சிவப்புக் கம்பளங்களை விரித்து
தாய் வீட்டிற்கு அழைக்கின்றன
தார்ச் சாலைகள்
குண்டும் குழியுமான தார்ச் சாலைகள்
குறையாகத் தெரிவதில்லை
நிரம்பிய மனதோடு காத்திருக்கும் அம்மாவின் முன்
அம்மா வீட்டிற்குச் செல்லுகையில்
நெடிய சாலையாகவும்
வீடு திரும்புகையில்
குறுகி இருப்பதும்
ஒரே சாலைகளின்
இரண்டு பிழைகள்!
தகிக்கும் தார்ச் சாலைகள் கூட
சாரல் வீசுகின்றன
தாய் வீடு செல்லும் போது
விடுமுறை முடித்து
வீடு திரும்பும்
வேடந்தாங்கல் பறவைகளுக்குக்
கண்ணீர் வடித்து விடை கூறும்
கானல் நீர் தார்ச் சாலைகள்.
எழுதியவர்
செ.ரா.கிருஷ்ணகுமாரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.