இந்த அற்புதமான அந்தி வானத்தை
தொலைக்காட்சிக்கு பலி கொடுத்தது
எத்தனை அபத்தம்?
ஓஷோவும் லாவோட்ஷும் நீந்திக் குளித்த இந்த மஞ்சள் நதியில் தானே
இந்த செம்பருத்தியும்
ஈரம் படிந்ததலையுடன் குளித்து வந்திருக்கிறது
மனதை சுமந்தலையும் உனக்குத்தான்
ஒரு பில்லியன் டன் பாரம்
எனக்கு?.
கடலை ஒரு மிடறில் உறிஞ்சிக் குடித்து விட நினைத்த
சித்தார்த்தன் தானே புத்தனான்
ஆனாலும் முதலில் மோட்சம் பெற்றது என்னவோ போதி மரம்தான்
சங்கரா சங்கரா சூத்திரர்கள் அவரின்
காலிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்றால்
உழைப்பின் சிறகுகளை மென்மையாக நீவி விடும்
இந்த இருள் காக்கை தரும் பேதமற்றநிழல் ஒன்றே போதும்
மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு
விண்கலத்திற்கும் முன்பே
முதலில் உங்கள் சாதியை அனுப்பி விடாதீர்கள்
தங்கேஸ்

