நீதிக்குப்பின் பாசம்
பிரித்து வாசிக்கக் கற்றுக்கொண்டபின் வந்தவர்களின் பரிபாலனத்தில்
ஆலவட்டக்குடைகள் ஆரஞ்சு நிறத்தில்
கண்ணாடிக்குள் பதப்படுத்தி மிதக்கும்
கைகள் நீள வாய்ப்பில்லை
உறுதிப்படுத்திக்கொண்டபின் நீளும் கரங்களில்
ரத்தவாடை
தூக்குக்கயிற்றை
நீட்டிய குற்றரேகைகளை
ரூபாய்த்தாள்கள் கொண்டு துடைத்துக் கொள்கிறார்கள்
இரண்டெழுத்துதானே
நடுங்காமல் உறையில் எழுதப்படுகிறது “நீட்’டாக
உமா மோகன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

