Subscribe

Thamizhbooks ad

கவிதை: வாச்சாத்தி – நா.வே.அருள்

ஷார்ல் போதலேரின்
சபிக்கப்பட்ட இதயம்தான்
என்னுள் துடித்துக் கொண்டிருக்கிறது.

அவன்
மகிழ்ச்சியால்
ஆசீர்வதிக்கப்பட்டவனல்லன்.

“ஓர் அற்புத விடியலுக்கு
தேவதை ஒருத்தி ஒளியூட்ட…”
என்று தன் காதலியைப் பற்றி எழுதிய
ஷார்ல் போதலேர்
“ஒளி, தங்கம், இலவம் பஞ்சால் மட்டுமே ஆன ஒரு ஜீவன்,
பிரம்மாண்டமான சாத்தானை வீழ்த்தக் கண்டேன்”
என்றும் எழுதினான்…..

வனவிலங்குகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை
அதிகாரப் பிசாசுகளால் சீரழிந்து
ஆண்டுக்கணக்கான பின்பு வந்திருக்கும்
வாச்சாத்தித் தீர்ப்பினை
நீதி தேவதை
வசந்தத்தின் மயிலிறகால்
வருடியிருக்கிறாள்.

ஒளி, தங்கம், இலவம் பஞ்சால் மட்டுமே ஆன
பதினெட்டு  ஜீவன்கள்
பிரம்மாண்டமான சாத்தானை வீழ்த்தக் கண்டேனென்று
போதலேருடன் சேர்ந்து நடனமிடுகிறேன் நான்.

நின்றுபோன நுரையீரல்கள்
மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.

ஒவ்வொரு ஆதிவாசியின் இதயத்திற்குள்ளும்
வனவிலங்குகளின் குரல்கள்
எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.

எல்லாம் முடிந்ததென்று
கல்லறைகளுக்குள்
எலும்புக் கூடுகளாகவே மாறிப்போன அவர்கள்
மீண்டும்
கருப்பையிலிருந்து
வெளியில் விழுந்திருக்கிறார்கள்.

சூரியனே அவிந்துபோனதென
நம்பிக்கை இழந்தவர்களுக்கு
சிவப்பு நட்சத்திரம்
ஓர் வழிகாட்டி விளக்காகவே
ஒளிரத் தொடங்கியிருக்கிறது.

ஆதிவாசிப் பெண்களின் குருதியில்
மருதாணி தடவிய
அதிகாரத்தின் பாலுறுப்புகள்
தீர்ப்பின் தீட்சண்யத்தில்
தீய்ந்து போயின.

வருடக் கணக்கில் பருவந்தப்பிய
வாச்சாத்தியில்
மீண்டும் வசந்தம் ….
உலக அதிசயமாய்
முதன் முதலாய்
சிரித்தபடி பிறக்கிறது
ஒரு சின்னக் குழந்தை!

Latest

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

      கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி அளவும் குறைவில்லாமல், ஒவ்வொரு நொடிப்பொழுதும் அழகாகவும், சந்தோஷமாகவும் வாழும் ஒரே இடம் கிராமம் மட்டுமே.நாம் பலபேர் கிராமத்தில் பிறந்து, வேலை...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல் வழக்கு உண்டு. பசியின், பஞ்சத்தின் வலிகள் கூட மனித சமூகத்திற்கு அவ்வளவு சுலபத்தில் புரிந்து விடுவதில்லை. அதை தெளிவாக மனதிற்குள்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக் காணும் போது மட்டும் ஏன் மற்றவர்களை அழைத்துக் காண்பிக்கிறோம் என்ற கேள்விக்கணையோடு தொடங்கி, வானவில்லுக்காக 62 நாடுகள் பயணித்து பல்வேறு...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here