கவிதை : பிணத்தின் மனம் (The mind of the corpse) - Pinathin Manam | A Tamil Poetry - https://bookday.in/

கவிதை : பிணத்தின் மனம்

கவிதை : பிணத்தின் மனம்

மனக்கத்தியால்
குத்தி கிழித்த
இதயத்தின் சதைகளை
சரிசெய்து கொண்டிருந்தது
உயிரற்றுபோன கைகள் ,

அகப்பட்ட கைகளில்
துர்நாற்றம் வீசுகிறது
பிணத்தின் இரண்டு விரல்கள்,
மீதிய மூன்று விரல்களும்
பிணத்தின் தலை முடிகளை
சரிசெய்து கொண்டிருந்தது ,

பிணம் சொன்ன
சொற்களையெல்லாம்
காதுகொடுத்து வாங்காமல் அழுதது
அம்மாவின் மனம்,

பிணத்தின் மனம் கூறிய
கடும் சொற்களையெல்லாம்
கண்களை மூடியே
பார்த்துக்கொண்டிருந்தது
அப்பாவின் கருவிழி,

விழிபிதுங்கி
வாசலில் கிடக்கிறதாம்
பிணத்தின் மறுஉருவம்
அனாதையாக

நடுசாம நேர
நாழிகையில் பிணத்தின்
சத்தம் ஊரையே எழுப்பியது
நாய்களின் துணையோடு,

ஊரையெல்லாம்
சுற்றிய கால்களை சுற்றி
படுத்திருக்கிறது
பல பாதங்கள்
தூக்கிக்கொண்டு
போகிற பொழுது
அடம்பிடித்து
அழுதது பிணத்தின் மனம்
மீண்டுமொரு
ஒரு தாய்
மடி வேண்டுமென்று ,

எழுதியவர் : 

ச.சக்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *