வெதநெல்லு போட்டாச்சு
வெதச்ச நெல்லு நாத்தாச்சு
நாளுகெழம பாத்தாச்சு
நடவு நட தோதாச்சு
நாலு பேரு வந்தாக
நாத்துநட்டுப் போனாக
துட்டுப்பான காசாச்சு
களபறிக்க நாளாச்சு
பூச்சிக்கொல்லி தெளிச்சாச்சு
புளிச்ச தண்ணி சோறாச்சு
பூத்த நாத்து கருதாச்சு
ஊத்து தண்ணி கொறஞ்சாச்சு
ஆடுகன்ன வித்த காசில்
வண்டித் தண்ணி வாங்கியாச்சு
சூரியனின் தாகம் தீக்க
கெணத்துத் தண்ணி வானம்போச்சு
வட்டிக்குமேல் வட்டியாச்சு
வயலவச்சும் வாங்கியாச்சு
வண்டிகளா வந்தாச்சு
வயலறுத்துப் போயாச்சு
ஏரு ரெண்டு துண்டாச்சு
இருந்த பணம் கரைஞ்சாச்சு
எங்க ஊரு சாதிசனம்
எல்லதாண்டி போயாச்சு
அரசாங்கம் வெலவச்சு
அறுத்த நெல்ல கேட்டிருச்சு
கொலகார வயித்துப்பசி
கொடுக்குறத வாங்குனுச்சு
வயலுல போட்ட பணம்
வட்டியசல் கழிச்சிருச்சு
வெதச்ச நெல்லு
வெதநெல்லா
வீடு வந்து சேந்திருச்சு
ஒழச்சதுக்குக் கூலியில்ல
ஒலவைக்க ஒன்னுமில்ல
ஒதட்டுல சோகமில்ல
ஒட்டிய வயித்துல
கட்டிய ஈரத்துணி
கண்ணீரு விட்டழுதே
என்னனு எடுத்துச்சொல்ல
சிவபஞ்சவன்
முகவரி:
202/6 வடக்குத் தெரு,
சிவகாமியபுரம்,
எஸ்.ரமலிங்காபுரம், (த)
இராஜபாளையம், (வட்டம்),
விருதுநகர் மாவட்டம்.
பின்கோடு 626102.
செல்:80569 32253
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

