“என்னய்யா வேலைய பாக்க சொன்னா உட்காந்துகிட்டே தூங்குற….”
“என்னய்யா இது, நீ எனக்கு முன்னாடி சேர் போட்டு உட்காந்துட்டு இருக்க…”
“யோவ் நீ வேலை பாத்த லட்சணம் போதும், போய் எல்லார்க்கும் டீ வாங்கிட்டு வா…”
“என்னய்யா நீ வேல பாக்கற லட்சணம்….ஆபிசுல அவ்ளோ மண்ணு… அத சுத்தம் பண்ண என்னயா உனக்கு…நீ் என்ன கலக்டர் வேல பாக்கிறதா நெனப்பா…”
“யோவ் வாட்ச்மேன், அந்த நேம் ரிஜிஸ்டர் எங்கயா….!”
“என்னயா நீ வேல பாக்ர..ஒரு டீ வாங்கிட்டு வர இவ்ளோ நேரமா…அதுல சூடில்ல ..சொரண இல்ல…உனக்கு சுகர்னா நாங்களும் சாப்டக் கூடாதா என்ன…!”
“ஓடிப் போய் கேட் திறய்யா, டைம் ஆயிட்டு…. இதுக்குதா வயசானவங்கள வேலைக்கு வைக்கக் கூடாதுன்றது ….”
“என்னயா இது பேனா எழுதமாட்டங்குது..ஒரு பேனா கூட வாங்கி வைக்க மாட்டியாயா…!”
“யோவ் இன்னக்கு ஆபிசர்லாம் வருவாங்க, அந்த சானிடைசர் எங்கயா…என்னய்யா முழிக்கிற கைல ஊத்தி துடைப்பாங்கள்ள .. அந்த பாட்டில் எடுத்து வை…போய்யா….”
“அந்த மூஞ்சில போடுறத ஒழுங்கா போடு..இவனுங்க வேர கழுத்தறுக்குறானுங்க…”
“என்னய்யா புது ட்ரஸ்லாம் போட்டுக்கிட்டு அமர்க்களமா நிக்கிற…. சம்பளம் வாங்கியாச்சா..பெரிய ஆளுதான்யா, சும்மா நின்னுகிட்டே சம்பாதிக்கிற கஸ்டமில்லாம….!”
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.