The Stoning of Soraya M.
2008
(English & Persian)
ஈரானிய மலைக் கிராமம் ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
பிரெஞ்ச் – ஈரானிய பத்திரிக்கையாளர் Freidounne Sahebjam 1990ல் எழுதிய La Femme Lapidee நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இசுலாமிய அடிப்படைவாதியின் ஆணாதிக்க மனோநிலையை உரக்க கேள்வி கேட்கிறது இத்திரைப்படம்.
14 வயது சிறுமியை மணம் முடிக்க நினைக்கும் கணவன், அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்காக தனது மனைவி Soraya வின் மேல் பொய் அவதூறைக் கட்டவிழ்த்துவிடுகிறான்.அதற்கு அந்த ஊர் வழக்கப்படி கிடைக்கும் தண்டனையிலிருந்து Soraya தப்பித்தாளா இல்லையா என்பதே படத்தின் சாராம்சம்.
The Stoning Of Soraya M | Kanopy
எதிர்பாராத சில காட்சிகளால் இப்படம் , முடிவில் நம்மை நிலைகுலைய வைத்து விடுகிறது.
முல்லா & மேயர் என்கிற இரண்டு உயர்மட்ட அதிகாரிகளினால் சந்தர்ப்பவாதமாக சீரழிக்கப்பட்ட பலரின் பிரதிநிதியாக இந்த Soraya M நம் முன்னே கேள்வி கேட்கிறாள்.
எளிமையான திரைமொழியால் அல்லாஹ்வின் பெயரால் எல்லோரையும் உரக்கக் கேள்விகேட்கிறது.
இடையே இப்படியாக ஒரு வசனம் வரும்.
இப்ராஹிம் ஷாஹ்ரா விடம்  : “கணவன் தன் மனைவியின் மேல் குற்றச்சாட்டை வைத்தால் ,மனைவிதான் தன்னை அப்பாவியென நிரூபிக்க வேண்டும்.அதுதான் சட்டம்.அதே போல மனைவி கணவன் மீது குற்றச்சாட்டை வைத்தால் , மனைவிதான் அவனது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பதையும் அதே சட்டம்தான் கூறுகிறது”.
ஷாஹ்ரா இப்ராமை நோக்கி : “சரிதான்.தெளிவாகப் புரிகிறது.எல்லாப் பெண்களும் குற்றவாளிகள்.எல்லா ஆண்களும் நிரபராதிகள்.அதைத் தானே உங்கள் சட்டம் வலியுறுத்துகிறது”
என சாதாரணமாக கடந்து செல்கிற வசனமாக இருந்தாலும் , இதுதான் படத்தின் உயிர்நாடியான அம்சமாக இருந்தது.
இந்தப் படத்தில் அனேக கதாபாத்திரங்கள் இன்றும் நமது குடும்பத்தை சுற்றி உலா வந்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள் !
The Stoning of Soraya M. | Movies, Good movies, I movie
அவசியம் குடும்பத்துடன் காண வேண்டிய படம்.
படத்தைக் காண
– கார்த்திகேயன் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *