கடந்த ஆயிரம் ஆண்டுகளின் ஆகச்சிறந்த சிந்தனையாளர் மாமேதை மார்க்ஸ்..
BBC News நடத்திய கருத்துக் கேட்பு பட்டியலில் மார்க்சுடன் இருந்தவர்கள்..
1. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)
ஜெர்மன் நாட்டை சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர். குவாண்டம் எந்திரவியல், புள்ளியியல் எந்திரவியல், அண்டவியல் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை செய்தவர். ஒளி மின் விளைவு, கோட்பாட்டு இயற்பியல் ஆகிவற்றிற்காக 1921 இல் நோபல் பரிசு பெற்றவர்.
2. சர் ஐசக் நியூட்டன் (Isaac Newton)
ஐசக் நியூட்டனின் இயக்கவியலின் மூன்று விதிகள் வரலாற்றுப் புகழ் பெற்றவையாகும். விசை, இயக்கம் மற்றும் வேகத்தின் தொடர்புகளை விளக்கும் நியூட்டனின் விதிகள் பல்வேறு ஆராய்சிகளுக்கு அடிப்படையானவையாகும். கணிதவியலிலும் பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்ட ஐசக் நியூட்டன் அறிவியல் புரட்சியில் மிக முக்கியமானவர்.
3. சார்லஸ் டார்வின் (Charles Darwin)
உயிரினங்களின் பரிணாமவியல் கோட்பாட்டை முன்வைத்த இயற்கையியல் அறிஞர். உயிரினங்களின் தோற்றம் எனும் அவரது ஆராய்ச்சி நூல் உலகின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான புத்தகமாகும். மனித இனம் என்பது குரங்கு இனத்தோடு தொடர்புடையது என அவர் முன்வைத்த கருத்துக்களை உலகம் எள்ளிய நகையாடிய போதும் அஞ்சாமல் தனது ஆராய்ச்சியின் முடிவுகளை மக்கள் முன் வைத்தவர்.
4. தாமஸ் அக்வினாஸ் (Thomas Aquinas)
இறையியலாளராகவும், தத்துவவாதியாகவும் கருதப்பட்ட செயின்ட் தாமஸ் அக்வினாஸ் கத்தோலிக்க திருச்சபையால் மறைவல்லுநர் (Doctor of the Church) என பட்டம் பெற்றவராவார். மேற்கத்திய உலகின் சிறந்த தத்துவவாதிகளில் தாமஸ் அக்வினாஸ் முக்கியமானவர்.
5. ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)
கருந்துளை கோட்பாடு, அண்டவியலுக்கான கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகிய துறைகளில் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டவர். விரிவடையும் அண்டங்களின் இயல்புகள், கருங்குழி வெப்ப இயக்கவியல் ஆகியவை அவரது முக்கிய ஆராய்ச்சிகளாகும். காலம் எனும் அவரது புத்தகம் உலகின் கவனத்தை ஈர்த்த படைப்பு. ஐன்ஸ்டீன் விருது, வானியல் தங்க பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
6. இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant)
ஐரோப்பிய தத்துவியலாளரான இம்மானுவேல் காண்ட் தத்துவவியலில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். மனித மனம், அறவெறி கோட்பாடு ஆகியவற்றை தனது மேற்கத்திய மெய்யியல் கோட்பாடுகளில் பொருத்தியவர் அவர்.
7. ரெனெ டெஸ்கார்டஸ் (René Descartes)
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மெய்யியல் அறிஞரான இவர் அரசியல், கணிதத்துறை ஆகிய துரைகளிலும் கவனம் செலுத்தியவர். 17 வது நூற்றாண்டு மேற்குலக மெய்யியலாளராக அறியப்பட்ட இவர் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் தாமஸ் அக்வினாஸ் ஆகிய தத்துவியலாளர்களை பின்பற்றிவர்.
8. ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell)
கணிதவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளருமான ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் முன்வைத்த மின்காந்தவியல் கோட்பாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மின்னியல், காந்தவியல், ஒளியியல் ஆகியவற்றின் தொடர்புகள், சமன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த கோட்பாட்டை அவர் உருவாக்கினார். நியூட்டன் முயற்சியின் தொடர்ச்சியாக இயற்பியலில் இரண்டாவது பெரும் முயற்சியாக மேக்ஸ்வெல்லின் மின்காந்தவியல் கோட்பாடு கருதப்படுகிறது.
9. பிரட்ரிக் நீட்ஷே (Friedrich Nietzsche)
ஜெர்மானிய மெய்யியலாளரான நீட்ஷே – மதம், சமகால பண்பாடு, மெய்யியல், அறிவியல் ஆகியவை குறித்து எழுதியுள்ளார். அவரது செல்வாக்கு மெய்யியலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வருகிறது. இருப்பியல் வாதம், பின் நவீனத்துவம் ஆகியவற்றையும் கையாண்டார். உளவியல் சார்ந்தும் அவரது எழுத்துக்கள் ஐரோப்பிய மெய்யியல் துறையில் விவாதிக்கப்பட்டன.
10. காரல் மார்க்ஸ் (Karl Marx)
இதுவரை பலரும் உலகை பல வகைகளில் விளக்கியிருக்கிறார்கள். பிரச்னை என்னவெனில் உலகை விளக்குவதை விட மாற்றுவதே தீர்வு என மானுடத்திற்கான
நம்பிக்கையை அளித்து இயக்கவியல் கோட்பாட்டை சமூக வளர்ச்சியின் விதிகளோடு பொறுத்தியதாலேயே அவர் மாமேதையாக மிளிர்கிறார்.
அறிவியல் கண்டுபிடிப்புகளும் பகுத்தறிவு சிந்தனைகளும் முகிழ்த்து வளர்ந்த 19 ம் நூற்றாண்டின் அறிவொளி காலகட்டத்தில் மார்க்ஸும் ஏங்கெல்சும் உலகிற்கு அளித்த அரசியல் பொருளாதாரம் மனித குலத்திற்கான கொடையாகும்.
வறுமையும் துயரமும் இல்லாத சமத்துவ சமூகம் படைத்திட ஒளிவிளக்காக வழிகாட்டும் ஒரே தத்துவம் ஒப்பற்ற தத்துவம் மார்க்சியம் மட்டுமே. பரவட்டும் பாட்டாளிகளின் தத்துவம்.
எழுதியவர்:
ஆர். பத்ரி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.