Subscribe

Thamizhbooks ad

தங்கேஸ் கவிதைகள்



 

கவிதை 1

யாருக்காக என்று

 

சாலையோரத்து மரங்கள் நிற்பது

தனக்காக என்று நினைப்பான் பயணி

கிளைகளில் அமரும் பறவைகள்

தமக்காக என்று நினைக்கும்

நிழலுக்கு இளைப்பாறும் தெருநாய்கள்

தமக்காகவே என்று நினைக்கும்

தமக்கு எண்ணிக்கையில் ஒன்று அதிகம்

என்று  நினைப்பான்

தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பாளன்

யார் யார் தன்னை தமக்கென்று நினைத்தாலும்

தான் யாருக்காக என்று நினைக்கவே தோன்றாது மரங்களுக்கு

Crow on top of Water Buffalo | House Crow attending to the n… | Flickr

கவிதை 2

பிழைகளைப் பொறுத்துக்கொள்ளும்

பரிவான செவிலியைப்போல

தயங்கி நிற்கிறது பொழுது

வைக்கோலை அசைபோட்ட படியே

வாலை ஆட்டிக்கொண்டு செல்லும்

எருமையின் நடுமுதுகில்

ஒட்டுண்ணியாய் உட்கார்ந்திருக்கிறது

வாழ்க்கை

ஒட்டுண்ணியை கொத்திக் கொண்டுபோகும்

காக்கைகளின் கூர் அலகுகளுக்காக

பரபரத்துக் கொண்டிருக்கின்றன

எருமையின் முதுகுகள்

திடுமென சப்தம் கேட்டுக் கண்விழித்த

தூங்கு மூஞ்சித் தெருக்கள்

இது வழக்கமான மாக்களின் சத்தம் தான் என

மறுபடியும் நெட்டி முறித்துக் கொட்டாவி விடுகின்றன

மூன்று மீன்கள் - இனிது

கவிதை 3

மீன்களின் சுவை தெரியும் யாருக்கும்

நீந்துதலின் சுவை தெரியாது

ஒரு கைப்பிடி நதியை

என் உள்ளங் கைகளுக்குள்

தேக்கி வைத்திருந்த சமயம்

வானமும் கடலும்

கூடிக் களிக்கின்றன

கத கதப்பான மீன்குஞ்சுகளின் செதில்கள்

விரல்களைப் பரிவாய்  உரசிச் செல்கின்றன

நுனி நதியில்  அட்சரம் எழுதிப்போகும்

நீர்ப் பூச்சிகளும்

சுழலில் கிறு கிறு வண்ணம் சுற்றும்

முதிர் சிறகுகளும்

அலை நெளிவுகளில்

புனல் நாட்டியம் பழகும் நீர்ப் பாம்புகளும்

படித்துறையில் வெண்பட்டு விரிக்கும்

நுரைப் பூக்களும்

கரையில் நிற்கும் ஒருவனுக்கு

கடவுள் சாட்சியாய்

நதியைத் தாரை வார்த்துக் கொடுக்கின்றன

 

தங்கேஸ்

தமுஎகச

தேனி

Latest

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது வீடு என்பது எப்போதும் நிரந்தர குடியிருப்பும்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு          (3) தாளமிசைக்கும்  கால்கள் தலையசைக்கும் பயிர் களை பறிப்பவள்...

2 COMMENTS

  1. மூன்றாவது கவிதையில் மனதும் நதியாகிறது…
    என் அன்பு அண்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here