அது ஒரு வினோத
பழக்கம் தான்
தினமும் குளிப்பது.
நிலக்கரி சுரங்கத்தைச்
சுற்றித் திடீரென
உருவாகும் மேடுகளைப் போல
அறையின் மூலையில்
குவிந்து கிடந்தன.
அதற்கெல்லாம் ஒரு எசமானி இருக்கிறாள்
இந்திய அரசியல் அடிப்படைச் சட்டத்தில் கூட
தெளிவு படுத்தாததைக்
கையில் எடுக்கிறாள்
வீட்டார் அனைவரும்
உள்ளாடையை
தனித் தனியாக அணிந்தாலும்
எல்லோர் உள்ளாடையையும்
அவள் மட்டும் துவைக்கிறாள்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
எதார்த்த நிலையில் மறைபொருள் வைத்த எங்கும் நிறைந்திருக்கிற ஒரு பழக்கத்தை கவிதை சுட்டிச் செல்கிறது தாய் எங்கும் எதற்கும் தயாராகவே இல்லத்திற்குள் வாழ்ந்து எல்லாவற்றிலும் கலந்து இருக்கிறார் அதில் ஒன்றுதான் இது இது அவள் கடமை என்பதாக உலகம் அவளை ஒரு காலத்தில் நிர்பந்தப்படுத்தி இருக்கலாம் அதுவே தொடர்கதையாகும் மாறி இருக்கலாம் மற்றொன்று எல்லாவற்றிலும் அவள் பங்கு இருக்க வேண்டும் என்கிற முனைப்பாகவும் இருக்கலாம் குழந்தையின் காலத்தில் அவளே எல்லாமுமாக இருக்கின்றான் காலம் செல்லச் செல்ல அது இயல்பாகி மாற்ற முடியாத ஒன்றாகி விடுகிறது அற்புதமான நுணுக்கமான பார்வையில் கவிதை வெளிப்படுகிறது
நிர்பந்தப்படுத்தப்பட்ட நிலையில் குடும்ப பெண் இதை செய்தாலும் விருப்பப்பட்டு செய்யும் சில கோளாறுகள் கொண்ட பெண்களும் இதில் அடக்கம். நிலக்கரி சுரங்கத்துடன் உவமைப்படுத்தி இருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.
அன்பும் நன்றியும்
ஜெயஸ்ரீ
உங்கள் பெண் இணை என்ன செய்கிறார்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலும் “சும்மா தான் வீட்டில் இருக்கிறாள்” என்ற பதிலுக்கு இந்த கவிதை நல்ல எதிர்வினை… சிறப்பான பதிவு தோழர்.வாழ்த்துகள்💐💐👍