Subscribe

Thamizhbooks ad

துவண்டு நாடு கிடக்குது | கோவி பால முருகு

  துவண்டு நாடு கிடக்குது!
            (கோவி.பால.முருகு)
அகண்ட பாரத மாதாவுக்கு
    ஆடை அலங்காரம் செய்யுது-இங்கே
புகழும் பாரத மாதாவின்
       புடவைத் துணியை  அவிழ்க்குது!
பாரதத் தேவியைப் பாவிகள்
    பாலியல் துன்பம் பண்ணுது-அட
கோரத் தாண்டவம் ஆடியே
     கொலையும் இங்கே செய்யுது!
ஆர்எஸ்எஸ் கயவர் ஆண்குறி
         ஆயுதமாய் இங்கே ஆகுது!-அட
பாரதத் தேவியைக் கூட
         படுக்கை  மேலே தள்ளுது!
பெண்களை அம்மணம் ஆக்கியே
      பேரின்பம் இங்கே அடையுது!-அட
கண்களாய்ப் போற்றிடும் பெண்களைக்
    காட்சிப் பொருளாய் ஆக்குது!
கோபியர்  கூட்டத்தின் ஆடையைக்
      கொள்ளை அடித்த கூட்டமே-இங்கு
மாபெரும் பாவத்தைச் செய்து
       மானுட நேயத்தை அழிக்குது!
பாஞ்சாலி சேலையை உருவிய
     பாவிகள் ஆட்சி நடக்குது!-இன்று
மாய்ந்தாலும் சேலையை உருவுது
      மதவெறி பிடித்தே  ஆடுது!
பிள்ளையார் கொழுக்கட்டை சிரிக்கிது
    பிரதமர் வாயில் இருக்குது !-இங்கே
தொல்லையின்   ஆட்சி நடக்குது
     துவண்டே  நாடு கிடக்குது!
2
                ஒழிவதே மாட்சி
நிலவுடன் கதிரவன் நெருங்கியே ஆய்வார்
      நித்திரை கொண்டே சாதியால் தேய்வார்!
தலைமுதல் கால்வரை மருத்துவம் ஆய்வார்
      தறிகெட் டறிவின்றி மதத்திலே  சாய்வார்!
ஆயிர மாயிரம் அறிவியல் காண்பார்
      ஆனாலும்  சாதகம் சோதிடம் பார்ப்பார்!
தாயினைப் போற்றும் தன்மை அறிவார்
      தையலர்  உரிமைக்குத் தடையாய் இருப்பார்!
பெண்களின்  ஆற்றலைப்  பேசிக் களிப்பார்
      பெண்சிசு என்றாலே முகத்தைச் சுளிப்பார்!
ஆண்களும் பெண்களும் சமமெனச் சொல்வார்
      ஆதிக்கம் கொண்டே பெண்களை அடைப்பார்
நீதி   நேர்மை  பேச்சில் உரைப்பார்
      நீங்கிட  உண்மை வாழ்வில் துறப்பார்!
பாதியைக் கூட சொல்வதில் செய்யார்
      பார்த்திட   நல்லவர்  போலவே  நடிப்பார்!
மக்கள் நலனைப் பெரிதாய்ப் பேசுவார்
     மதவெறி கொண்டே கலவரம் செய்வார்!
சிக்கலைச் செய்தே நாட்டை அழிப்பார்
     சிந்தனை கொண்டால் சிரசை அறுப்பார்!
பொய்யை  மறைத்துப்   புனிதராய்   வாழ்வார்
      போற்றிடும்  வாய்மை  போற்றா  தழிவார்!
வாயால் வடையைச் சுட்டுத் தருவார்
      வாய்மை அதுவென சொல்லி வருவார்!
நாயின் பிழைப்பே அவருக் காகும்
       நானிலம் தழைக்க இதுவா ஆகும்!
பேயின் ஆட்சி பிணத்தின் காட்சி
       பேரிடர் நீங்க ஒழிவதே மாட்சி!

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்

        நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்

        மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும், சிறிய கதைகள் மூலம் பெரிய செய்திகளை கொண்டு சேர்க்கிறது இந்த புத்தகம்.ஒவ்வொரு கதைகளோடு தொடர்புடைய அழகு ஓவியங்களும் இடம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி

          அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளிட்டிருக்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு தேசம் பற்றிய விழிப்புணர்வு தருவிக்கும் படைப்பாக இது மலர்ந்திருக்கிறது....

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்

        காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய கழிவறை இருக்கை நூல். அப்போது கண்ணில் பட்டு வாங்கியது தான் சாண்ட்விச் நூல். ஆனால் வாசிக்காமல் கிடப்பில் போட்டு தற்போது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here