வாகை மரத்தடியில் தூக்கம்
சோகமாய் அமர்ந்திருந்தது!
தூரத்தில் இரவு
செத்துக் கிடந்தது!
தாகம் தேடிய தண்ணீர்
அழுது சோர்ந்த நிலவுக்கு
ஆதரவுக் கரம் நீட்டியது!
மல்லிகை மணமும்
ஜல் ஜல் ஒலியும்
சுதந்திரம் போனதாய் அரற்றின!
அரவான்களும் கோட்டான்களும்
பசியைத் தின்று கொண்டிருந்தன!
சோகம் நிரந்தரமாய்
இரவு காவலாளியிடம்
ஒட்டிக்கொண்டது!
மோகமும் விரக தாபமும்
இச்சையிடம்
கால நீட்டிப்புக் கேட்டன!
இருபத்திநாலு மணிநேரமும்
வேலைசெய்ய மறுத்து
கடவுளிடம் முறையிட்டது பகல்!
கடவுள் என்னைப் பார்த்தார்!
கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறேன் நான்!
– ஜேசு ஞானராஜ், ஜெர்மனி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

