Subscribe

Thamizhbooks ad

வளவ. துரையன் கவிதைகள்

அக்காக்காரி

ஆடுகளைக் கவனமாக

அங்குமிங்கும் பார்த்து

மேய்த்துக் கொண்டிருக்கிறாள்

அக்காக்காரி.

அடிக்கடி ஆடுகளை

எண்ணிச் சரிபார்ப்பாள்.

ஆடொன்று காணோம்

என்று வீடு திரும்பினால்

அப்பா தோலை உரிப்பார்.

அதுவும் புல்லிருக்கும்

இடம்பார்த்து

ஆடுகளின் வயிறு நிறைய

மேய்க்க வேண்டும்.

வேப்பமர நிழலில்

தொங்கும் தூளியில்

தம்பிப் பாப்பாவையும்

ஒரு கண்ணால் கவனமாய்ப்

பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிணுங்கினால் ஆட்ட வேண்டும்.

அம்மா களைஎடுக்க

அவசராமாய்ப் போயிருக்கிறாள்.

அவள் வரும்வரையில் இவன்

அழாமல் இருக்க வேண்டும்.

ஏகப்பட்ட கவலைகள்.

இவற்றுக்கிடையே

ஒரே ஒரு மகிழ்ச்சி.

அதோ வருகிறதே

ரயில் வண்டி

அதைபார்த்துக்

கை ஆட்டுவதுதான்.

 

எப்படி

காலையில் பார்க்கும்

செய்திகளிலெல்லாம்

காட்சி தருவன

களவும் கற்பழிப்பும்தான்.

குளியலறையிலோ

புழுக்களும் பூச்சிகளும்

சிற்றுண்டி உண்ணும்

சிறிது நேரத்தில் கூட

சிணுங்கும் கைப்பேசியில்

மேலாளரின் கண்டிப்பு.

அலுவலகத்திலோ அன்றைய

மதிய உணவு நேரத்தில்

மாயக் குரல்களும்

மர்ம வலைகளும்.

வயலில் உழுது

களைத்த காளையாய்

இல்லம் திரும்புகையில்

இறுகிப் போகிறது

என் மனம்.

என் மழலைகளையும்

என்னவளையும்

எப்படி அணைத்து

இறும்பூதெய்துவேன்?

எப்பொழுது?

மொட்டை மாடிக்குச்

சென்று பார்த்தேன்.

நிலவு தனித்திருந்தது.

தோட்டத்துக்குப் போனால்

செம்பருத்தி சோகமுடன்

சிவந்திருந்தது.

தவிட்டுக்குருவிகள்

தாவித் தாவி தேடின.

அணில்களும் குறுகுறுவென்று

அங்குமிங்கும்

ஓடிக்கொண்டிருந்தன.

கன்றுக்குட்டியின்

கண்களில் ஏக்கம்

சொல் கண்ணே!

எப்பொழுது வரப் போகிறாய்?

காகம்

தாழ்ந்த மரக்கிளையில்

உட்கார்ந்துகொண்டு

வைத்த கண் வாங்காமல்

பார்த்துக் கொண்டிருக்கிறது

அந்தக் காகம்

சோற்றுருண்டையை.

அது கரையாமல்

கரைந்துண்ண விரும்புகிறது.

ஆனால்

வைத்தவனோ புரியாமல்

‘கா’ ’கா’ எனக் கரைந்து

அதைக் கலவரப்படுத்துகிறான்.

காகம் மனத்தில் அழுதுகொண்டே

ஓரக் கண்ணால்

முறைத்துப் பார்க்கிறது.

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here