என் கனவுகள் தழைத்திட
ஒரு துளி நீராவது கிடைத்திடாதா?
நான் துளிர் விட்டு எழ…
கண்ணீரின்றி கதறி அழும்
எனதகத்து தசைகளின் வலிகளை
கவிதையில் கழுவேற்றி களிக்கிறேன்…
பருந்தென வட்டமிட்டு கொத்தும்
செந்நிற சொற்கள் உடைத்து
தன்னம்பிக்கையிட்டு நிரப்புகிறேன்…
துளையற்ற மூங்கிலில் துயரங்களடைத்து
இசையாய் வெளியேற்ற முற்படுகிறேன்
பேறுகால பெரு வலியாய்…
இனி துளிர் விட்டு எழுவேன்….
நம்புங்கள்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

