வாழ்க்கை : கவிதை - சு.ரசிகா vaazhkai : kavithai by su.rasiga

வாழ்க்கை : கவிதை – சு.ரசிகா


பிறந்தோம் எதற்கு பிறந்தோமென்று மறந்தோம்
வளர்ந்தோம் வயதில் மட்டும் வளர்ந்தோம்
கற்றோம் கையிலுள்ள தாளை மட்டும் கற்றோம்
ஓடினோம் ஓய்வில்லா பிழைப்பை தேடி ஓடினோம்
கூடினோம் குதூகல குடியின் கூட்டத்தில் கூடினோம்
பயந்தோம் பணக்கார பதவியின் பாவிகளை கண்டு
சேர்த்தோம் சுயநல வாழ்விற்கு தங்ககூண்டுகளை
பார்த்தோம் பத்தடி விலகலில் பக்கத்துவீட்டு பிரச்சனையை
உண்டோம் உயர்தர விஷங்களை உணவாக உண்டோம்.
கண்டோம் குருட்டுதனமான தீர்ப்புகளை கண்டோம்
பழகினோம் பயந்தே வாழும் வாழ்க்கைக்கு பழகினோம்
விலகினோம் முன்னோர் விட்டு சென்றவிதிகளில் விலகினோம்
முடித்தோம் முழுஉரை இல்லா வாழ்க்கை புத்தகத்தை
இறந்தோம் எதற்கு பிறந்தோமென்று மறந்தோம்..

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Show 1 Comment

1 Comment

  1. Deenadayalan S

    மிகவும் அருமையான கவிதை…மேலும் பல கவிதைகளை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உங்களின் வாழ்நாள் ரசிகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *