தெளிவு படுத்தாத சட்டம் – மு தனஞ்செழியன்

Thelivu Paduthatha Sattam Poem M Dhananchezhiyan. தெளிவு படுத்தாத சட்டம் - மு தனஞ்செழியன்




அது ஒரு வினோத
பழக்கம் தான்
தினமும் குளிப்பது.

நிலக்கரி சுரங்கத்தைச்
சுற்றித் திடீரென
உருவாகும் மேடுகளைப் போல
அறையின் மூலையில்
குவிந்து கிடந்தன.

அதற்கெல்லாம் ஒரு எசமானி இருக்கிறாள்
இந்திய அரசியல் அடிப்படைச் சட்டத்தில் கூட
தெளிவு படுத்தாததைக்
கையில் எடுக்கிறாள்
வீட்டார் அனைவரும்
உள்ளாடையை
தனித் தனியாக அணிந்தாலும்
எல்லோர் உள்ளாடையையும்
அவள் மட்டும் துவைக்கிறாள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.