யானை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!
குதிரை மீது சவாரி சென்றாள்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!
ஒட்டகத்தின் மீது சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில்
புன்னகை!
மனிதரோடு சவாரி சென்றாள் சிறுமி
சவாரி முடிந்தது
பக்கத்து தெருவின்
குப்பை தொட்டியில்
சவமாய்க் கிடந்தாள்
சிறுமி!
“மனித குணம் மாறாதா?”
பிராத்தனை செய்தன
வன விலங்குகள்.
திருமதி. சாந்தி சரவணன்
9884467730
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.