Subscribe

Thamizhbooks ad

நா.வே.அருளின் இரண்டு கவிதைகள்

 

எதிர்காலம்

****************

Article: The future of HR in 2020 — People Matters

 

கடவுள்களின் நூலகத்தில்

சாத்தான்கள்

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

துகிலுரி தாளாமல்

துடிக்கின்றன அம்மணங்கள்

கீழுலகக் குற்றங்களின்

நிரூபிக்கப்படாத குற்றங்களின்

நடமாடும் நிழல்களாய்

அரசியல் கோமாளிகள்

அரிச்சுவடிக் கொலையாளிகள்

சுத்தியல் குற்றவாளிகள்

பிரேதத் தொழிலதிபர்கள்.

புனைபெயர்களில் ஒளிந்து கொண்டிருக்கும்

வழிப்பறிக் கொள்ளையர்களை

அடையாளம் காணாத இலக்கியத்திற்கு

வாழ்வாதாரம் இல்லை.

லென்ஸ்கள் பொருத்தப்படாத கவிதைகள்

இனி

ஜீவிக்கப் போவதில்லை.

வாழ்வின் தரிசனம்

*****************************

வீடு, கல்யாணம், கார் போன்ற ...

தொட்டிலில் கிடத்தப்பட்டபோதே

மரணத்தின் மூங்கில் கழிகள்

தயாராகிவிடுகின்றன.

வாழ்க்கை விரட்ட

ஒவ்வொரு சாலையாய் ஓடியோடி

கடைசியாய்த்

திகைத்து நிற்கும்

முட்டுச் சந்துதான் மரணம்.

வாழ்க்கையின் சாயலை

மரணத்தில்தான் பார்க்க முடியும்.

எப்படியெப்படியோ பார்த்த ஒருவனை

வேறெப்படியும்

வேறெப்போதும்

பார்க்க முடியாத தருணம்தான்

மரணம்.

ஒரே நேரத்தில் ஒரு திருமணம்

ஒரு மரணம்

எனில்

நான் மரண வீட்டிற்குத்தான் போவேன்

யாரோ ஒருவரின் மூடிய கண்களின் வழியே

வாழ்க்கை தரிசனமாகிறது.

நின்று போன அவரது இதயம்

கடந்துகொண்டிருக்கும் காலத்தின்

காலடிச் சப்தமாய்க் கேட்கத் தொடங்குகிறது.

நா.வே.அருள்

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

1 COMMENT

  1. முதல் கவிதை சிற்சில தருணங்களில் நா,காமராசனை நினைவு படுத்துகிறது,
    இருக்கட்டும், பரவாயில்லை,
    ஆயின் நம்பிக்கையை விதைக்க வேண்டிய கடமையும் நமக்கிருப்பதை தள்ளிவிட முடியாது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here