஸ் நாட்டின் கிலியன் எம்பாபாபே பீலே யின் பாரம்பரியத்தை எப்போதும் மறக்க முடியாது என்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மில்லியன்களின் உத்வேகம் என்றும் மெஸ்ஸி அமைதியுடன் ஓய்வு எடுங்கள் என்றும் உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களில் ஒருவராக மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டு ஆற்றலை அவர் புரிந்து கொண்டார் என்று ஒபாமா அஞ்சலி தெரிவித்துள்ளார்.
தனது தனது 15 வது வயதில் கால்பந்து விளையாட்டில் நுழைந்தார். கால்பந்து வணிகமயம் ஆக்கத்தின் துவக்கட்டமாக அக்காலம் இருந்தது.
1958, 1962, 1970 ஆகிய மூன்று உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றார் ஒரே கால்பந்து வீரர் பீலே மட்டும்தான்.
21 வருட கால்பந்த வாழ்க்கையில் 1363 போட்டிகளில் விளையாடி 1281 கோள்களை அடித்து உலக சாதனை படைத்தார்.
1940 அக்டோபர் 23-ம் தேதி அன்று பிரேசில் தென்கிழக்கு நகரான ட்ரெஸ் கோரக்எஸ் இடத்தில் பிறந்தார்.
Edson Arantes do Nacimento என்று தாமஸ் எடிசன் பெயர் சூட்டப்பட்டது. ஒருமுறை அவர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவரது பெயரை சரியாக உச்சரிக்கவில்லை என்ற காரணத்தினால் பீலே என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டது.
தன் குடும்பத்தை ஏழ்மையை போக்குவதற்காக தெருவில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வளர்ந்தார்.
“சம்பா கால்பந்து” என்று அழைக்கப்படும் பிரேசில் தேசிய அணியின் விளையாட்டு பாணியை உருவக படுத்தினார்.
சாண்டாஸ் கிளப்பில் 15 வயதில் தொழில் ரீதியாக விளையாடத் தொடங்கிய பிலே பலரை திகைப்பு அடையச் செய்தார்.
1962-63 கண்டங்களுக்கிடையான பல போட்டிகளில் பட்டங்களை அலையலையாக பெற்றார்.
1950 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் சொந்த மண்ணில் உருகுவேயிடம் உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரேசில் தோற்ற பொழுது தந்தை அழுது கொண்டிருந்தார். பீலே அவரது தந்தை அழுவதை பார்த்து கோப்பையை ஒரு நாள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று உறுதி அளித்தார்.
1958 ஆம் ஆண்டு 17 வது வயதில் உலகக் கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தார்.
1970 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையில் பீலே மகத்துவத்தின் உச்சத்தை அடைந்தார்.
அவர் பல நாடுகளுக்கு சென்ற பொழுது அங்கிருந்த சூழல் மாற்றப்படும் நிகழ்வு நடந்திருக்கிறது. 1969 ஆம் ஆண்டில் அவர் நைஜீரியாவிற்கு சென்றதால் அங்கு நடைபெற்ற போர் 48 மணி நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.
பீலே ஐரோப்பிய கிளப்புக்களில் விளையாடுவதை நிராகரித்தார். ஆனால் தனது தொழில் முறை விளையாட்டின் இறுதி கட்டத்தில் நியூயார்க் காஸ்மோஸ் உடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
ஒரு திரைப்பட நட்சத்திரம், பாடகர், நாட்டின் விளையாட்டு மந்திரி (1995-98) போன்ற கால்பந்து கடந்த துறைகளிலும் அவரின் பணி நீடித்தது.
பிரேசில் நாட்டின் முதல் கருப்பின அமைச்சரவை உறுப்பினர் பீலே என்பதை குறிப்பிடுகிறார்கள்.
அவர் மீதான விமர்சனங்களும் உள்ளது.சமூகப் பிரச்சனைகள் மற்றும் இனவெறி போன்றவற்றில் அவர் அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக இருந்தார் என்று விமர்சனங்களை எதிர்கொண்டார்.
அர்ஜென்டினாவின் கிளர்ச்சியாளர் டி யாகோ மரடோனாவை போன்று அல்லாமல் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த பட்டத்தை பெறுவதற்காக பீலே அமைதி காத்தார் என்று விமர்சனங்கள் உள்ளது பிரேசில் நாட்டில் 1964- 85 காலகட்டங்களில் நடைபெற்ற ராணுவ ஆட்சி உட்பட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருந்தார் என்ற விமர்சனம் எதார்த்தம் என்பதை வரலாறு நமக்கு தெரிவிக்கிறது.
கால்பந்தின் ஈர்ப்பு சக்தியாக, ஒட்டுமொத்த தேசத்தின் கால்பந்து அடையாளமாக, உலக கால்பந்து சாதனையாளராக, கால்பந்தின் தூதுவனாக, கால்பந்து மைதானத்தினை கடந்து உலகம் முழுவதும் சுழலும் சக்தியாக இருந்த பீலே தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் அவருக்கான அஞ்சலியை ஒரு தாக்குவோம்.
– அ.பாக்கியம்.