அ.ஈடித் ரேனா கவிதைகள்
1
தேவதைகள்
ஒளிரும் ஆடைகளுடன்
பட்டாம்பூச்சி சிறகுகளுடன்
தான் இருப்பார்கள்
என்றில்லை
அடுக்களையில்
இருந்து அரக்கப்பறக்க
அலுவலகம் ஓடும்
அம்மாவைப் போலவும்
இருக்கலாம்.
2
பிரிவைப் பிரகடனப்படுத்திய
இரவில்
உறவின் இழையை
நீட்டிக்கப் போராடிக்
கொண்டிருந்தது
இறுதியாக ஒன்றாக
அமர்ந்து அருந்திய
தேநீரின் மிடறுகள்
ஆனாலும் அன்று
சரியான நேரத்துக்கு
வந்து தொலைத்தது
உனக்கான
கடைசிப் பேருந்து
3
பாடப்புத்தகத்தின் நடுவே பத்திரப்படுத்தி இருந்த
மயில் தோகை
குட்டி போடாது

என்று உணர்ந்த
தருணத்தில்தான்
தொலைந்து
விட்டிருக்கக்கூடும்
என் குழந்தைத்தனம்
எழுதியவர் :
அ.ஈடித் ரேனா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.