க.புனிதனின் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிதைகள் - Tamil Haiku Poems - Poetry | Haiku Kavithaikal - https://bookday.in/

க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்

க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்

1
வரி வரியாய்
வரிகளை வாசித்தது
சோளத்தட்டை தின்னும் மாடு

 

2

கிணற்றுக்குள் ஒலிக்கும்
மழைக் குருவிகளின் சப்தம்
வெளிவர மனமில்லை தவளைக்கு

 

3

பயணத்தின் போது
கேட்கும் சில்லறை சப்தம்
அமைதியாய் தூரத்து மலை

 

4

விறகு அடுப்பு
புகை ஊதும் அம்மா
வரைகிறாள் புதிய ஆகாயம்

 

5

மழை தூறும் போது
வாலாட்டுகிறது
நாய்க் குட்டி

 

6

பறந்து போகும் புறா
கிளையில் இருந்து உதிரும் இலை
நீரில் தப்பிக்கும் எறும்பு

 

எழுதியவர் : 

க. புனிதன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *