Thamaiyan ShortStory By Shanthi Saravanan. சாந்தி சரவணனின் தமையன் சிறுகதை




கையில் இருக்கும் பாகப்பிரிவினை பத்திரத்தை பார்த்தபடி அமர்ந்து இருந்த சின்ன முதலாளிகள் சிதம்பரம், பழனி, ஜீவனை பார்த்த வண்ணம் அமர்ந்து ‌இருந்தாள் காரியதரிசி  காயத்ரி.

அவர்களோ  கையில் பத்திரத்தை வைத்துக் கொண்டு இருந்தார்கள் பழனியும் மற்ற இரு சகோதரர்களும் தங்களது நினைவுகளை மனதில் அசைப்போட்டவாறே அமர்ந்து இருந்தார்

அவர்களின் ஊர் வளையாம்பட்டு. வளையாம்பட்டு  முருகன் கோவில் பழங்கால கோவில் .  அமைதியான கோவிலின் அமைப்பு நம்மை கோவிலில் அமர வைக்கும். ஆம்பூருக்கும்  வாணியம்பாடிக்கும் மத்தியில் இருக்கும் சிற்றூர்.

ஆதிலக்ஷ்மி நடராஜன் தம்பதியருக்கு   ‌4 ஆண் பிள்ளைகள்.

ஷண்முகம், சிதம்பரம், பழனி,   ஜீவன். நடராஜன் ஒரு பெட்டி கடை வைத்து இருந்தார்.  பெரும்பாலும் அந்க ஊரில் பலருக்கு விவசாயமே முதன்மைத் தொழில். ஆனால்  இவர்கள் குடும்பத்திற்கோ   சொந்தமாக ஒரு வீடு மட்டும் தான்.   அங்கேயே ஒரு கடை வைத்து இருந்தார்கள். அது தான் அவர்களின் வாழ்வாதாரம்.

பழனிக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 6வது படிக்கும் போது மாணவர்கள் அனைவரும் நாளை தீபாவளி இன்று மட்டுமே பள்ளி என மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்த போது, அண்ணன் சிதம்பரம் வகுப்பு ஆசிரியரிடம் வந்து ஏதோ சொன்னான், சற்று பதட்டமாக இருந்தான்.

வகுப்பு ஆசிரியர் சம்பத்,  “பழனி இங்கே வா”

ஆசிரியர் அருகே வந்த பழனியை கட்டி பிடித்துக் கொண்டு சிதம்பரம் அழு துவங்கி விட்டான். ஏன் என புரியாமல் அண்ணை பார்த்து வண்ணம் இருந்தான்

சக மாணவர்கள் பதட்டமானார்கள்.

சம்பத் ஆசிரியர் ஆழாதிங்க பா… வாங்க என இருவரையும் அழைத்து கொண்டு தலைமை ஆசிரியர் அறைக்குள் அழைத்து சென்றார்.

சார் பழனி அப்பா தவறிட்டாராம் என சொன்னவுடன் அதுவரை ஒன்றும் புரியாமல் அண்ணணை பார்த்துக் கொண்டு இருந்த பழனி அழ  துவங்கி விட்டான்.

இருவரையும் சமாதானம் செய்து பள்ளி வாட்ச்மென் ஒருவருடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த நாளை பழனியால் மறக்கவே முடியாது.. அன்றிலிருந்து பொறுப்பை இரு அண்ணன்மார் ஏற்றுக் கொண்டார்கள். ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்வதை விட அப்பாவாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அம்மா ஆதிலக்ஷ்மியும் அப்பா இல்லாத பிள்ளைகள் என குறை தெரியாமல் வளர்த்தார்.

பழனியையும் ஜீவனையும் பட்டதாரி படிப்பு படிக்க  வைத்தது பெரிய அண்ணன் ஷண்முகம் தான்.

பட்டணம் சென்று வாகன  தொழிற்சாலை பணியில் சேர்ந்து கடுமையாக உழைத்து தன் குடும்பத்தை பார்த்துக் கொண்ட பெருமை ஷண்முகத்தையே சாரும்.

ஷண்முகம் உழைப்புக்கு எந்த விதத்திலும் குறைந்தது  இல்லை சிதம்பரத்தின் உழைப்பு. ஷண்முகம் ஒரு நிலை எட்டிப் பிடிக்கும் வரை  சிதம்பரத்தின் உழைப்பு தான் அவர்கள் குடும்பத்திற்கு ஆதாரம்.  உள்ளூரில் இருந்து கொண்டு கிராமத்தில்  கூலி வேலைசெய்து  குடும்பத்தை பராமரிப்பது தான் சிதம்பரத்தின் வேலை.

