வருகை மேகம் – கவிதை
நீ ஊர் வரும்போது
ஒரு மழை நாளாக இருக்க வேண்டும்
ஆனால் மழை கூடாது..
தார்ச் சாலையெல்லாம்
பொன் கொன்றைப் பூக்கள் படுக்கையாகி விடவேண்டும்
தேநீர்க் கோப்பைகளில்
சர்க்கரை சேர்க்காமல்
சொல்லி வை
ஒரு மிடறு நீ குடித்துக் கொடுத்தால் போதும்
உன் வருகைக்குக் காத்திருக்கும் நொடிகள்
கடிகார முட்கள்…
என்ன பேசுவது
ஏது பேசுவது
தெரியாது
கண் பார்த்தும் பேசுவேன்..
இணையம் விடுமுறை
அலைபேசி அழைப்புகள் அணைக்கப்படும்
எல்லா காட்சிகளும் மறைந்துபோய்
உன் முகம் மட்டும் விழித்திரையில் ஓடும்
அன்று வெயில் நாளாக இருந்தாலும் பரவாயில்லை
குடை வாங்கி வருவேன்
வருவது மேகம் அல்லவா.
எழுதியவர்:
ஆஸ்பான் இனியன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நன்றி