“தமிழர் தாவரங்களும் பண்பாடும்” புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை,
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப
என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது.
உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு ஆக்சிஜன் தோன்றியது என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.
பூமித்தாய்க்கு உயிர் கொடுத்தவைகளே இந்த பச்சிளம் தாவரங்கள் .உலகுக்கு உணவை படைத்து வரும் உயிர் இயந்திரங்கள் ஆன தாவரங்கள் தான்.
சூழியல் ஆர்வம் முன்பை விட தற்போது அதிகரித்து இருக்கிறது .மரக்கன்றுகள் நடுவது அடையாளமாக இருந்தாலும் நம் மண்ணுக்கு உகந்த இயல் தாவரங்களை வளர்த்தெடுக்க வேண்டுமென நமக்கு தெரியப்படுத்துகிறது.
பேராசிரியர் வி.பூரி.விருது (2006), சிறந்த அறிவியல் அறிஞர் விருது (2001), சிறந்த சூழலியல்அறிஞர் விருது (1997-98) போன்ற பல விருதுகளைப் பெற்றபேராசிரியர் கு.வி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் திரு ஆதி. வள்ளியப்பன் அவர்கள் நடத்திய நேர்காணல் புத்தக வடிவில் வந்துள்ளது.
நூலின் அட்டைப்படம் போலவே வார்த்தைகளும் பசுமையாக இருக்கிறது..
தமிழக இயல் தாவரங்களின் சிறப்பு:
உலக அளவில் முக்கியத்துவம் உணரப்பட்ட தமிழ் தாவரங்களில் பன்னெடுங்காலமாக கறி என்ற மிளகுக்காக உலகின் பல பகுதியில் இந்தியாவை நோக்கி வந்தவர்கள் பலர். சந்தனம், தேக்கு ,கருங்காலி இலவங்கப்பட்டை, ஏலக்காய் செங்காந்தள் போன்ற பல மருத்துவ தாவரங்களை சொல்லலாம். இயல் தாவரங்களில் பல இன்றைக்கும் அழியும் தருவாயில் உள்ளது இவற்றில் பல மனித பயன்பாட்டுக்கு இதுவரை உட்படுத்தாதது தான் காரணம்.
பனை நம் மாநில மரம் தமிழகத்தையும் சேர்த்து இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் மட்டும் காணப்படும் மரம் போந்தை என்று அழைக்கப்பட்ட பனையின் பூ சேர மன்னர்களின் சின்னமாக விளங்கியது
பண்டைய இலக்கியத்தில் இதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது காணப்படாதவைக்கு காரணம் தெங்கு என்று அழைக்கப்பட்ட தென்னையின் வரபு தான்.
பனைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அனைத்தும் தென்னைக்கு மாறிவிட்டது. தென்னையை விட பனைக்கு மிக குறைந்த அளவே நீரின் தேவை உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
வேம்பு ,மஞ்சள் உள்ளிட்ட நமது பாரம்பரிய தாவரங்களின் காப்புரிமையை வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்த விவகாரம்:
1991 ஆம் ஆண்டில் பல நாடுகள் அங்கீகாரம் வழங்கிய CBD (Convention on Biologicwl Diversity) அல்லது Rio/ Earth summit)
இறுதி ஒப்பந்தத்தின் படி அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் 1995 முதல் நடைமுறைக்கு வந்தது .
எழுத்து வடிவில் வெளியிடப்படாத அல்லது காப்பரிமை பெறப்படாத எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் கண்டுபிடித்தவரின் உரிமையாகிவிடும் .
அடிப்படையில் வேற்றுநாட்டு காப்பரிமை பெற்ற மஞ்சள் வேம்பு போன்றவற்றின் காப்புரிமைகளை தற்போது இந்திய வசம் மீட்கப்பட்டு விட்டன..
கழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பசுமை எங்கோ வளமை எங்கே என்ற நாடித்துடிப்பை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் இயற்கை தாயை பேணிப் பாதுகாத்து வளரும் சமுதாயத்திற்கு நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இந்நூலை வாசிப்பதால் அறிய பல தகவல்கள் கிடைக்கும். அருமையான நூல்.
நூலின் விவரம்:-
நூல்: தமிழர் தாவரங்களும் பண்பாடும்
நூலாசிரியர் : பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
வெளியிடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹. 50
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் அறிமுகம் எழுதியவர்:-
யாழ்.மாரி
கும்பகோணம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.