இரவு மூன்று மணி இருக்கும் பின்பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். என்ன என்று கூர்ந்த போதுதான் அது ஒப்பாரியும் அழுகையும் சேர்ந்த சத்தம் என உணர்ந்தேன். அடப்பாவமே என்ன ஆயிற்று முருகேசனுக்கு என்று பதறிப்போனேன்.
முருகேசன் ஒரு பஞ்சு மில்லில் வேலை பார்க்கிறான். அவனது மனைவி மகள் இருவர் இவர்கள் தவிர அந்த வீட்டிற்கு சொந்தம் என்று யாரும் வந்ததில்லை. எப்படி வருவாங்க முருகேசனுக்கு எப்பவுமே சந்தேகம்தான். சொந்தக்காரங்க யாராவது வீட்டுக்கு வந்தா கூட பொண்டாட்டிய பாக்க வந்தாங்கலோனு முருகேசன் நெனச்சுக்குவான். தன் பொண்டாட்டி வாசலில் நின்னு பால் வாங்குறதுக்கு கூட அனுமதிக்க மாட்டான். காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு கோலம் போட்டுட்டு உள்ள போயிடணும் இதுதான் முருகேசன் வீட்டு வழக்கம்.
கடுகு வாங்கக்கூட முருகேசன் தான் போவான் இரண்டு பெண் பிள்ளைகளையும் அப்படித்தான் வளர்த்தான். பிள்ளைங்க ரெண்டும் கல்லூரியில் முதுகலை படிக்கும் போது கூட அந்த இரண்டு பிள்ளைகளையும் கொண்டு போய்விட்டு கூட்டிட்டு வருவான். ஜெராக்ஸ் எடுக்குறதுக்குகூட அவங்க தனியா போனதில்லை.
இப்படித்தான் ஒருநாள் அந்த இரண்டு பிள்ளைகளும் பரீட்சைக்கு எழுத பேப்பர் வாங்கணும்னு தெருவுல இருக்குற கடைக்கு போச்சுங்க. தன்னோட அப்பா வர்றதுக்குள்ளே வந்துடலாம் நினைச்சுதான் அவங்களும் போயிருக்காங்க ஆனா அப்படி நடக்கல. அந்தப் பிள்ளைகள் கடையிலிருந்து சிரிச்சுகிட்டே வந்ததுங்க இதை அந்த வழியா வந்த முருகேசன் பார்க்க வேற வினையே வேணாம். வேகமா வீட்டுக்கு வந்தவன் வீட்டு வாசலிலேயே நின்றுவிட்டான். அந்தப் புள்ளைங்க பயத்தோடு நடந்து வந்துச்சுங்க. அதுங்க நடந்து வர்றதுக்குள்ள இவனுக்கு கோபம் தலைக்கேறி கத்த ஆரம்பிச்சுட்டான். இந்த பிள்ளைங்க வந்ததும் வராததுமாக கோவத்துல பிள்ளைங்கள முடிய பிடிச்சு இழுத்து அடிக்க ஆரம்பிச்சுட்டான். அது அந்த தெருவே வேடிக்கை பார்த்துச்சு. யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் அவ்வளவுதான். அவங்களோட தன் பொண்டாட்டியும் பிள்ளையும் கூட முடிச்சு போட்டு பேச ஆரம்பிச்சுடுவான். முருகேசன் ஒன்னும் அவ்வளவு வசதியானவன் இல்லை. கால் வைத்து கஞ்சிக்கு கஷ்டப்படுகிறான். இந்த கஷ்டமும் கூட அவனாவர வச்சிக்கிட்டதுதான். வேலைக்கு சரியாக போகாமல் தன் பொண்டாட்டி மேலையும் பிள்ளைகளையும் சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு வாழ்க்கையை சூனியம் ஆகிட்டான்.
ஒழுங்கா அவன் வேலைக்கு போய் இருந்தா அவன போல செல்வந்தன் இல்லை. இத்தனை கஷ்டமும் வந்திருக்காது அவன் பொண்டாட்டியும் எதுவும் சொல்லமாட்டாள். சொல்லவும் முடியாது அப்படி மீறி சொன்னா அவ்வளவுதான்.
இப்படித்தான் ஒரு வாரத்திற்கு முன்பு அவன் பொண்டாட்டியை பால் வாங்க வெளிய வந்துட்டா பால்காரன் ஏதோ பேச பக்கத்துவீட்டு பொம்பளை எதோ சொல்ல இவ சிரிச்சிட்டாபோல தூரத்திலிருந்து பார்த்த முருகேசன் அந்த கோவத்துல ஒருஅரை போட்டான். பாருங்க அந்த அரையில் பால் செம்பு பறந்து போயிடுச்சு. பால்காரன் தெறிக்க ஓடிட்டான். முருகேசன் பேசிய பேச்சுக்கு அளவே இல்லை அசிங்கமும் இல்லாமல் பேசினான்.
யாராவது அவன் கிட்ட பேச முடியுமா? யார் கேட்டாலும் பதிலும் வராது.
ஒரு நாலு முருகேசன் பொண்டாட்டிக்கு வைத்து வலிவர ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனா முருகேசன். ஆஸ்பத்திரியில முருகேசன் பொண்டாட்டிக்கு கர்ப்பப்பையை எடுக்கணும் ரொம்ப மோசமா இருக்குன்னு சொல்லிட்டாங்க. இது அவனுக்கு இன்னும் கொஞ்சம் எளக்காரமா போச்சு சரி கடன உடன வாங்கி கர்ப்பபை எடுத்துட்டாங்க.
கர்ப்பபையை எடுத்துட்டு வந்ததுல இருந்து ஒரே சண்டைதான் நீ எதுக்கு உலகிலே உன்னை வச்சு என்ன செய்ய அப்படின்னு ஒரே பேச்சுதான் எப்பவும் இப்படி சொல்லிக் கொண்டே இருப்பான் பாவம்தான் முருகேசன் பொண்டாட்டி.
ஒரு வாரமா உடம்பு சரியில்லாமல் இருந்தான். ஆஸ்பத்திரிக்கு போகவர இருந்தாங்க இன்னைக்கு இறந்துட்டான். என் வீட்டுக்கு பின்னாடி தான் அவனோட வீடு நானும் வீட்ல இருப்பு கொள்ளாம அவன் வீட்டுக்கு சத்தம் கேட்டதும் கிளம்பி வந்துட்டேன். நான் மட்டும்தான் வந்தேன் பக்கத்து வீட்டுக்காரி ஜன்னல் கூட திறக்கலை.
விடியறதுக்குள்ள ஒன்னுரெண்டு பேர் வந்தாங்க பிள்ளைங்க ரெண்டும் கதறி அழுதத பாக்கவே முடியல. எங்களுக்கு இந்த உலகமே தெரியாதே நாங்க எப்படி வாழப் போறோம்னு அழுதுச்சுங்க பாக்கறதுக்கு கஷ்டமா இருந்துச்சு.
எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே நாங்க எப்படி வாழப்போறோம் என்ற வார்த்தைகள் மட்டும் திரும்பத் திரும்ப காதுல கேட்டுக்கிட்டே இருந்துச்சு. வாழுற காலத்துல வீட்டு பொம்பளைகளுக்கு எல்லா உரிமையும் கொடுத்து வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்திருந்தால் இவ்வளவு நலமா மோசமா ஆயிருக்காது.
உலகமே மோசம் ஆண்களை மோசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா வீட்டுக்குள்ளே பூட்டி பூட்டி வச்சா உலகத்தை பற்றி எப்படி தெரிஞ்சுக்கும் பிள்ளைங்க. ஆம்பளைங்களோட சந்தேக புத்திக்கு அளவே இல்லை. ஆம்பளைங்களா அடக்கப்பட்டு அடக்கப்பட்டு பெண்களுடைய திறமைகளை வெளியே வராமலேயே போயிடுது.
என்னமோ போங்க இனிமேலாவது முருகேசன் பொண்டாட்டி சித்ரா. சித்ரா வா வாழ்வாளா என்று பார்ப்போம். முருகேசனை தூக்கிட்டு போன பாதையிலே பூக்கள் கூட முருகேசன் சாவுக்கு வருந்தி வாடல…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.