செ. ஜீவலதாவின் கவிதை

செ. ஜீவலதாவின் கவிதை




எதோ ஒரு உந்துதலில்
கவிதை எழுத
எத்தனித்த பொழுது
நான் கற்றுக் கொண்ட
வார்த்தைகள் அனைத்தும்
சுழியமாய் ! சூண்யமாய் ஆயின!

ஆனால்,
இதில் ஏதோ
கள்ளத் தனம் உள்ளதோ ?

உன்னை நினைத்து
மை தொடுக்கும் போதே
முகில் தோன்றி
வார்த்தைத் தூறலாய்
தூறிக் கொண்டிருந்த
என் எழுத்துகள் அனைத்தும்
நடையெடுத்து !
அணிவகுத்து !
இலக்கணம் தொட்டு !
கவிதையானதே !!!

செ. ஜீவலதா
இராஜபாளையம்