தம்பிகள் என்றால் உயிர். தங்களின் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு உழைத்தார் அண்ணன் ஷண்முகம். சிதம்பரம், பழனி, ஜிவன் முவரையும் எந்த ஒரு குறையும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் சென்னையில் கூடி வந்த போது ஷண்முகத்திடம் போட்டு கொள்ள ஒரே ஒரு வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் மட்டுமே புதிதாக இருக்கும். வெளியே போயிட்டு  வந்தவுடன் ஈஸ்திரி போட்டு வைத்து கொள்வார்.

நண்பர்கள் என்னடா…… ஷண்முகம், ” நாளைக்கும் இண்டர்வியா…. இதே சட்டைதானா. என கேலி கிண்டல் செய்வார்கள்”

எல்லா நிகழ்வுக்கும் அதே உடை என்பதால் இந்த பரிகாசம்….

இதை எதையும் காதில் வாங்க மாட்டார் ஷண்முகம்.ஒரே ஒரு சட்டை என தெரியா வண்ணம் பளிச்சென்று வைத்து இருப்பார்.

காலை நீர் மோர் இரவு ஒரு சோம்பு தண்ணீர். மத்திய உணவு பல நாட்கள் டீயோடு சில நாட்களில் அதுவும் இல்லை.

வருடங்கள் கடந்தன.

உழைப்பு கண்டிப்பாக பலன் தரும் என்பதற்கு ஷண்முகம் ஒரு எடுத்துக்காட்டு. ஷண்முகம் ‌ சென்னையில் நல்ல நிலையை எட்டிப் பிடித்தார். ஒரு சிறிய வாகன  தொழிற்சாலை சொந்தமாக துவங்கினார்.

படிப்பை முடித்த கையோடு அண்ணனுக்கு ஒத்தாசையாக சென்னையில் வந்து சேர்ந்தார்கள்‌, தம்பிகள். சில நாட்களில் குடும்பத்தோடு சென்னையில் குடியேறினார்கள்.

சிதம்பரம், பழனி, ஜீவன், ஷண்முகம் உருவாக்கிய நிறுவனத்தில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்‌.

பம்பரம் கூட யாராவது சுற்றி விட்டால் தான் சூழலும். ஆனால்  பம்பரத்தை விட வேகமாக சூழல்பவர்கள் தான் தம்பிகள் மூவரும்.

இரு கை எட்டு  கையாக ஓன்று சேர்ந்தது. ஒரு காணி நிலம் வேண்டும் என‌ உழைக்க  ஆரம்பித்து இன்று தொழில் அதிபர்களாக உயர்ந்தார்கள் நான்கு சகோதரர்கள்.

இதற்கிடையில் ஷண்முகத்திற்கு சொந்த ‌அண்ணன் மகளையும்  சிதம்பரத்திற்கு அசலில் பெண்    பேசி திருமணம்  செய்து முடித்தார் அவர்களின் அம்மா.

கூட்டு குடும்பமாக சென்னையில் குடியேரினார்கள். பெரிய அண்ணனுக்கு பெண் குழந்தையும் சின்ன அண்ணனுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

பழனி, ஜீவன் இருவருக்கும் திருமணம் முடிக்க ஆதிலக்ஷ்மி எடுத்த முயற்சிகள் முயற்சியாகவே போயின.

“பழனி” என, அம்மாவின் குரல் காதில் விழ “என்னம்மா” என்ற பழனியிடம், “இப்படி ஓடி ஓடி என்னடா செய்ய போற.  நம்ம சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்காம்.  மாமா சொன்னார்.  நல்ல படிச்சு இருக்கா. இந்த வாரம் ஊருக்கு போய் பொண்ணு பார்த்திட்டு வந்திடலாமா” என ஆர்வத்தோடு கேட்ட அம்மாவை பார்த்து, அப்புறம் சொல்றேன் மா.‌… என கைப்பேசி பேசி கொண்டே ஓடிவிடுவான்.

“ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது அந்த தாய் மனதிற்கு”.

ஓட்டத்தை மட்டுமே மணமுடித்த கணக்காய் ஷண்முகத்தை மிஞ்சியது அவனுடைய உழைப்பு.  திருமணம் என்பது நினைவில் இல்லாமல் தொழில் தொழில்…..என் ஓடினான். அவன் பின்னே ஜீவனும் ஓடினான்.

“பழனி இந்தா இந்த சீட்டை வண்டியில் போகும் போது படி”, என அம்மா பேசுவதை கேட்க கூட நேரம் இல்லாமல் சீட்டு வாங்கி கொண்டு  ஓடுவான்.

3வது மட்டுமே படித்த அம்மா கொடுத்த சீட்டு வண்டியில் ஏறும் போது பார்த்தால், கிறுக்கல்கள் கண்ணீர் வரவழைக்கும் பழனிக்கு. “கல்யாணம்” என எழுதி இருக்கும்.

ஆதிலக்ஷ்மிக்கு என்ன கவலை என்றால் பழனிக்கு திருமணம் முடித்தால் தானே ஜீவனுக்கு அடுத்து திருமணம் முடிக்க முடியும் என்று.

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்பது கண்டிப்பாக உண்டு ‌ அதுவே இயற்கை தத்துவம் என பெரியார் கூறியது போல அவர்களின் தாயாரும் இயற்கை எய்தினார் கடைசி இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்யாமலே….

அம்மா பொறுப்பில் இருந்த அண்ணன் மனைவி இருவரும் அம்மாவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

ஊரில் இருந்து  திருவிழாவிற்கு அழைப்பு வந்தது.   சொந்த ஊரில் திருவிழா என்றால் கொண்டாட்டம் தானே.

ஷண்முகம்  தன் மொத்த குடும்பத்தோடு ஊருக்கு சென்றார்கள். மாமா வீடு மொத்த உறவுகளின் சங்கமம் ஆனாது.  வந்து இருந்த சொந்தங்கள் இனி இந்த கடைசி இரண்டு பசங்களுக்கு திருமணம் நடக்காது.  பெரியவர்கள் கல்யாணம் முடிந்தவுடன் மாறிவிடுவார்கள் என அரசல் புரசலாக பேசிக் கொண்டது பழனி, ஜீவன் காதில் விழுந்தது. அதுமட்டுமல்ல ஷண்முகம் தான் இந்த சொத்து எல்லாவற்றையும் சம்பாதித்தார். இவர்கள் மூவரும்  ஷண்முகம் உருவாக்கிய நிறுவனத்தை தான் விரிவுபடுத்தினார்கள்.  “மூன்று தம்பிகளுக்கும் நாமம் தான் போட போறான்” என்று பேச்சு வேறு.

ஷண்முகம் காதிலும் விழுந்தது.

“எத்தனையோ வசை சொற்களை கேட்டு வளர்ந்தவன்.  அதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றான். “

திருவிழா மிகவும் சிறப்பாக நடந்தது.  அனைவரிடமும் விடைபெற்று கொண்டு அடுத்த வருடம் திருவிழாவிற்கு அவசியம் வருகிறேன் என சென்னை வந்து சேர்ந்தார்கள்‌.

இரண்டு மாதங்கள் கடந்தது.  பழனிக்கும், ஜீவனுக்கும் திருமணம் என கல்யாண பத்திரிக்கையை ஊர் முழுவதும் வந்து கொடுத்தார்கள் அண்ணன் ஷண்முகமும், சிதம்பரமும்.

இராமன் லக்ஷ்மன்  பாசம் மிகுந்த சகோதரர்கள் என புராணங்களில்  கேட்கிறோம். நிஜத்தில் ஷண்முகம் குடும்பத்தார் தான் ‌பார்கிறோம் என  வசைப்பாடிய வாய் வாழ்த்தி பேசியது.

திருமணம் நல்ல படி முடிந்தது.

திடிரென்று ஒரு நாள் பெரிய அண்ணன் ஷண்முகம் 3 தம்பிகளை அழைத்து  பாகப்பிரிவினை பத்திரம் தயார் செய்து கொடுத்து படிக்கச் சொன்னார்.

மூவரும் எதற்கு அண்ணா இப்போதே என‌ கேட்ட போது. அடுத்த நொடி ஆயிரம் அதிசியங்களை கொண்டது. எழுதி வைப்பதில் தப்பு இல்லை என  சொன்னார் ‌

‌அந்த பத்திரத்தை வைத்து கொண்டு தான் அசைவற்று நின்றுக் கொண்டு இருந்தார்கள் தம்பிகள் மூவரும்.

அனைத்து சொத்துக்களையும் சரியாக நான்கு பங்குகளாக பிரித்து எழுதி வைத்த அண்ணனின் மனசை எப்படி பாராட்டுவது என தெரியாமல்…..

மரம் என்றாலும்,  செடி என்றாலும் அதனுடைய வேர்களை பூமித்தாய் தான் தாங்குகிறாள்.  அதுபோல தான் எங்கள் அண்ணன். “அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்”. என் ஒற்றை சிந்தனையோடு சிந்தித்து கொண்டு இருந்தார்கள் ஷண்முகத்தின் ஆசை தம்பிகள்.

சார் என்னாச்சு, என்ற காயத்திரியின் குரல்  இவர்கள் மூவரையும்  நிகழ்கால நினனவுக்கு திருப்பியது. அண்ணனும் அப்பா தான்.‌…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *