Thiruttu ShortStory By Era Kalaiyarasi. இரா.கலையரசியின் திருட்டு குறுங்கதை

திருட்டு குறுங்கதை – இரா.கலையரசி




அந்தக் கூட்டமான பேருந்தில் ஏறி விட்டான் திருடன்.

சிறுசிறு திருட்டுகளில்தான் வாழ்கிறது அவனது வயிறு.

வேலைக்கு பல இடங்களில் முயன்றும் எதுவும் நடக்கவில்லை. மெலிந்த உடலில் ஒட்டிஇருந்த வயிற்றுக்கு அத்தனை பலம் இருக்கிறது.

அதிகரித்த கூட்டம், முன்னும் பின்னும் ஆடும் பேருந்தின் இசைக்கு ஏற்ப, நடனமாடியபடி இருக்கிறது.

பெரியவர், ஒருவரின் அருகில் வந்தான். மெல்ல இரண்டு விரல்களை சுண்டிவிட்டு அந்தப் “பர்சை” லவட்டினான்.

படிகளுக்கு பக்கத்தில் வந்து விட்டான். ஐயோ! பர்சை காணோம்? என் பொண்டாட்டி ஆஸ்பத்திரியில இருக்கா. காசு கட்டலன்னா வீட்டுக்கு கொண்டுபோக சொல்லிட்டாங்கன்னு கதறி அழுதார்.

அவன் மனது என்னவோ நினைத்தது. கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டு நகர்ந்தான்.

கிழே குனிந்து தேடுவது போல். அவர் பர்ஸை தந்தான்.

கைகளை பிடித்த பெரியவர் அவன் கால்களில் விழ போனார்.

வெட்கம் பிடுங்கி தின்றது திருடனுக்கு. மனதின் ஈரம், கண்களை நனைத்தது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *