உம்மை
நினைவில் கொள்ளமாட்டோம்
என்றுதானே
இன்றைய நாளை
உங்கள் நினைவு நாளாக
கொடுத்து விட்டீர்?
வலிகளின் நிவாரணம்
உங்கள் வரிகள்;
பொய்களை
பிறருக்காக கவிதையில்
வைத்தீர்…
உண்மைகளை உடைத்து
இதயம் காட்டினீர்….
கவிதையை
எழுதியும், வாசித்தும்
காட்டிய கெட்டிக்கார
வாத்தியாரே…
இன்னும்
கற்றுக்கொள்ள
முயலாதோரெல்லாம்
கவிஞன் என்கின்றார்;
வாலி….
நீங்கள் கவிஞனாக
இல்லாமல் போயிருந்தால்
கவிதையின் வடிவமும் வீச்சும்
இந்நேரம் காணாமல் போயிருக்கும்!
சுவை நிறைந்த சொற்களை
சுவைத்துப் பார்த்து
கனியான கவிதைகளைக்
கொடுத்தக் கவிக்கிளி நீ!
பறந்துதானே போயிருக்கிறாய்?
திரும்ப வருவாய்தானே
தீஞ்சுவை கவிதைக் கனிகளோடு;
கவிஞர்களின் வடிவங்களில்? !
(காவியக் கவிமேதை வாலி விட்டுச்சென்ற வலிமிகுந்த நாள் நினைவாக )
– பாங்கைத் தமிழன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.