Subscribe

Thamizhbooks ad

 கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து..? – நிரஞ்சனா ராஜலட்சுமி (கால்நடை நுண்ணுயிரியலாளர்)

உலகம் முழுதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கோவிட் – 19 நோயை சிறப்பாகக் கையாள்வதற்கான வெவ்வேறு வழிமுறைகளைக் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். எனினும்,  ஒரு திட்டவட்டமான வழிமுறை இன்று வரை கண்டறியப்படவில்லை என்பதே உண்மை. எனவே, இந்த வைரசை நேரடியாக எதிர்கொண்டு செயலிழக்க வைக்கும் வண்ணம் ஒரு மருந்தை உருவாக்குவதே தற்போதைய இலக்காக உள்ளது.

பொதுவாகவே, வைரசுகளுக்கு எதிரான மருந்துகளை உருவாக்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக,  எந்த ஒரு வைரசாய் இருப்பினும், அதனால் தானாக தன்னைப் பெருக்கிக் கொள்ள முடியாது. மனித உடலிலோ, அல்லது விலங்கு உடலிலோ உள்ள உயிருள்ள செல்களின் உதவியுடனேயே அதனால் செயல்பட முடியும். ஆகவே, வைரசுகளுக்கு எதிராகத் தயாரிக்கப்படும் மருந்தானது அவ்வைரசினை மட்டும் தாக்காமல், நமது உடலில் உள்ள செல்களையும் சேர்த்துத் தாக்கக் கூடும்.

இரண்டாவது, ஆண்டிவைரல் மருந்துகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகையில், நாளடைவில் வைரசுகள்  அம்மருந்துகளின் செயல்திறனை தவிர்ப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்கிக் கொள்ளும். இதனால், புதுப்புது வகையான (strain) வைரசுகள் உருவெடுக்கக் கூடும்.

வைரஸ்கள் டி.என்.ஏ அல்லது ஆர்.என். ஏ வை மரபியல் பொருளாகக் கொண்டிருக்கும். பொதுவாக வைரசுகள் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் நிகழ்வில் அவ்வப்போது சில பிழைகள் நேரக் கூடும். இவ்வாறு நேரக்கூடிய பிழைகளே வகைமாற்றம் (mutation) எனப்படும் பிறழ்வு நிகழ்வுகளுக்கு வழி வகுக்கின்றன. டி.என்.ஏ வைரசுகளில் இந்தப் பிறழ்வு நிகழ்வானது சிறிய அளவிலேயே நடக்கின்றது.

காரணம்,  டி.என்.ஏ வைரசுகளில் உள்ள டி.என்.ஏ பாலிமரேஸ் என்னும் நொதி, இவ்வாறு ஏற்படும் பிழைகளைக் கண்டறியும் திறன் கொண்டது. மாறாக, ஆர்.என்.ஏ வைரஸ்களில் உள்ள பாலிமரேஸ் நொதிக்கு இந்தத் திறன் இல்லை. கரோனா வைரஸ் ஆர்.என்.ஏ வைரசாய் இருப்பினும், இந்த விதிமுறையிலிருந்து அது விலகி நிற்கிறது. ஏனெனில், கொரோனா வைரசில் கூடுதலாக எக்சோரைபோநியூக்ளியேஸ் (Exoribonuclease) எனும் பிழைகளை கண்டறியக்கூடிய ஒரு நொதியும் உள்ளது.

சமீபத்தில் கிலியாடு சயின்ஸஸ் எனும் அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனம் ரெம்டெசிவிர் என்னும் மருந்தை  கோவிட் – 19 நோயாளிகளுக்குச் செலுத்தி, அதனை சோதனைக்கு உட்படுத்தி உள்ளது. இந்த சோதனையின் முடிவில் சற்றே சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது.

Image

சார்ஸ் கோ வி 2(SARS Cov 2)  வைரசில் 4 முக்கிய புரதங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஸ்பைக் (spike) எனப்படும் புரதம், வைரசு உடலின் செல்களுக்குள்ளே நுழைவதற்கு வழிவகுக்கின்றது. இந்த ஸ்பைக் புரதமானது செல்களிலுள்ள ஏ.சி.இ. 2 (ACE 2) எனும் நொதியுடன் பிணைந்து கொள்கிறது.  இந்தப் பிணைப்பின் வாயிலாகவே வைரசு செல்களின் உள்ளே முழுமையாகச் சென்றடைகிறது. அதன்பின்பு இந்த வைரசு தனது ஆர்.என்.ஏ. வை வெளியேற்றி தனது பாலிமரேஸ் நொதியைக் கொண்டு அதனை பெருக்கிக் கொள்கிறது. இவ்வாறு புதுப்புது வைரசுகள் உருவாகி அவை அருகில் இருக்கும் மற்ற செல்களை தாக்கிக் கொண்டே செல்கின்றன.

ரெம்டெசிவிர் எனும் இம்மருந்து உடலில் செலுத்தப்படும் முன்பு செயலற்றதாகவே இருக்கும். செலுத்தப்பட்ட பிறகு நமது செல்களிலுள்ள ஒரு சில நொதிகளே இம்மருந்தைச் செயலாக்கி ரெம்டெசிவிர் டிரை பாஸ்பேட் (Remdesivir triphosphate)  ஆக மாற்றும். பொதுவாக, சார்ஸ் கோ வி 2 வைரசின் பெருக்கல் நிகழ்வில் அடினோசைன் டிரை பாஸ்பேட் என்னும் பொருள் உபயோகிக்கப்படும்.

ரெம்டெசிவிர் டிரை பாஸ்பேட் செலுத்தப்பட்ட பிறகு, இந்த வைரசு அடினோசின் டிரை பாஸ்பேட்டுக்கு பதிலாக  ரெம்டெசிவிர் டிரை பாஸ்பேட்டை தன்னுடன் தவறுதலாக இணைத்துக் கொள்கிறது. இந்த மாற்று நிகழ்வு செல்லின் உள்ளே எப்பொழுதும் நிகழும் இடத்தில் நிகழாமல் சிறிது இடைவெளிவிட்டு நிகழ்கிறது. இந்த இடமாற்றத்தால் பிழைகளைக் கண்டறியும் தன்மை கொண்ட எக்ஸோரைபோ நியூக்ளியேஸ் நொதியும் இத்தகைய பிழையுள்ள மாற்று நிகழ்வை கண்டறியத் தவறுகிறது.

இறுதியில், சார்ஸ் கோ வி 2 வைரஸ் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றது.

இது ஒரு புறம் இருந்தாலும், சார்ஸ் கோ வி2 வைரசு, நோயின் தீவிரத்தை  அதிகரிக்கும் வண்ணம் பெருகியிருக்கும் பட்சத்தில், ரெம் டெசிவிர் சிறப்பான முறையில் செயலாற்றுமா என்ற கேள்வி எழுகிறது.

ரெம்டெசிவிர் முதன்முதலில் எபோலா நோயைக் குணப்படுத்தும் நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டது. அது மூன்றாம் கட்டச் சோதனையில் தேர்ச்சி அடையவில்லை எனினும், எபோலா நோயாளிகளில் ஓரளவு நல்ல மாற்றத்தை உண்டாக்கியது.

Image

அண்மையில் அமெரிக்காவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அலர்ஜிக் அண்ட் இன்ஃபெக்சிஷியஸ் டிசீஸஸ், ரெம்டெசிவிரின் செயல்திறனைக் கோவிட் 19 பாதிக்கப்பட்டவர்களில் செலுத்தி சோதனை செய்தது.  சோதனையின் முடிவில் இம் மருந்தின் செயல்திறன் ஓரளவு நம்பிக்கை அளிக்க கூடியதாகவே இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்டிரேஷன் ரெம் டெசிவிருக்கு அவசர ஒப்புதல் அளித்தது. எனினும், இவ்வகை ஒப்புதலை முற்றிலும் முறையான ஒப்புதலாகக் கருதமுடியாது.

சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் ரெம் டெசிவிரின் செயல்திறனைச் சோதனைக்கு உட்படுத்தினர். இச் சோதனையின் முடிவை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட்டனர். ஆனால் இதன் முடிவுகள் அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளுடன் முற்றிலும் முரண்பட்டது. அதாவது, ரெம்டெசிவிர் மருந்து கோவிட் – 19 நோயாளிகளில் மதிக்கத்தக்க அளவில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை எனச் சீனா நடத்திய இந்த ஆய்வு தெரிவித்தது.

ஆகவே,  இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே ரெம்டெசிவிரின் செயல்திறனைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

Image

நிரஞ்சனா ராஜலட்சுமி

கால்நடை நுண்ணுயிரியலாளர்

நன்றி: The Wire Science

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here