Subscribe

Thamizhbooks ad

தனியள் – காலத்திற்கேற்ற கவிதை புத்தகம் இது…!

நூலாசிரியர் :

எழுத்தாளர் தி.பரமேசுவரி . இவர் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் , கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழாசிரியராகப் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தமிழக வரலாற்றில் முக்கிய நபராக விளங்கும் ம.பொ.சி. அவர்களின் மகன் வழி பெயர்த்தி . தற்போது அவரது எழுத்துகளை, பத்திரிகைகளை நூலாகத் தொகுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் . இவர் எனது தோழி என்பதிலும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இலக்கியக்களம் (நிகழ்வு-39 ...

எழுத்தாளர் தி.பரமேசுவரி

நூலைப் பற்றி …

கல்கி , அம்ருதா , கருக்கல் , அவள் விகடன் , காக்கைச் சிறகினிலே , யாவரும் .காம் ஆகிய இதழ்களில் வெளிவந்த கவிதைகள் ஒரு தொகுப்பாக “தனியள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஒரு அழகான அணிந்துரை அளித்துள்ளார்.

காலத்திற்கேற்ற புத்தகம் . தனிமைப் படுத்திக் கொண்டு வாழும் இந்த நாட்களில் இந்தத் தனியள் கவிதைத் தொகுப்பின் கவிதைகளை மனதுக்கு நெருக்கமாக வாசிக்க முடிகிறது.

கவிதைகள் நேரடியாகப் புரிந்து கொள்ளும் வகையில் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. மனதில் தமக்குள்ளே பேசிக் கொள்ளும் சூழல்களை நுட்பமாகப் பதிவு செய்கிறார் பரமேசுவரி .

இந்தக் கணத்தில்
என் கதவுகளை இறுக மூடிக் கொள்கிறேன்
சற்றே தொந்தரவு செய்யாமலிருங்கள்
(பக்கம் 11) … என்று தொடங்கும் கவிதை தனித்திருக்கும் பெண்ணின் மன உணர்வை அழகாகப் பதிவு செய்கிறது.

அநாதியான காலத்திலிருந்து தொடங்கிய
ஆதித் தீட்டு முதல்
அண்மைத் தீட்டு வரை
பார்த்தாகி விட்டது பலதையும் (14 ப) .. என்று ஆரம்பிக்கும் கவிதை சமூகத்தின் முகத்தைப் பதிவு செய்வதாகப் பார்க்கிறேன்.

வீட்டுக்குள் புகுந்த நாகமொன்று
தற்செயலாய் எனக்குச் சிநேகமானது (19 ப) என்ற கவிதையின் கற்பனை ..உண்மை என்றே தோன்றுகிறது. இது மட்டுமல்ல .. பல கவிதைகள் உண்மையைக் கூறுவதாகவே எழுதப்பட்டுள்ளது.

பிணம் நான் (106 ப)
கோழை மனம் (109 ப) என முடியும் கவிதைகள் அப்படி ஒரு ஆழம் ,

காதல் உணர்வு , தாயுணர்வு , பெண்களின் மனம் எல்லாமே ஆழமாக சொற்களைச் செதுக்கிச் செதுக்கி எழுதியிருக்கிறார் பரமேசுவரி . சில கவிதைகளைப் படிக்கும் போது செய்யுள் நடையும் பல கவிதைகள் தற்காலக் கவிதை நடையும் தெரிகிறது.

தனியள் பெயரில் தான் தனிமை , கருத்தும் பொருளும் மொத்த மனிதருக்குமானதாகக் கருதுகிறேன். அட்டைப்படத்தில் தனியளைச் சித்தரித்திருப்பது மிகவும் அழகு. ஆனால் அட்டையின் மடிப்பில் உள்ளே எழுதப்பட்டவை படிப்பதற்கு சற்றுக் கடினமாக உள்ளது. நிறம் மிகவும் அடர்வாக இருப்பதால் .அடுத்த முறை மாற்றிவிட்டால் நல்லது .

பிரக்ஞை பதிப்பகம் 2014 இல் வெளியிட்டுள்ளது. பக்கங்கள் 112 , விலை ரூ 99 .

உமா

Latest

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக...

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு பணியாளராக) வேலை செய்து, அங்கு பரவிய தொற்று நோயால் உயிரை இழந்து தான் செய்த பணியை தன் மகன் சுடலைமுத்துவிற்கு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here