பேரழகியின் பேனா…!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

பேரழகியின் பேனா…!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




அந்த கருப்பு நிற பேனாவும்
வெள்ளைப் பேப்பரும்
ஈரக்காற்றிலே மிதக்கின்றன.

மனமெனும் பந்தலில்
அடுக்கி வைக்கப்பட்ட
எழுத்துக்களைச் சுமந்தவாறு,

இரவு முழுவதும்
கண்களில் மேய்ந்து
கொண்டிருந்த
பல எழுத்துக்கள்

கண்களை
திறந்ததும் மறைந்து
கொள்கின்றன
இமைகளென்னும்
கதவுகளுக்கு பின்னே ,

“வானத்திலிருந்து
கீழ் நோக்கி வரும்
மழைத்துளி தரையில்
விழும் பொழுது
பூத்துக் கரைந்து விடுகிறது
கானல் நீராகிய கனவுக்குள்ளே ”

“ஊர்ந்து
செல்லும் கட்டெறும்பு
ஒன்று கருப்பு மையினைத்

தடவியவாறு ஊர்ந்து செல்கிறது
அவள் எழுத முற்பட்ட
எழுத்துக்களை எழுதியவாறு ”

கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *