தேனுறுஞ்சப்படும்போது மலர்கள்
மௌனிக்குமே தவிர
மரணமடையா;
தேன்கூடு ஆபத்துறும்போது
தேனீக்கள் மரணமெனினும்
மௌனமாகா;
மௌனத்தால் நேராத மரணம்(1),
மரணத்தால் நேராத மௌனம்(2),
இந்த இரண்டு வகையுமின்றி
சமுதாயத்தின் மௌனம் சிலரை
மரணிக்கவே வைத்துவிடுகின்றது.
கிளைமுறியும்போது கூடு
இழக்கும் பறவைகளை மரம்
ஒதுக்குவதில்லை;
அடியோடுமுறியும்போது வேர்
இழக்கும் மரத்தில் பறவைகள்
தங்குவதில்லை;
மரத்தால் ஒதுக்கப்படாத பறவைகள்(1),
பறவைகளால் தங்கமுடியாத மரம்(2),
இந்த இரண்டு வகையுமின்றி
சமுதாயத்தின் உயிர்க்கூடுகள்
சிலரின் ஈரவேர்களில்தானே
இருக்கின்றன.
யார் அந்தச் சிலர்?
வேறு மனிதர்களா?
இல்லை,
வேர்மனிதர்களான
விவசாயத் தொழிலாளிகள்தான்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.