கி.கவியரசன் கவிதைகள்
1
சுகமாய் உறங்கி விட்டேன்
கனவுக்குள்
கனவு வருகிறது
சலூன் கடை…
2
வானத்தைப் பார்த்தபடி
அசைவுகளற்று
கொடிக் கம்பியில்
தொங்கிக் கொண்டிருக்கும் கிளிப்புகளுக்கு
புத்தனின் சாயல்…..
3
இந்த வண்டு
வசிக்கப் போகிறதா?
வாசிக்கப் போகிறதா?
புல்லாங்குழலின் துளைகளுக்குள்
4
இலைகளின் மீது அமர்ந்திருக்கும்
பனித்துளிகள்
அடடா
எத்தனை அழகான சுமை…..
எழுதியவர் :
கி.கவியரசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

