சாந்தி சரவணனின் ஹைக்கூ கவிதைகள்
மயங்கி கிடக்கிறது
வண்டு
மலரில் விருந்து
***
அட்சயப்பாத்திரம்
சிற்றுயிர்களின் ஆகாரம்
யானைச் சாணம்
***
சோலைக் காடுகளின்
சீரமைப்பு
யானைகளின் பயணம்
***
காடுகளின் வறட்சி
புலம் பெயர்ந்தது
வனவிலங்குகள் ஊருக்குள்
****
வனத்தில் மனிதர்கள்
ஆதிக்கம்
நாட்டில் மிருகங்கள்
****
மிதக்கும் பஞ்சு
அரவணைக்கத் துடிக்கும்
மேகமும் தென்றலும்
****
கதவுயில்லா சிறைச்சாலை
அடிமைப்பட்டு இருக்கிறது
பெண் சமூகம்
****
தென்றலின்
ஸ்பரிசம்
சுவாசிக்கும் இலைகள்
***
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
காற்றும் மழையும்
***
எழுதியவர் :
திருமதி சாந்தி சரவணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

