அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள் 

************************************

1.

வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு
பலாக்கனியின் சுவை
என்றும் கிட்டாது.

************************************

2.

‘இவ்வளவுதான் வாழ்க்கை’
எனத் தோன்றும் கணமே
உண்மை வாழ்க்கை துவங்கும்.
அது உன்னதம்.

************************************
3.

இலைகள்
தம் இறுதி யாத்திரைக்கு
தாமே மலராகின்றன.

************************************
4.

கடல் கவிழுமா?
கப்பல் கவிழ்வதற்கே
கவலைப்படுவதா?

************************************
5.

யாரங்கே!
பூட்டிய கதவைத் தட்டலாம்,
திறந்த வீட்டை அணுகவே
சிரமம்.

************************************
6.

வெற்றிக்கு ஒரு கோப்பை,
தோல்விக்கு ஆயிரம் கவிதைகள்!

************************************
7.

சந்தோஷம் சோகம்
வெற்றி தோல்வி
விளையாட்டு சாகசம் –
எல்லாம் கலந்த செய்தித் தொகுப்பை
‘செய்திகள் முடிவடைந்தன’
என அளவான புன்னகையுடன்
துல்லிய நேரத்தில் முடிப்பார்
செய்தியாளர்.

இச்செய்தியை கவிதையாக்கி
ஊடகத் திரையில் கிறுக்கியது
காலத்தின் உடைந்த எழுதுகோல்.

************************************

8.

வெற்றி பெற்றதால்
ஆணவம் கொள்ளாதீர்.
தோற்றவரிடம்தான்
உம் வெற்றி இருக்கிறது.

************************************

9.

குளிரென்றாள் –
சூடாக!

************************************
10.

தன்னைவிடப் பெரிய
தங்கையைத் தூக்க
கை நீட்டும் குழந்தைபோல
உம் இதயத்தைத் தூக்க
இக்கவிதையை நீட்டுகிறேன்,
அன்பே!

************************************

11.

எல்லோரும் சந்தோசமாக
இருக்கும் இடத்தில்
மறைந்துள்ள ஏதோவொரு
சோகம் கண்ணில் படுகிறது.

சோக வீட்டிலும்
ஏதோவொரு உற்சாகம்
மனதினுள் புகுகிறது.

இடம் பொருள் ஏவல்
அறியாது
கவிதை மனம்
அதிகப்படியான
கவலையை நீர்த்துவிடுகிறது.

குறைவான மகிழ்ச்சியை
கெட்டிப்படுத்துகிறது.

குழந்தையும் கவிஞனும்
குணத்தால் ஒன்றென
ஒத்துக்கொள்வது தெய்வக் குற்றமோ??

************************************
12.

உங்களைப்போல்
சந்தோசமாய் இருப்பது எப்படியென
பாடிக்கொண்டிருந்த
பறவையிடம் கேட்டேன்.

சந்தோசமாய் இருப்பது எப்படியென
எங்களைப்போலவே
யோசிக்காமல் இரு
என்றவாறே அகன்றது.

************************************
13.பரவசம்

கோவிலில் கடவுளைப்
பார்த்த கணம் —
என்ன வேண்டுவதென்றே தெரியவில்லை.
மனதிற்குப் பிடித்தவளை
கனவில் சந்தித்த கணம் —
என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
பழைய நண்பனின் குரலை
அலைபேசியில் கேட்ட கணம் —
என்ன உரையாடுவதென்றே தெரியவில்லை.
என்ன செய்வதென்றறியா கணத்தில் தானே
எல்லாமே முழுமையடைகின்றன.
************************************
எழுதியவர்:

✍🏻 – அ.சீனிவாசன்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *