Thaimaiyum Thuimaiyum Kavithai by Sakthi தாய்மையும் தூய்மையும் கவிதை - சக்தி

நீங்கள் மூஞ்சில் எறிந்த
குப்பைகளை முகம் சுளிக்காமல்
கையுறை இல்லாத
கைகளால் வாங்குகிவள்
என் தாய்,

சாலைகளை முககவசம்
இல்லாமல்மூச்சு வாங்க
துடைப்பங்களால் சுத்தம் செய்பவள் என் தாய்,

குப்பைத் தொட்டியில்
வீசப்பட்ட நாய்க்குட்டிகளை தூக்கி
தன் மாராப்பு துணிகளால்
துவட்டி முத்தம் கொடுத்து
அரவணைப்பவள் என் தாய்,

மூத்திரத்தையும் மலத்தையும்
செருப்பு அணியாத
கால்களால் மிதித்துக் கொண்டு
முந்தானையில்
வாரி வாருபவள் என் தாய்,

ஒவ்வொரு வீடுகளாக
சென்று விசில் அடித்து
குப்பைகளை பிச்சையாக
எடுப்பவள் என் தாய்,

தலையில் சூடிய
மஞ்சள் பூக்களை வாடாதவாறு
குப்பைத் தொட்டியில்
சேமித்து வைப்பவள்
என் தாய்,

மரத்தடி நிழலில் விழுந்த
சருகுகளை கூட்டி பெருக்கி
வாரும்போது மரங்களும்
பூக்களை வீசுகின்றன
என் தாயின்
தாய்மையும் தூய்மையும்
நினைத்து மழைதுளிகளாக
கண்ணீரை
பொழிவதற்கு…..!!!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *