வெற்றிட கருப்பையில் உருவாகி
வெற்றிட சுவர்களுக்கு இடையில்
வெற்றிடம் விதைத்தறுத்து
வெற்றிட வயிற்றை நிரப்பி
வெற்றிட சுற்றத்தில்
வெற்றிட நிலத்தில் வசித்து
வெற்றிடக்காற்று நிறைந்த
வெற்றிடமெல்லாம் நமதென
நமதையே நாம் நிறைக்க
வெற்றிட மதிப்பறியா
உடல் விட்டு வெளியேறும்
உயிரெனும் வெற்றிடம்!!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

