வா என் அருமை வறுமையோ வா
என்னைத் தீண்டிச் செல்ல வா

உன்ன உணவும்
உடுத்த உடையும் இல்லை வா
இருக்க இடமும் இல்லை
உன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வா

கல்வியும் இல்லை
கனவுகளும் இல்லை
என்னை மீண்டும் மீண்டும்
தீண்டிச் செல்ல வா

என் வருமையைப் பற்றி
வாய்விட்டுப் பேச வயசும் இல்லை
வளர்ந்தபின் கேட்டால் அதிகார தொல்லை வா

சாலை ஓரம் உறங்குகிறேன் விடிவதற்குள் வா
விழித்துக்கொண்டால் சந்திப்போம்…

-வெ.நேரேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *