ச. இராஜ்குமாரின் கவிதைகள்
நெல் வயல்களின் வரப்பில் நுழைந்து செல்கிறேன்..
தென்னைமரத்தில் அமர்ந்த
பறவைகள்
கீச்சொலி எழுப்பியதும்
வயலில் இருந்த நாரை கொக்கு பறந்து சென்றது..
எதிர்பாராத நேரம்
வேடன் ஒருவன் வந்து
அந்த நாரைகளில் ஒன்றைக்
குறி தவறாமல் சுட்டு வீழ்த்தினான்..
அந்த நிகழ்வு
நான் வருவதற்கு
அரைமணி நேரத்திற்கு முன்புதான் நிகழ்ந்தேறியது..!
இப்போது அந்த நாரை கொக்கும் சில மைனாக்களும்
பேசிக்கொள்கின்றன தங்களது பாசையில்..
எச்சரிக்கை…
எச்சரிக்கை…
எழுதியவர் :
ச. இராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.