அப்பா
திண்ணையில்
அமர்ந்திருக்கிறார்
அம்மா அடுப்பாங்கரையில்
வெந்து கொண்டிருக்கிறாள்
தூரத்தில் அக்கா விறகுகளை
சுமந்து வந்து கொண்டிருக்கிறாள்
அண்ணன் தன்
தங்கைக்குத் தலை
சீவி விடுகிறான்
கடைசி தம்பி இப்படியான
ஒரு புகைப்படத்தை
பக்கத்து வீட்டின்
சுற்றுச் சுவரில்
வரைந்து கொண்டிருக்கிறான்
வேடிக்கை பார்த்தவாறு
நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்
அப்பாவும் அம்மாவும்
அண்ணனும் அக்காவும்
‘”யார் பெத்த
புள்ளையோ இப்படி
அழகாய் தன்னுடைய
குடும்பத்தை
நேர்த்தியாய் வரைந்து கொண்டிருக்கிறான் ”
யென்றவாறு ,
எழுதியவர்
கவிஞர் ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.