நூல் வெளியீடு: ‘யாமறிந்த புலவன்’ நூலை வெளியிட்டு பாரதிக்குப் பெருமைசேர்த்த முதலமைச்சர்!
பாரதியின் நினைவு நூற்றாண்டை ஒட்டி அவரது ஆளுமையை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் ‘யாமறிந்த புலவன்’ என்ற நூலை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். அந்த நூலை சமரசத் தீர்ப்பாயம் சுங்கம், கலால் & சேவைவரித்துறை தென்மண்டல முன்னாள் தலைவர் சி. இராஜேந்திரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் நூலாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் உள்ளார். மற்றும் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் நூலாசிரியர் தாயார் மற்றும் அசன் உள்ளனர்.
இந்நூல் 1918 ஆம் ஆண்டு முதல் 2021 வரை கடந்த நூறு ஆண்டுகள் பாரதி பற்றி பல்வேறு கருத்தியலை முன்வைத்து 140 அறிஞர்கள் எழுதியக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம்.
மொத்தம் 1400 பக்கங்களில் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. பாரதி நண்பர் வ.வெ.சு. ஐயர் தொடங்கி கலைஞர் முதல் பல்வேறு தலைவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது 13 ஆண்டுக்கால ஆராய்ச்சி மூலம் உருவான புத்தகம். காலத்தால் அழியும் நிலையிலிருந்த பல படைப்புகளை மீட்டுத் தந்துள்ளேன். அதில் உள்ள பல படைப்புகள் 100 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக நூலாகி உள்ளது.
மேலும் இந்த நூலின் பின்பகுதியாக அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தோழர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் பேசிய சொற்பொழிவுகளைக் கண்டறிந்து 300 பக்கங்களில் தொகுத்து அளித்துள்ளேன். இது பாரதி ஆய்வில் மிக முக்கியமான நூல்.
நூல் : யாமறிந்த புலவன் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
விலை : ரூ.₹1500
வெளியீடு : பதிகம் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]